எகிப்தில் இது போன்று அவ்வப்போது இஹ்வான்கள் கைது செய்யப்படுவது வழக்கமாகி வருகிறது. இஹ்வான்களில் ஒருவரான முஹம்மத் ஹபீப் இது பற்றி கூறுகையில், "அடுத்த வருடம் வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் இஹ்வான்கள் போட்டியிடுவதை தவிர்க்கவே இது போன்ற கைது நடவடிக்கைகளை எகிப்திய அரசு மேற்கொண்டு வருகின்றது. இது இஹ்வான்களையும் எகிப்திய அரசியலையும் பிரிப்பதற்கான முயற்சி" என்று ஹபீப் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், "இதுவரை மட்டும் இதுபோன்று மொத்தம் 250 இஹ்வான்கள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். அதில் சிலபேர் விசாரணை கைதிகளாகவும் சிலர் தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில் கைது செய்யப்படிருப்பதாகவும்" அவர் கூறினார்.
படம்: இஹ்வானுல் முஸ்லிமீனின் முத்திரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக