
1992ல் உ.பி. மாநிலம் பைசாபாத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் குண்டு வெடித்தது. இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 2, 1992ல் கேரளாவில் முழு அடைப்பிற்கு இஸ்லாமிக் சேவக் சங் (ஐ.எஸ்.எஸ்.) அமைப்பு அழைப்பு விடுத்திருந்தது. முழு அடைப்பின் போது தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடைப்பட்டது. அடைப்பின் போது ஏற்பட்ட கலவரத்தில் பல காவலர்கள் காயமடைந்தனர். முழு அடைப்பின் போது ஒச்சராவில் உள்ள பள்ளிவாசலுக்கு வந்த அப்துன் நாஸர் மாதனி தான் வன்முறையை துண்டினார் என்று அவர் மீது காவல்துறை வழக்கு பதிவுச் செய்தது. முழு அடைப்பின் போது காவல்துறை வாகனங்களுக்கும், அரசு பேரூந்துகளுக்கும் பலத்த சேதங்கள் ஏற்பட்டன என்றும் காவல்துறை கூட்டத்தை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளை கூட பயன்படுத்தவில்லை என்றும் வானத்தை நோக்கி மட்டும் சுட்;டதாகவும் காவல் தரப்பில் வாதிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக