செவ்வாய், 27 அக்டோபர், 2009

மோடியை நாங்கள் அழைக்கவில்லை!- ஓமன் தூதரகம் விளக்கம்


ஓமனின் ஷோகர் சிட்டி சம்பந்தமான திட்டப் பணிக்கு குஜராத் முதல்வர் ந(ர)ரேந்திர மோடியை ஓமனின் தொழிற்த்துறை அமைச்சர் மஃஹ்புல் அலி சுல்தான் செப்டம்பர்9 அன்று காந்திநகர் வந்தபோது அழைப்பு விடுத்ததாகவும் அதனை ஏற்று மோடி அக்டோபர் மாதம் ஓமனுக்கு செல்லவிருப்பதாகவும் குஜராத் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
ஈவு இறக்கம்,மனிதாபிமானம் இல்லாத இந்நூற்றண்டின் இன வெறியனை அமெரிக்கா,இங்கிலாந்து போன்ற நாடுகளே தங்கள் நாட்டிற்குள் நுழைய அனுமதி வழங்கவில்லை.

ஆனால் ஓமன் (அரேபிய உறுப்பு நாடுகளில் ஒன்று) மோடிக்கு அழைப்பு விடுத்தது தொடர்பான செய்தியால் மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் உலகின் பல்வேறு நாட்டு மக்களின் கடும் கண்டனம் மற்றும் எதிர்ப்புக்கு உள்ளாகியது.
இந்நிலையில் நேற்று முன் தினம் டெல்லியிலுள்ள ஓமன் தூதரகம் தி ஹிந்து நாளிதழில் வெளியிட்ட அறிக்கை செய்தியொன்றில் ஓமன் ஒருபோதும் மோடியை அழைக்கவில்லை. 'Dutch Norterdam' என்ற நிறுவனத்திற்கும் குஜராத் அரசிற்கும் திட்டப் பணி சம்பந்தமாக ஒப்பந்தம் இருப்பதாகவும் இதனால் தான் அவர் அங்கு வருவதாகவும், ஓமன் ஒருபோதும் மோடியை ஒரு விருந்தாளியாக அழைக்கவில்லை என்றும் செய்தி வெளியிட்டுள்ளது.
source:twocircles

1 கருத்து:

R.Alamsha Karnan சொன்னது…

I like your blogs. You can visit my blogsite also.
http://alamsha.sulekha.com/blog/posts.htm