சனி, 3 அக்டோபர், 2009

பெர்லின் மாணவருக்கு பள்ளிக்கூடத்தில் தொழுகை நடத்த அனுமதி

பெர்லின்:
பெர்லின் மாணவர் ஒருவருக்கு பள்ளிக்கூடத்தில் தொழுகை நடத்த அந்நாட்டு நீதி மன்றம் அனுமதி அளித்துள்ளது.

16 வயது மாணவர் ஒருவர் தொடுத்த புகாரை விசாரித்த பெர்லின் நிர்வாக நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

கடந்த வருடம் இந்த நீதி மன்றம் ஒரு மாணவருக்கு பள்ளிக்கூடத்தின் இடைவேளைகளில் தொழுகை நடத்த அனுமதியளித்தது.

கல்வி அதிகாரிகள் நீதி மன்றத்தின் இந்த தீர்ப்பிற்கு அதிருப்தியை தெரிவித்துள்ளனர். இந்த தீர்ப்பு கல்வி நிறுவனங்களின் மத சார்பின்மையை பாதிக்கும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

நீதிபதி இது பற்றி கூறுகையில், "தொழுகை பள்ளிக்கூடத்தின் செயல்பாடுகளில் குறுக்கிடாது என்றும் இது ஒருவரின் மத சுதந்திரத்தின் உரிமை" என்றும் கூறினார்.

நன்றி
ABNA

கருத்துகள் இல்லை: