இந்தியர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்தியர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 3 ஜூன், 2014

இந்தியர்களின் நேரத்தை வீண்ணடித்த நரேந்திரமோடி







இந்தியர்களின் நேரத்தை வீண்ணடித்த நரேந்திரமோடி..!
நரேந்திரமோடி எப்படி இந்தியர்களின் நேரத்தை வீண்ணடித்தார் என கேட்கிறீர்களா?
தேர்தலுக்கு முன்பு வரை ஒரு பெரிய லிஸ்ட்யை தாயார் செய்து அதை சமூக வலை தளங்களிலும், தனது தேர்தல் அறிக்கையிலும் வெளியிட்டார்.
அதாவது, இந்தியா பொருளாதரத்தில் முன்னேற வேண்டுமானால் நாம் அந்நிய நாட்டு பொருட்களை பயன்படுத்தாமல் இந்திய தயாரிப்புகளையே பயன்படுத்த வேண்டும் என கூறிவந்தார்.
அதற்காக ஒரு பெரிய லிஸ்ட்-யை தயார் செய்து சமூக வலைதளங்களில் பரவ செய்தார்.
ஆனால் தற்பொழுது நரேந்திர மோடி அவர் சொன்ன சொல்லை அவராலேயே பின்பற்ற முடியவில்லை. அதற்காக நேரத்தை ஒதுக்கி படித்த மக்கள் அனைவரின் நேரத்தை வீண்ணடித்து முட்டாள் ஆக்கியுள்ளார்.
தான் பிரதமர் ஆனா பின்பு ஏற்கனவே பயன்படுத்தி வந்த இந்திய தயாரிப்பான ஸ்கார்பியோ காரை விட்டு விட்டு அந்நிய தயாரிப்பான BMW காரை பயன்படுத்த துவங்கியுள்ளார்.
அதே தொழில்நுட்பத்தில் நாங்கள் காரை உருவாக்கி தருகிறோம் என மகேந்திரா நிறுவனம் எவ்வளவோ எடுத்துக்கூறியும் மோடி அதனை ஏற்க மறுத்துள்ளார் என்பது உங்களுக்கு தெரியுமா?
அவர் தயாரித்து அனுப்பிய லிஸ்ட்-யை நீங்களே படித்து பாருங்கள் உங்களுக்கு புரியும். பதவி வந்த உடன் சொன்னைதை மறந்து விடுவார்கள் என்பது நரேந்திர மோடியின் விசயத்திலும் பொருந்தியுள்ளது.
I am Naredra Modi
PLEASE SHARE it with everyone and with all your groups ..
- अगर सभी भारतीय 90 दिन तक कोई भी विदेशी सामान नहीं ख़रीदे..
तो भारत दुनिया का दूसरा सबसे अमीर देश बन सकता है..
सिर्फ 90 दिन में ही भारत के
2 रुपये 1 डॉलर के बराबर हो जायेंगे..
हम सबको मिल कर
ये कोशिश आजमानी चाहिए
क्युकी ये देश हमारा है...!!!!
plz share & aap bhi sahyog kare
Plz frwd this msg to all groups and say
Is desh me rahena he to jag jao
In 1970 1$ = Rs. 4
Today 1$ = Rs. 68
Estimated 1$ by end of the year = Rs. 72
Dollar is not getting stronger, rupee is getting weaker!
&
nobody else is responsible for d fall, except us!
How can we change it!
1. A Cold Drink produced for 70-80 paisa sold at Rs. 9-10!
Stop drinking them,
Drink Lemon juice, Lassi, Fruit juice, butter milk etc. instead of coke, pepsi.
========================
2. Use Soaps such as Cinthol, Santoor,Medimix, Neem, Godrej brands
instead of :-
Lux,lifebuoy, rexona, liril, dove, pears, hamam,camay, palmolive!
========================
3. Toothpaste-
Use Neem, babool, vicco, dabur
Instead of :-
Colgate,close up,pepsodent, cibaca
========================
4. Toothbrush :-
Use prudent, ajanta,promise, instead of :-
colgate, close up, oral-b, pepsodent,forhans.
========================
5. Shaving cream:-
Use godrej, emami,
Instead of :-
Palmolive,old spice, gillete.
========================
6. Blade-
Use supermax, topaz, laser, ashoka
Instead of :-
Seven-o-clock, 365, gillete
========================
7. Talcum powder:-
Use santoor, gokul,cinthol, boroplus
Instead of :-
ponds, old spice, johnson,shower
to shower.
========================
8. Milk powder:-
Use indiana, amul,amulya
Instead of :-
anikspray,milkana, everyday milk, milkmaid.
=======================
9. Shampoo :-
Use Nirma, Velvette
Instead of :-
halo, all clear, sunsilk, head and shoulders, pantene.
========================
10. Mobile connections-
Use bsnl, airtel,reliance,idea,docomo
Insteaf of :-
Vodafone
========================
11. Food :-
Eat at jay bhavani, TGB, local restaurants
Instead of :-
mac-d, subway, pizza hut, kfc.
========================
12. Mobiles :-
Use micromax, karbonn, lava,croma
Instead of :-
samsung,apple, htc, sony.
13. Bikes :-
Use hero, bajaj
Instead of :-
Honda, yamaha.
========================
14. Footwear:-
Use paragon, chavda,lakhani
Instead of :-
Nike, reebok, adidas,converse.
========================
15. Jeans and shirts:-
Use spykar, k-lounge
Instead of :-
Lee, levi's,U.s. Polo, pepe, benetton.
========================
16. Watch :-
Use titan, sonata ,fasttrack
Instead of :-
tommy, Citizen, zodiac, tissot.
========================
Dont use products from hindustan lever,
Only name is hindustan it has been taken by foreign company
We blame politicians
Now go and check the things you use and ask yourself how much do you contribute to the decreased value of RUPEE
You use these foreign made products...
&
Government have to pay in dollars for d same...thus value of rupee Decreases...
Aren't u responsible for fall of rupee..
Samsung S4 at Rs 41k.. Same features Micromax Can4 comes at Rs 17k..means u waste Rs 24k..and these 24k go to south Korea in dollars..
None of the indian products are subordinate in quality, they might look a bit less fancy!!
Why is china so ahead, because the whole world uses made in china items.
We indians could atleast use made in india items!
Change comes from within! spread the change by broadcasting this msg to everyone on your contact list!
lets see by the end of this year does 1$ become Rs. 70 or it becomes Rs. 50..
JAAAAGO.
Some of these we follow....but we can make our possible to make a change.
Before deleting, HELP your frnds by passing it..!
Let it reach d 121 crores Indians.
It might help sum1. Fwd to as many as u can.
WhatsApp to free hai,, soo..frwrd it plz..
All the best.
Sent from My Blackberry® @ Tata Docomo
நன்றி
http://indru.todayindia.info/narendra-modii-ndian-elections-2014/

சனி, 26 செப்டம்பர், 2009

ச்சே.. ஜஸ்ட் மிஸ்..! மவனே! அடுத்த விஜயகாந்து படத்திலும் கமலஹாசன் படத்திலும் வில்லனா வர்றது

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த முன்னாள் ராணுவ வீரர்!

பீகார் தலைநகர் பாட்னாவில் வசிக்கும் முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் பாகிஸ்தான் உளவாளியாக செயல்பட்டதை அறிந்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றினர்.

இந்திய ராணுவத்தில் 5 ஆண்டுகாலம் சிப்பாயாக பணிபுரிந்த இந்த நபரின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு ராணுவத்தில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் பாட்னா அருகே கான்கர்பாக் என்ற இடத்தில் ரகசிய ஆவணங்களுடன் அவர் பதுங்கி இருந்தது காவல்துறைக்கு தெரியவந்தது. இதனைதொடர்ந்து காவல்துறையினர் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடம் இருந்து ராணுவ ரகசியங்கள் அடங்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டது.

மேலும் விசாரணையில் அவருக்கு ஐ எஸ் ஐ ஏஜெண்டுகளுடன் தொடர்பு உள்ளது என்ற திடுக்கிடும் தகவலும் வெளிவந்திருக்கிறது. இந்தியாவில் உள்ள ராணுவ நிலைகளின் வரைபடங்கள், ஏவுகணை வகைகள் மற்றும் அதன் தொழிற்நுட்பம் பற்றிய விவரங்கள் அதன் இருப்பிடங்கள் போன்றவைகள் அடங்கிய தஸ்தாவேஜூகளும் அந்த நபரிடமிருந்து கைப்பற்றப்பட்டன.

ராணுவத்தில் உள்ள சிப்பாய்களுடன் பழக்கம் ஏற்படுத்தி கொண்டு பல உறுதியான தகவல்களை விவரங்களை இவர் சேகரித்துள்ளார். இந்திய பகுதி காஷ்மீரில் உள்ள ஏவுகணைகளின் தொழிற்நுட்பம், நிறுத்தி வைக்கபட்டுள்ள இடங்களின் வரைபடம் ஆகியவை அவரது வீட்டிலிருந்து கண்டெடுக்கப்பட்டன. அவரிடமிருந்து 5 சிம்கார்டுகளும் ஒரு மொபைல் போனையும் கைப்பற்றிய காவல்துறையினர் அதிலுள்ள நேபாளநாட்டு தொலை பேசி எண்களை கொண்ட சிம்கார்டை கைப்பற்றியுள்ளனர். இதனை தொடர்ந்து அவரிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது.

தகவல்: இந்நேரம்.காம்

மேலே கண்ட தகவலில் சொல்லாமல் விட்ட ஒன்று அந்த நபரின் பெயர்.. அது சுதன் சுதாகர்.

ச்சே.. ஜஸ்ட் மிஸ்..! மவனே! ஒன் பேரு மட்டும் சலீம் அபூபக்கர் என்று இருந்ததுன்னா, இன்னேரம் 'இணைய நீதிமான்'களெல்லாம் சேர்ந்து உன்னை, உன் பரம்பரையை, உன் மதத்தை, உன் மதத்தை பின்பற்றும் மற்ற எல்லோரையும் நார் நாராக கிழித்து தொங்க விட்டு, உனக்கு 'தேசத்துரோகி' பட்டம் சுமத்தி, தூக்குத் தண்டனை கொடுத்து தொங்க விட்டிருப்பார்கள்.

அத்துவானியிலேருந்து தமிழ் புளோக் எழுதுற அம்மாஞ்சி வரைக்கும் உனக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றினாத்தான் இந்தியாவுக்கே விமோசனம் கிடைக்கும் என்று போராட்டம் நடத்தியிருப்பாங்க!

அடுத்த விஜயகாந்து படத்திலும் கமலஹாசன் படத்திலும் வில்லனா வர்ற கொடுப்பினையும் உனக்கு கெடச்சிருக்கும்.

சுதாகர்னு பேரு வச்சிருந்ததாலே தப்பிச்சிட்டேடா மவனே!

உன்னைப் போல் ஒருவன்:ஒரு நடுனிலையாளனின் நியாயமான கேள்வி

இது உன்னைப் போல் ஒருவன் விமர்சனமல்ல
உன்னைப் போல் ஒருவன் திரைப்படம் வெளியிடப்பட்டதிலிருந்து பலதரப்பட்ட விமரிசனங்கள் வந்துக்கொண்டிருக்கின்றன. அவற்றில் சில விமரிசனங்கள் அது ஒரு அப்பட்டமான இந்துத்துவா என்கிற பார்ப்பனீயத்தின் பிரச்சாரப் படம் என்றும் மற்ற சில விமர்சனங்கள் நாட்டில் நடக்கும் குண்டு வெடிப்பு சம்பவங்களில் ஈடுப்பட்டவர்கள் (மரண தண்டனை மூலம்)தண்டிக்கப்படாமல் உயிரோடுதான் இருக்கிறார்கள், அதன் காரணமாக மனம் குமுறும் ஒரு சராசரி மனிதனின் சினத்தின் வெளிப்பாடுதான் இந்தப் படம் என்கிறது.

நான் இன்னும் உன்னைப் போல் ஒருவனை பார்க்காததால் (இன்னும் எந்த புண்ணியவானும் இணையத்தில் ஏற்றவில்லை) அப்படத்தை என்னால் விமரிசிக்க இயலவில்லை. ஆனால் திரைப்படத்தை இணையத்தில் பலரும் அலசி கிழித்துவிட்டதால் இப்பதிவிற்கு போதிய விடயங்கள் எனக்கு கிடைத்திருக்கின்றன. அது மட்டுமில்லாமல் வெட்னஸ்டே வை நான் ஏற்கனவே பார்த்திருப்பதால் இது அறிமுகமான கதைக்களம்தான்.

வெட்னஸ்டே படத்தைப் பார்த்த நடுநிலையாளர்களுக்கு ஏன் முஸ்லிம்களுக்கே அந்தப் படத்தில் இந்துத்துவ சாயல் சற்றும் தட்டுப்படாது. அப்படம் உண்மையிலேயே ஒரு சராசரி மனிதனின் சினத்தின் வெளிப்பாடாகதான் இருந்தது. ஆனால் உன்னைப் போல் ஒருவன் வெட்னஸ்டேயின் கதைக்களத்தில் இருந்து தடம் மாறி சில நச்சுக் கருத்துகளை வெளிப்படுத்தும் படமாக எடுக்கப்பட்டதாகவே உணரமுடிகிறது. உதாரணமாக குஜராத் கலவரத்தில் தன் மூன்று மனைவியரில் ஒருவரை இழந்தவரிடம் ”அதுதான் மிச்சம் இரண்டு இருக்கிறதே” என்கிற குதர்க்க வசனம். அடிப்படையில் Bigamy பற்றி பேச கமலுக்கு நிச்சயமாக அருகதை கிடையாது. இதற்கு மேல் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி விவாதிக்க நான் விரும்பவில்லை.


இஸ்லாமியர் என்றாலே நான்கு மனைவிகள் இருப்பார்கள் என்கிற ஒரு கருத்தை படம் பார்க்கும் மக்கள் மீது திணிக்கும் முயற்சியாகவே இது படுகிறது. முஸ்லிம்களிடையே பலதார மணம் என்பது வளைகுடா நாடுகளில்தான் அதுவும் செல்வந்தர்களிடம்தான் பரவலாக இருக்கிறது. இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் பலரும் சமூக பொருளாதார அளவீடுகளில் கீழ்நிலையில்தான் இருக்கிறார்கள். பிழைப்பதற்கே கடினமான சூழ்நிலையில் அவர்கள் பலதார மணம் புரிகிறார்கள் என்பது நம்பத் தகுந்ததாக இல்லை. எனக்கும் பல இஸ்லாமிய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களோ அல்லது அவர்கள் குடும்பத்திலோ யாருக்குமே ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம் முடித்ததாக நான் அறிந்தவரை இல்லை. மேலும் பதிவுலகத்திலேயே பல முஸ்லிம்கள் இருக்கிறார்கள். அவர்களில் எத்தனைப் பேர் பலதார மணம் புரிந்திருக்கிறார்கள் என்று சொல்லமுடியுமா?. அப்படி பலதார மணம் புரிந்த இஸ்லாமியர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். இந்தியாவில் இஸ்லாமிய தனிநபர் சட்டம் இஸ்லாமியர்களுக்கு பலதார மணம் புரியும் சலுகையை எனக்கு தெரிந்து முஸ்லிம்களை விட அதிகமாக பயன்படுத்துபவர்கள் இந்தி நடிகர் தர்மேந்திரா, ஹரியானாவின் முன்னாள் துணை முதல்வர் சந்தர் மோகன் போன்ற ஹிந்துக்கள்தான். இவர்கள் இரண்டாவது திருமணம் செய்வதற்காகவே பேருக்காக மதம் மாறியவர்கள்.

தீவிரவாதத்திற்கு தீவிரவாதம்தான் பதில் என்றால் இந்தியாவில் பல தீவிரவாத இயக்கங்கள் அதைதானே செய்துக்கொண்டிருக்கின்றன. அவர்களுக்கு வக்காலத்து வாங்குவது போலதான் உன்னைப்போல் ஓருவன் (வெட்னஸ்டே வில் இந்த மாதிரி வசனங்கள் இடம் பெற்றதாக எனக்கு நினைவில்லை) 1992 ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டு அதன் தொடர்ச்சியாக மும்பையில் பல முஸ்லிம்கள் இந்த்துத்துவா வெறியர்களால் கொல்லப்பட்டு அந்த தீவிரவாதத்திற்கு பழிவாங்கும் விதமாக 1993 மும்பையில் தொடர் குண்டு வெடிப்புகள் நிகழும் வரை இந்தியாவில் குண்டு வெடிப்புகள் காஷ்மீரில் மட்டும்தான் நிகழ்ந்ததாக நான் நாளிதழ்களில் படித்து வந்திருக்கிறேன். 1993க்கு முன் இந்தியாவில் காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களைத் தவிர இந்தியாவில் எத்தனை குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தது என யாரேனும் சொல்ல இயலுமா?

உன்னைப் போல ஒருவனில் குண்டுவைத்தவனை குண்டுவைத்துக் கொல்வதுபோல மும்பை, குஜராத், ஒரிசா கலவரங்களில் ஈடுப்பட்டவர்களையும் அவர்களை தூண்டிவிட்டவர்களையும் அதே போல பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்வாரா கமல். வெட்னஸ்டேயில் இது போன்ற காட்சிகள் இல்லை என நீங்கள் கேட்கலாம். ஆனால் கமல்தான் வெட்னஸ்டேயை அப்படியே எடுக்கவில்லையே? எடுத்திருந்தால் இத்தனை விமரிசனங்கள் எழுந்திருக்காதே!

இந்தியாவில் சிறுபாண்மையினருக்கெதிராக கட்டவிழ்த்து விடப்படும் அடக்குமுறைகளுக்கு வக்காலத்து வாங்க ஜெரிமி பெந்தாமை துணைக்கு அழைப்பவர்கள் அதே ஜெரிமி பெந்தாமின் கருத்தை மலேசியாவில் ஒடுக்கப்படுகிறோம் என்று போராடும் ஹிந்தராஃப் அமைப்பிடம் போய் சொல்வார்களா? இவர்களின் ஆதரவு இலங்கையில் தமிழர்களை இனவொழிப்புக்கு ஆட்படுத்தும் சிங்கள வெறியர்களுக்கும், திண்ணியத்தில் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த சகோதரர்களில் வாயில் மலத்தை திணித்த சாதிவெறியர்களுக்கும், காவிரி பிரச்சினையின்போது பெங்களூரில் தமிழர்களில் உயிர்களை உடைமைகளையும் சூறையாடிய கன்னட வெறியர்களுக்கும் உண்டு என்றே நம்புகிறோம். ஏனென்றால் இந்த இடங்களில் பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம் அப்பகுதியின் சிறுபாண்மையினர்தான்.

இவர்களின் கருத்துபடிப் பார்த்தால் இந்தியாவில் சாதிரீதியாக பார்த்தால் பார்ப்பனர்கள்/பனியாக்கள் மைனாரிட்டி. வர்க்கரீதியாக பார்த்தால் அம்பானிகளும், டாடாவும், மிட்டலும் மைனாரிட்டி.மொழிரீதியாகப் பார்த்தால் (மத்திய அரசு உயர்பதவியில் இருக்கும்) மலையாளிகள் மைனாரிட்டி.தொழில் அடிப்படையில் பார்த்தால் பொட்டித் தட்டும் ஐ.டிக்காரர்கள் மைனாரிட்டி.

இவர்களுக்கு எல்லாம் தாங்கள் ஒடுக்கப்படுகிறோம் என்கிற உணர்வு வராதபட்சத்தில் முஸ்லீம்களும் தலித்துகளும் தாங்கள் ஒடுக்கப்படுகிறோம் என்று நினைப்பது ஏன் என்று விளக்க முன் வருவார்களா? குறைந்தப்பட்சம் அவர்களுக்கு மும்பை, அகமதாபாத் டெல்லிப் போன்ற நகரங்களில் அவர்கள் விரும்பும் இடங்களில் வீடு வாங்கதான் உதவ முடியுமா?

படைப்பாளியின் படைப்புக்களைதான் விமரிசிக்கவேண்டும் அவர்களின் பிறப்பை வைத்து அவர்களது படைப்புகளை விமரிசிக்கச் கூடாது என்பது மிக மிக நியாயமான வாதம். இதே கருத்தை ஓவியர் எம். எஃப் ஹூசைனை அவரது சொந்த நாட்டிலிருந்து நாடு கடத்தி அவர் இந்தியாவிற்கு திரும்ப முடியாத ஒரு சூழ்நிலைக்கு தள்ளியிருக்கும் பார்ப்பனீய கிரிமினல்களிடம் போய் சொல்லிவிட்டு உடலில் காயம்படாமல் திரும்பி வரச் சொல்லுங்கள் பார்க்கலாம். தஸ்லீமா நஸ்ரினை நாடு கடத்திய வகாபிய கிரிமினல்களுக்கும் எம்.எஃப் ஹுசைனை நாடு கடத்திய பார்ப்பனீய கிரிமினல்களுக்கும் ஒரு வேறுபாடும் கிடையாது. அதேபோலதான் மதத்தின் பெயரால் குண்டுவைப்பவனும் தாயின் வயிற்றிலிருந்து கருவை கிழித்தெடுத்து கொல்பவனும். இருவருமே தீவிரவாதிகள்தான். இவர்களை ஒரே தட்டில்தான் எடைப்போட வேண்டும்.

வெட்னஸ்டே யில் நான்கு பேரையுமே தீவிரவாதிகளாகதான் காட்டியிருப்பார்கள். அதனால்தானோ என்னவோ அப்படத்திற்கு அதிகமாக விமரிசனங்கள் எழவில்லை. ஆனால் உன்னைப் போல் ஒருவனில் தீவிரவாதிகளை இஸ்லாமிய தீவிரவாதிகள் இந்துத்துவா தீவிரவாதிகள் என தரம் பிரித்துவிட்டு அதில் ஒரு தரப்பினரை கடுமையாக கண்டித்துவிட்டு இன்னொரு தரப்பினரை பேருக்காக கண்டித்திருப்பது (சோ கலைஞரை கடுமையாக விமர்சித்து, அம்மாவை பேருக்காக விமரிப்பது போல) விமரிசனங்களை எழுப்பவே செய்யும்.
நன்றி:உறையூர்காரன்

வியாழன், 3 செப்டம்பர், 2009

ஊட்டியில் முஸ்லிம்கள் மீது காட்டுமிராண்டி தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் பேராசிரியர் எம் ஹெச் ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் அறிக்கை:

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இன்று வினாயகர் ஊரவலம் நடத்தியவர்கள் காந்தல் சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல் முதல் தொடங்கி ரகளையில் ஈடுபட்டு வந்துள்ளார்கள். ஊட்டி லோவர் பஜார் பள்ளிவாசல் அருகில் வரும் போது சிலைகளை பள்ளிவாசல் முன்பு வைத்து விட்டு ஊர்வலத்தில் வந்தவர்கள் ரகளை யில் ஈடுபட்டுள்ளார்கள். அப்போது காவல்துறையினர் அவர்களை லேசான தடியடி நடத்தி கலைத்துள்ளார்கள். சிதறி ஒடிய ஊர்வலத்தினர் அருகில் உள்ள மார்கெட் பகுதி மீது கல்லெறிந்து விட்டுச் சென்றுள்ளார்கள். இவ்வாறு ரகளையில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத ஊட்டி காவல்துறையினர் மார்க்கெட் பகுதிக்குள் புகுந்து அங்கிருந் தவர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர். ஒரு 70 வயது முதியவரும் தாக்கப்படுவதை கண்டு அந்த இடத்திற்கு வந்த தமுமுக மாவட்டத் தலைவர் அப்துல் ஸமது காவல் துணை கண்காணிப்பாளரிடம் அப்பாவிகளை தாக்கும் உங்கள் நடவடிக்கை நியாயமா என்று கேட்டுக் கொண்டிருந்த நிலையில் அவரும் காவல்துறையினரால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டுள்ளார். அவர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். இதே போல் அங்கு வந்த மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஷேக்கும் பலமாக தாக்கப் பட்டு நினைவிழந்த நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 15க்கும் மேற்பட்ட அப்பாவி முஸ்லிம்கள் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வினாயகர் ஊர்வலத்தில் சென்றவர்கள் ரகளையில் ஈடுபட அதற்கு எவ்வகையிலும் தொடர் பில்லாதவர்கள் மீது காரணமின்றி ஊட்டி காவல்துறையினர் அராஜகத்தை கட்ட விழ்த்து விட்டுள்ளனர். இந்த அராஜகத் திற்கு காரணமாக இருந்த காவல்துறை அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை உடனடி யாக எடுக்கவும், காயமடைந்த மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கு மாறு தமிழக அரசை கோருகிறோம்.

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2009

ஜின்னா நல்லவரா? கெட்டவரா?


எழுத்துதான் உலகத்தின் மிகப்பெரிய ஆயுதம் என்பதை ஜஸ்வந்த்சிங் மீது பா.ஜ.க. எடுத்திருக்கும் நடவடிக்கை மீண்டும் உணர்த்துகிறது. இந்திய வரலாறு இது வரையில் சரியான முறையில் மூன்று முக்கிய அரசியல் தலைவர்களின் வாழ்க்கையை, 1935 முதல் 1948 வரையில் உள்ள காலகட்டத்தை இவர்கள் பார்த்தவிதம், எடுத்து வைத்த அரசியல் வாதங்கள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. இந்த மூன்று முக்கிய தலைவர்கள் : தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் மற்றும் பாகிஸ்தானை உருவாக்கிய முகமது அலி ஜின்னா ஆகியோர்.

அரசியல் என்பது சாமானிய மக்களுக்கு அதிகாரம் தருவதாக இருக்க வேண்டும். மேலாதிக்கம் என்பதை எதிர்க்க உதவும் ஒரு கருவிதான் அரசியல். மதம், சாதி மற்றும் மொழியின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகளை களைய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர்கள்தான் இவர்கள். ஆனால் இன்று இந்த மூன்று முக்கிய தலைவர்களின் அரசியல் பங்களிப்பு மிகவும் சுருங்கிய பார்வையில் அடைக்கப்பட்டுள்ளது. தந்தை பெரியார் வெறும் தமிழகத் தலைவராக மட்டும் அகில இந்திய அளவில் பார்க்கப் படுகிறார். அம்பேத்கரை வெறும் ஒரு தலித் தலைவராக சுருக்கும் முயற்சியில் மேலாதிக்கவாதிகள் வெற்றி பெற்றுள்ளனர். இதில் ஜின்னாவின் நிலை இன்னும் மோசம். இவரை ஒரு பிரிவினைவாதி, பாகிஸ்தானை உருவாக்க இந்தியாவை துண்டாக்கியவர், ஒரு முஸ்லிம் மதவாதி என்று இந்திய இந்து வலதுசாரிகள் சித்தரிக்க, அந்த பிம்பம்தான் பொதுவான தளத்தில் மக்களின் கற்பனையை கவர்ந்துள்ளது.

இந்த நிலையை குறுகிய அரசியல் லாபத்திற்கு பயன்படுத்த முடியும். ஆனால், பரந்த அரசியல் புரிதலுக்கு இதுபோன்ற வறட்டு வாதங்கள் உதவாது. ஜின்னாவைப் பற்றி நம்முடைய பார்வையை மீள் ஆய்வுக்கு உட்படுத்த உதவியிருக்கும் ஜஸ்வந்த்சிங்குக்கும், அவரை கட்சியை விட்டு நீக்கிய பா.ஜ.க. தலைமைக்கும் நாம் ஒருவிதத்தில் கடமைப்பட்டுள்ளோம்.

ஜின்னாவின் அரசியலைப் புரிந்துகொள்ளுவதற்கு முன் அவரது வாழ்க்கை வரலாற்றின் சுருக்கத்தை அறிந்துகொள்வது அவசியம். 25-12-1876 அன்று கராச்சி நகரில் மித்திபாய் மற்றும் ஜின்னாபாய் பூஞ்சா என்கிற செல்வந்தருக்கும் முதல் மகனாய் ஜின்னா பிறந்தார். அவரது தாய்மொழி குஜராத்தி. கராச்சியிலும் மும்பையிலும் பள்ளிக் கல்வி கற்ற ஜின்னா, சட்டம் படிக்க இங்கிலாந்து சென்றார். தன்னுடைய 19-வது வயதில் மிக குறைந்த வயதுடைய வழக்கறிஞராக இங்கிலாந்து நீதி மன்றத்தில் பதிவு செய்யப்பட்டார்.

அரசியல் ரீதியாக இங்கிலாந்தில் அப்போது பிரபலமாக இருந்த வில்லியம் களாட்ஸ்டோனின் "லிப்ரல் பார்வையால்' கவரப்பட்டு, முற்போக்கு கொள்கைகளும் ஜனநாயக மரபுகள் மீதும் அதிக நம்பிக்கை வைத்தார். 1900-ல் இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் தாதாபாய் நௌரோஜியின் வெற்றிக்கு பாடுபட்டவர்களில் மிகவும் முக்கியமானவர் ஜின்னாதான்.

நவீனத்துவம் என்பது மதவாதிகளின் கைகளில் சிக்கி, வளர்ச்சிக்கு எதிராகப் போய்விடக்கூடாது என் பதில் மிகவும் அக்கறை கொண்ட ஜின்னா நவீனத் துவத்தின் ஒரு அடையாளமாக எப்பொழுதும் கோட் மற்றும் சூட்தான் அணிந்து காட்சியளித்தார். முஸ்லிம் மதவாதிகள் சிலர் அந்த காலத்து உடை விஷயத்தில் குறிப்பாக பெண்கள் உடை விஷயத்தில் கடைபிடித்த பிற்போக்கான நிலையை தன்னுடைய எழுத்திலும், தனிப்பட்ட வாழ்க்கையில் தன்னுடைய மனைவி மற்றும் சகோதரிகளின் ஆடை அணியும் முறையிலும் கட்டுபெட்டித் தனத்தை எதிர்த்து செயல்பட்டவர்தான் ஜின்னா.

1902-ல் குடும்ப வியாபாரத்தை கவனிக்க இந்தியா திரும்பிய ஜின்னா, மும்பையில் ஒரே ஒரு ஆண்டுதான் வியாபாரத்தில் ஈடுபட்டார். 1903 முதல் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக செயல்பட ஆரம்பித்தார். இரண்டே ஆண்டுகளில் இந்தியாவின் பிரபல வக்கீல்களில் அவரும் ஒருவர் என்கிற புகழைப் பெற்றார்.

1905-ல் பாலகங்காதர திலகர் மீது தேசகுற்றம் சுமத்தி ஆங்கில அரசு கைது செய்தபோது, திலகரின் சார்பாக வாதிட்டவர் ஜின்னாதான். அவருடைய வாதங்கள்: "சுதந்திரம் கேட்பது பிறப்புரிமை, தேச குற்றமல்ல. சுயஆட்சி என்பதுதான் முறையே அன்றி அந்நிய ஆட்சி அல்ல'' -இந்த வாதங்களே பின்னாளில் இந்திய சுதந்திர வேட்கையை வழிநடத்திச் செல்ல உதவிய வாதங்கள்.

கோபாலகிருஷ்ண கோகலே, பிரோஷா மேத்தா மற்றும் சுரேந்திரநாத் பானர்ஜி ஆகியோரின் அழைப்பை ஏற்று காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக சேர்ந்தார். ஆங்கிலேய ஆட்சியில் உருவாக்கப்பட்ட IMPERIAL LEGISLATIVE COUNCIL உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜின்னா, குழந்தை திருமண தடை சட்டத்தை அமல்படுத்துவதில் முக்கிய பங்காற்றினார். முஸ்லிம் மக்களுக்கு வஃக்ப் வாரியத்தை உரு வாக்கினார். பின்னர் SANDHURST COMMITEE-யில் உறுப்பினராகச் சேர்ந்து இந்தியாவின் முதல் ராணுவப் பயிற்சிக் கல்லூரியான INDIAN MILITARY ACADEMYஐ டேராடூன் நகரில் உருவாக்கியதும் ஜின்னாதான்.

1906-ல் அகில இந்திய முஸ்லிம் லீக் உருவானபோது அதில் சேர முடியாது என்று அறிவித்த ஜின்னா, அரவணைத்துச் செல்லும் அரசியலுக்கு மத அடிப்படையில் கட்சி அமைத்தது எதிரான செயல் என்று நம்பினார். ஆனால் 1905-ல் வங்க மாகாணத்தை பிரித்தவுடன் ஏற்பட்ட இந்து மேல்ஜாதி அமைப்பினரின் வகுப்புவாதம் அவரை மிகவும் வாட்டியது. விளைவு... 1913-ல் முஸ்லிம் லீக்கில் ஜின்னாவே சேர்ந்தார். 1916-ல் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரஸ் கட்சியும் லீக்கும் அந்த ஆண்டே ஒரு ஒப்பந்தத்தை போட்டு, காலனி ஆதிக்கத்திற்கு எதிரான ஒரு பொது நிலையை எடுக்க உதவி செய்தார். 1918-ல் ரத்தன்பாய் பெட்டிட் என்கிற பார்சி பெண்ணை திருமணம் செய்துகொண்ட போது, முஸ்லிம் தலைவர்களும், பார்சி தலைவர்களும் ஒன்றாக இந்த கலப்புத் திருமணத்தை எதிர்த்தனர். 1919-ல் இந்த தம்பதிகளுக்கு பிறந்த ஒரே ஒரு குழந்தை டினா ஜின்னா. இந்த டினா ஜின்னாவின் மூத்த மகன்தான் பாம்பே டையிங் கம்பெனியின் இன்றைய தலைவர் நுஸ்லி வாடியா.

1924 முதல் முஸ்லிம் லீக்கை முழுவதும் சீராக்கி, இந்து-முஸ்லிம் ஒற்றுமையை உருவாக்க ஏழு ஆண்டுகள் பாடுபட்டார். "இந்திய விடுதலைக்கு இந்திய-முஸ்லிம் ஒற்றுமையே அடிப்படை காரணமாக இருக்க முடியும் என்பதை திரும்பத் திரும்ப கூறுகின்றேன். இதற்கு எதிரான நிலையை யாரும் எடுத்தால் அவர்களை முஸ்லிம் மக்களின் விரோதி என்று அழைக்கத் தயங்கமாட்டேன்'' என்று லாகூர் நகரில் பிரகடனப்படுத்தியவர்தான் ஜின்னா. 28-3-1929-ல் தன்னுடைய புகழ்பெற்ற 14 அம்ச அறிக்கையை ஜின்னா வெளியிட்டார். இந்த அறிக்கை இந்து-முஸ்லிம் உறவுகளை மேம்படுத்தி பரந்த அதிகார பரவலாக்கலை உருவாக்கும் என்று ஜின்னா நம்பினார். ஆனால், இந்த நம்பிக்கை எடுபடாமல் போய்விட்டது என்பதே உண்மை.

எப்படி காங்கிரசுடன் எந்த உறவும் வைக்க முடியாது என்ற முடிவுக்கு 1920-களில் பெரியார் வந்தாரோ, அதேபோல் ஒரு முடிவுக்கு ஜின்னா 1929 முதல் தள்ளப்பட்டார் என்பதே வரலாற்று உண்மை. மத்தியில் குவிக்கப்பட்ட அதிகாரம் -குறிப்பாக ஸ்டாலின் தலைமையில் சோவியத் நாடுகளில் ஏற்பட்ட அதிகார கட்டமைப்பு மத்தியில் இருக்கும் முறையை- நேரு அவர்களும், பட்டேல் அவர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர் என்பது உண்மை.

1927 சைமன் கமிஷன் முன்பு முஸ்லிம் மக்களுக்கு தனி வாக்கு தொகுதிகள் வேண்டும் என்று ஜின்னா கருத்து தெரிவித்தபோது, அதை நேரு நிராகரித்தார்.

தொடர்ந்து வட்டமேஜை மாநாடுகள் தோல்வியடைய, 1936-ல் இந்தியா திரும்பிய ஜின்னா, தேர்தலில் போட்டியிட்டு முஸ்லிம் மக்களின் அரசியல் உரிமைகளை பெற முடிவு செய்தார். அந்தத் தேர்தலில் முஸ்லிம் வாக்காளர்கள் உள்ள தொகுதிகளில் லீக் பெரிய வெற்றி பெற்றது. ஆனால் காங்கிரஸ்தான் பெருவாரியான இடங்களைப் பெற்றது. இந்த நிலையில் லீக்கும், காங்கிரசும் இணைந்து செயல்படுவது சீக்கிரம் சுதந்திரத்தை அடைய வழிவகுக்கும் என்று கருதிய ஜின்னா, இதற்காக அன்றைய காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராஜேந்திரபிரசாத்துடன் பேச்சுவார்த்தையை நடத்தினார். இந்த முயற்சிக்கு எதிராக செயல்பட்ட பல காங்கிரஸ் தலைவர்கள், 1938-ல் காங்கிரஸ் மற்றும் லீக்குக்கு இடையிலான பேச்சுவார்த்தை முற்றிலும் முறிந்ததாக அறிவித்தனர். இதுவே பாகிஸ்தான் என்கிற கோஷம் உருவாக காரணமாக அமைந்த விஷயம். 1940-க்கு முன்பு பாகிஸ்தான் என்று ஒரு சொல்லே அகராதியில் கிடையாது. 1940-ல் லாகூர் நகரில் நடைபெற்ற லீக் மாநாட்டில்தான் இந்த சொல் முதன்முதலாக பயன்படுத்தப்பட்டது.

சிறுபான்மையினர் உரிமை என்கிற அடிப்படையில் உருவான இந்த கருத்தாக்கம் பல்வேறு சிக்கல்களை உள்ளடக்கியது என்பதிலும் எந்த சந்தேகமும் இல்லை. TWO NATION THEORY என்று பல்வேறு பரிமாணங்கள் உடைய இந்தியாவை இந்து-முஸ்லிம் என்று இரு தேசிய அடையாளமாக சுருக்கியதுதான் ஜின்னாவின் மிகப்பெரிய பலவீனம். மதத்தின் அடிப்படையில் உருவான பாகிஸ்தான், 1971-ல் மொழியின் அடிப்படையில் பாகிஸ்தான்-பங்களாதேஷ் என்ற பிரிவு TWO NATION THEORY என்பதின் தவறான புரிதலின் வெளிப்பாடு ஆகும்.

மதத்தின் அடிப்படையில் தேசியத்தை கட்டமைக்காமல் சிறுபான்மையினர் என்கிற முறையில் ஜின்னா தன்னுடைய அரசியலை நடத்தியிருந்தால் இன்றைய உலக அரசியல் வேறு ஒரு அழகிய பரிமாணத்தைப் பெற்றிருக்க முடியும். இதை அவர் செயல்படுத்த முடியாமல் போனதற்கு அவரே ஒரு காரணம் என்றாலும், காங்கிரஸ் கட்சியின் ""மத்தியில் அதிகார குவிப்பு'' என்கிற நிலைதான் ஊற்றுக்கண் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது என்பதைத்தான் ஜஸ்வந்த்சிங்கின் நூல் எடுத்துரைக்கிறது.

அதற்காக அவர் கொடுத் திருக்கும் விலை தான் உருவாக்கிய கட்சியிலிருந்து நீக்கப்படும் நிலை. இது ஒன்றும் பெரிதல்ல என்றே நாளைய வரலாறு தீர்மானிக்கும்.

-நன்றி நக்கீரன்

சனி, 1 ஆகஸ்ட், 2009

ஜனாதிபதிக்கு ஆபாச இ-மெயில் அனுப்பிய என்ஜினீயர் கைது

ஜனாதிபதி பிரதீபா பட்டீலுக்கு கடந்த பிப்ரவரி மாதம் இ-மெயில் ஒன்று வந்தது. அந்த இ-மெயிலை ஜனாதிபதி மாளிகை அதிகாரிகள் பார்த்தபோது, அதில் ஆபாச வார்த்தைகள் இடம் பெற்று இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.


உடனடியாக இது குறித்து டெல்லி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் ரகசிய விசாரணை மேற்கொண்டனர்.

கர்நாடகத்தில் உள்ள ஒரு இன்டர்நெட் மையத்தில் இருந்து அந்த இ-மெயில் அனுப்பப்பட்டு இருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் விசாரணையை மேலும் முடுக்கி விட்டபோது மைசூரில் உள்ள இன்டர்நெட் மையம் மூலமாக இ-மெயில் வந்தது புலனாகியது.

உடனே, டெல்லி போலீசார் மைசூருக்கு வந்தனர். மைசூரில் உள்ள குறிப்பிட்ட இன்டர்நெட் மையத்துக்கு சென்று அதன் உரிமையாளரிடம் ரகசிய விசாரணை மேற்கொண்டனர். இன்டர்நெட் மையத்தில் இருந்த வாடிக்கையாளர் பதிவேட்டை ஆய்வு செய்தனர். அப்போது ஜனாதிபதிக்கு இ-மெயில் அனுப்பியவரின் விலாசம் கிடைத்தது.

அவினாஷ் கஷ்யப் என்ற அந்த நபர், மைசூர் விஜயநகரில் வசித்து வருகிறார். அவருடைய வீட்டுக்கு போலீசார் சென்று பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவினாஷ் கஷ்யப் பெங்களூரில் உள்ள ஒரு கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து பட்டம் பெற்றவர் என்றும், தற்போது பெங்களூரிலேயே எம்.டெக் படித்து வருவதும் அப்போது தெரியவந்தது. அவரை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

இந்த தகவலை தெரிவித்த போலீசார் மேற்கொண்டு எந்த விவரத்தையும் தெரிவிக்க மறுத்து விட்டனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

வியாழன், 16 ஜூலை, 2009

இந்தியர்களைக் குறிவைக்கும் இஸ்ரேலிய அபாயம்!

ஹாஜாகனி

இஸ்ரேல் இந்த பூமிப் பந்தின் மீது அராஜகத்தால் உருவாக்கப்பட்ட ஒரு நாடு. மண்ணின் மைந்தர்களான அரபுகளை அழித்தொழிக்கும் யூத வந்தேறிகளின் வன்முறைக்கு அமெரிக்கா காவலுக்கு நிற்கிறது. ஐ.நா.வோ அநீதிகளை அமைதியாய் ஆதரிக்கிறது.

இஸ்ரேல் என்ற தேசத்தை ஏற்கவே கூடாது என்றார் தேசத்தந்தை காந்தி. நீண்ட நெடுங்காலமாக இந்தியாவுக் கும் இஸ்ரேலுக்கும் இடையே தூதரக உறவே இல்லாமல் இருந்தது. நரசிம்மராவ் ஆட்சியில்தான் இஸ்ரேலுடன் உறவு என்ற கேவலம் தொடங்கியது. பின்னர் பாஜக தலைமையிலான அரசு அதை நன்றாக வளர்த்தது.

அதன் உச்சகட்டமாக உலகிலேயே இஸ்ரேலிடம் அதிகமாக ராணுவத் தளவாடங்களைக் கொள்முதல் செய்த நாடு என்ற அவமானத்தை கடந்த ஆட்சியாளர்கள் பெற்றுத் தந்தனர். அரபு நாடுகளை வேவு பார்க்கும் இஸ்ரேலின் உளவு செயற்கைக்கோள், இந்தியாவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து விண்ணில் ஏவப்பட்டது.

எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தியாவின் ரகசியங்கள் மட்டுமின்றி ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் ரகசியங்களையும் இஸ்ரேல் அறிந்து கொள்வதற்கு மிகப்பெரிய சதித் திட்டத்தோடு களமிறங்கியுள்ளது.

இந்தியக் குடிமக்கள் அனை வருக்கும் அடையாள அட்டை வழங்கும் ஒப்பந்தத்தை மத்திய அரசிடம் இருந்து பெறுவதற்காக இஸ்ரேலிய அரசு நிறுவனம் மும்முரமாக முயற்சி செய்கிறது. மத்திய அரசின் உயர் அதிகாரி களையும் இந்நிறுவனம் உரிய(?) விதத்தில் அணுகி வருகிறது.

Israel International Co-operation Institute (IICI)
என்ற இஸ்ரேல் அரசின் பங்கேற்புடைய தொழில்நுட்ப நிறுவனத்தின் பிரதிநிதிகள் இந்தியாவுக்கு வருகைதந்து ஒப்பந்தம் பெறுவதற்கான முன்முயற்சிகளில் இறங்கியுள்ளனர்.

100 கோடி இந்தியர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதற்காக மொத்த திட்டச் செலவான ஒன்றரை லட்சம் கோடி ரூபாயில், 90 சதவீதம் செலவிடப்பட உள்ளது. இதற்காக சர்வதேச டெண்டரும் விடப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தை எப்படியும் பெற்றுவிடுவது என்ற முடிவில் இஸ்ரேல் மென்பொருள் மேம்பாட்டுத்துறை நிர்வாகி க்ரின்மெலாமெடின் தலைமையில் இஸ்ரேல் குழுவினர் ஜூலை முதல் வாரத்தில் இந்தியா வந்தனர். 14 உறுப்பினர்கள் கொண்ட இஸ்ரேல் குழுவினர் இன்போசிஸ், விப்ரோ, டாடா கன்சல்டன்சி போன்ற இந்தியத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி, அவற்றுள் ஒன்றுடன் கூட்டு சேர்ந்து, அடையாள அட்டை ஒப்பந்தத்தைப் பெறும் முடிவில் இருப்பதாகத் தெரிகிறது.

சொத்து விவரம், கல்வித் தகுதி, நோய் சிகிச்சை, வங்கிக் கணக்குகள் உள்ளிட்ட 40 முக்கியமான விவரங்கள் இந்த அட்டைக்காக ஒவ்வொருவரிடமிருந்தும் பெறப்பட்டு, மத்திய சேவை மென்பொருளில் (ஈங்ற்ழ்ஹப் நங்ழ்ஸ்ங்ழ்) பதிவு செய்யப்படும்.

இதன்மூலம் ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் தனிப்பட்ட தகவல்களையும் (டங்ழ்ள்ர்ய்ஹப்) இஸ்ரேல் பார்வையிட முடியும்.
பயங்கரமான சதிகளைச் செய்வதில் கைதேர்ந்த இஸ்ரேலிடம் இந்தியர்களின் அந்தரங்கத் தகவல்கள் சிக்குவது மிக ஆபத்தானது.

இந்தியர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் ஒப்பந்தத்தை எக்காரணத்தை முன்னிட்டும் இஸ்ரேல் தொடர்புள்ள நிறுவனங்களுக்குத் தரக்கூடாது. மேலும், இதில் அந்நிய நிறுவனங்களையும் நுழையவிடக் கூடாது.

மத்திய அரசு இதில் அலட்சியம் காட்டினால் விளைவுகள் வருத்தத்திற்குரியதாகிவிடும் என்பது திண்ணம்.