துபாய் சர்வதேச திருக்குர்ஆன் மனனப் போட்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
துபாய் சர்வதேச திருக்குர்ஆன் மனனப் போட்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 6 ஆகஸ்ட், 2012

துபாய் திருக்குர்ஆன் ம‌ன‌ன‌ப் போட்டியில் அனைவ‌ரையும் அதிச‌யிக்க‌ வைக்கும் த‌ஜிகிஸ்தான் சிறுவ‌ன்



துபாய்: துபாயில் நடந்து வரும் ச‌ர்வ‌தேச‌ திருக்குர்ஆன் மனனப் போட்டியில் கலந்து கொண்டுள்ள 12 வயது தஜிகிஸ்தான் சிறுவன் அனைவரையும் அதிசயிக்க வைத்துள்ளான்.
துபாய் ச‌ர்வ‌தேச‌ திருக்குர்ஆன் விருது வ‌ழ‌ங்கும் நிக‌ழ்ச்சியையொட்டி ச‌ர்வதேச‌ அள‌விலான‌ திருக்குர்ஆன் ம‌ன‌ன‌ப் போட்டிக‌ள் ந‌டைபெற்று வ‌ருகின்ற‌ன‌. இப்போட்டியில் ப‌ங்கேற்றுள்ள‌ த‌ஜிகிஸ்தானைச் சேர்ந்த‌ லுத்புல்லாஹ் கோலிகோவ் எனும் 12 வ‌ய‌து சிறுவ‌ன் த‌ன‌து திற‌மையினால் அனைவ‌ரையும் அதிச‌யிக்க‌ச் செய்து வ‌ருகிறான்.
திருக்குர்ஆனின் எந்த‌ப் ப‌குதியில் இருந்து எந்த‌ வ‌ச‌ன‌த்தைக் கேட்டாலும் அது எந்த‌ சூராவில் வ‌ருகிற‌து, எத்த‌னையாவ‌து ப‌க்க‌ம், அந்த‌ சூராவில் எத்த‌னை எழுத்துக்க‌ள், வ‌ச‌ன‌ம் இற‌ங்கிய‌ வ‌ர‌லாறு என‌ அனைத்துத் த‌க‌வ‌ல்க‌ளையும் எவ்வித‌ த‌ய‌க்க‌மும், யோச‌னையுமின்றி உட‌னுக்குட‌ன் தெரிவித்து வ‌ருவ‌து நிக‌ழ்ச்சியில் ப‌ங்கேற்றுள்ள‌ ந‌டுவ‌ர்க‌ளை வியக்க வைத்துள்ளது.
அந்த‌ மாண‌வனை ந‌டுவ‌ர்க‌ளும், பார்வையாளர்களும் மனம் மகிழ்ந்து வாழ்த்தின‌ர்.
16வது ஆண்டாக‌ ந‌டைபெற்று வ‌ரும் இந்த‌ ச‌ர்வ‌தேச‌ குர்ஆன் மனனப் போட்டியில் இதுவ‌ரை இப்பொடியொரு திற‌மை மிகுந்த‌ மாண‌வ‌ரை பார்த்த‌தில்லை என‌ இப்போட்டிக்கான‌ ஏற்பாட்டுக் குழுவில் இட‌ம் பெற்றுள்ள‌ ஒரேயொரு இந்தியரான‌ த‌மிழ‌க‌த்தின் ம‌துக்கூரைச் சேர்ந்த‌ நூருல் அமீன் தெரிவித்துள்ளார்.

புதன், 25 பிப்ரவரி, 2009

துபாய் சர்வதேச திருக்குர்ஆன் மனனப் போட்டி : யேமன் மாணவர் முதல் பரிசு பெற்றார்







துபாய் சர்வதேச திருக்குர்ஆன் மனனப் போட்டி : யேமன் மாணவர் முதல் பரிசு பெற்றார்
துபாயில் வருடந்தோறும் சர்வதேச அளவிலான திருக்குர்ஆன் மனனப் போட்டிகள் அமீரக துணை அதிபர்,பிரதம அமைச்சர் மற்றும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் முஹம்மத் பின் ராஷித் அல் மக்தூம் அவர்கள் ஆதரவில் நடத்தப்பட்டு வருகிறது.
12 ஆவது ஆண்டாக இவ்வாண்டு நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா சனிக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா கண்டங்களைச் சேர்ந்த எண்பத்து ஐந்து நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்ட இப்போட்டியில் யேமன் நாட்டைச் சேர்ந்த ஃபரேஸ் அல் அகம் முதல் பரிசைப் பெற்றார். இவருக்கு திர்ஹம் 250,000 பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.
இரண்டாவது இடத்தை லிபியாவின் நூர் அல் தீன் அல் யூனுஸி ( திர்ஹம் 200,000 ), மூன்றாவது இடத்தை குவைத்தின் காலித் அல் அய்னதி ( திர்ஹம் 150,000 ),
நான்காவது இடத்தை ஆப்கானிஸ்தானின் மஜித் அப்துல் சமி ( திர்ஹம் 65,000 ),
ஐந்தாவது இடத்தை மொரிடானியாவின் அஹ்மது தாலிப் ( திர்ஹம் 60,000 )
ஆறாவது இடத்தை லெபனானின் நாஜிஹ் அல் யாஃபி ( திர்ஹம் 55,000 ),
ஏழாவது இடத்தை தைவானின் உசாமா சியான் ( திர்ஹம் 50,000 ),
எட்டாவது இடத்தை பாகிஸ்தானின் முஹம்மது ஆலம் ( திர்ஹம் 45,000 ),
ஒன்பதாவது இடத்தை கேமரூனின் அப்துல் ரஹ்மான் அட்ஜித் ( திர்ஹம் 40,000 ),
பத்தாவது இடத்தை சவுதி அரேபியாவின் தாரிக் அல் லுஹைதான் ( திர்ஹம் 35,000 ) பெற்றனர்.
மேலும் பத்தாவது இடத்திற்குப் பின்னர் எண்பது சதவிகிதம் மதிப்பெண் பெற்றவர்களுக்கு திர்ஹம் 30,000 மும், 70 முதல் 79 சதவிகித மதிப்பெண் பெற்றவர்களுக்கு திர்ஹம் 25,000 ம், 70 சதவிகிதத்திற்கு குறைவாக மதிப்பெண் பெற்றவர்களுக்கு திர்ஹம் 20,000 மும் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.
சிறந்த குரல் வளத்துக்கான பரிசு மலேசிய மாணவருக்கு வழங்கப்பட்டது.
இப்பரிசுகளை துபாயில் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முஹம்மத் பின் ராஷித் அல் மக்தூம் வழங்கினார்.