சனி, 3 அக்டோபர், 2009

எதிர்காலத்தில் ஆல்கஹால் இல்லாத மருந்துகள்!

நைஜீரியாவின் முஸ்லிம் மருந்தாளர்கள் கூட்டமைப்பு மருந்துகளிலுள்ள ஆல்கஹால் (மது ) சேர்க்கையை அகற்ற முடிவு செய்துள்ளதாக அந்நாட்டின் தேசிய மருந்தாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் அல்ஹாஜ் ஹாருன் அழியு தெரிவித்துள்ளார் .

இது பற்றி அவர் கூறுகையில்,"முஸ்லிம்களுக்கு ஆல்கஹால் இல்லாத மருந்துகளை உட்கொள்வதற்கான நேரம் வந்து விட்டது என்று அவர் கூறினார். மேலும் இஸ்லாமியர்கள் மது உட்கொள்ள கூடாது என்றும் ஆனால் அறிவியல் ரீதியாக அவர்கள் பயன்படுத்தும் மருந்துகளில் மது கலந்திருக்கின்றது. இதனால் இஸ்லாத்தின் போதனைகளை மனதில் கொண்டு ஒரு அறிவியல் குழு அமைக்கப்பட்டுள்ளது. இது மருந்துகளில் மதுவிற்கு பதிலாக ஒரு நல்ல மாற்றுப் பொருளை கண்டுபிடிக்கும்" என்று கூறினார்.

"மேலும் பல இளைஞர்கள் இருமல் மருந்தை தவறாக பயன்படுத்துகிறார்கள், இது உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனை. இதுபோன்ற தவறான பயன்பாட்டை தடுக்க திட்டங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன" என்று தெரிவித்தார்.

"தற்பொழுது நாம் பயன்படுத்தும் இருமல் மருந்திற்கு பதிலாக வேறு மருந்துகளை அறிமுகப்படுத்த இருக்கின்றோம். இது, இந்த மருந்துகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்கும்" என்று தெரிவித்தார்.

மேலும் நைஜீரியாவின் மருத்துவமனைகளில் மருந்துக்கு பணமில்லாமல் கஷ்டப்படும் நோயாளிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

நன்றி,
ABNA.

கருத்துகள் இல்லை: