வியாழன், 10 செப்டம்பர், 2009

கணக்கு தெரியாத இஸ்ரேல்

இஸ்ரேலிய மனித உரிமை அமைப்பு ஒன்று, 22 நாட்கள் இஸ்ரேல் அநியாயமாக பாலஸ்தீன் மீது நடத்திய ஆக்கிரமிப்பு தாக்குதலில் பலியானவர்களில் பாதிக்கும் மேலானோர் அப்பாவிப் பொதுமக்களே என்று கூறியுள்ளது. தற்பொழுது கிடைத்துள்ள தகவலின் படி, இஸ்ரேல் தாக்குதலின் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் போராளிகள் என்று கூறியது பொய் என்று தெரிய வந்துள்ளது.

B'Tselem என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், 1387 பாலஸ்தீனியர்கள் இந்த ஆக்கிரமிப்பு தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். அதில் 773 பேர் அப்பாவிப் பொது மக்கள் என்றும், 330 பேர் போராளிகள் என்றும், 248 பேர் காவல்துறையினர் என்றும் 36 பேர் போராளிகளா இல்லை பொதுமக்களா என்று அடையாளம் தெரியவில்லை என்றும் கூறியுள்ளது.

அந்த அறிக்கை மேலும் கூறுகையில், கொல்லப்பட்டவர்களில் 320 பேர் 18 வயதிற்கு குறைவான சிறுவர்கள் என்றும் கூறியுள்ளது.

இஸ்ரேலிய அதிகாரிகளின் அறிக்கையின்படி 1166 பேர் இஸ்ரேல் தாக்குதல் நடத்த முயன்ற போது கொல்லப்பட்டதாகவும், அதில் 709 பேர் போராளிகள் எனவும், 295 பொதுமக்கள் என்றும், 162 பேர் யார் என்று தெரியவில்லை என்றும் கூறியுள்ளது.

தற்பொழுது B'Tselem வெளிட்டுள்ள அறிக்கையைப் பற்றி இஸ்ரேல் அதிகாரிகளிடம் கேட்டதிற்கு அவர்கள் அதனை மறுத்துள்ளனர். B'Tselem ன் கணக்கெடுப்பு தவறானது என்றும் அது வலையுலக தகவலை வைத்து இந்த முடிவிற்கு வந்ததாக கூறியுள்ளனர்.

இதனை மறுத்த B'Tselem, அது காசாவின் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று பாதிக்கப்பட்டவர்களிடம் வாக்குமூலம் பெற்று இந்த அறிக்கையை தயார் செய்ததாக கூறியுள்ளது. அது மேலும் இஸ்ரேலிய அரசை இது தொடர்பான சுதந்திரமான விசாரணையை தொடங்க கேட்டுக்கொண்டுள்ளது.

இஸ்ரேலிய அதிகாரிகள் கூறியதாவது, இந்த தாக்குதலின் போது இஸ்ரேல் சர்வதேச சட்டம் ஒழுங்கை பேணி நடந்தது என்று கூறியுள்ளனர். (இந்த ஆக்ரமிப்பு தாக்குதலில் இஸ்ரேல் நடத்திய அத்துமீறல்கள் நாம் அனைவரும் அறிந்ததே....)

இஸ்ரேலின் இந்த மனித உரிமை மீறல்களைப் பற்றி இஸ்ரேலிய

கருத்துகள் இல்லை: