திங்கள், 14 மார்ச், 2011

தோல்வி பயம் தொகுதி மாறும் கருணாநிதி!!

சென்னை: பிப் 13, பல முறை எம்.எல்.ஏ., வாகவும் 5 முறை முதல்வராகவும் இருந்து வரும் கருணாநிதி இந்த முறை சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட மாட்டார் என கூறப்படுகிறது. சொந்த ஊரான திருவாரூர் தொகுதியில் போட்டியிடுவார் என்று தெரிகிறது. இதற்கான தேர்தல் பணிகளை துவக்க கட்சி தொண்டர்களுக்கு தலைமை கழகம் சிக்னல் கொடுக்கப்பட்டு விட்டதாக தெரிகிறது. ஏன் இவர் சேப்பாக்கம் தொகுதியைவிட்டு மாறுகிறார் என்றால் அங்கு முஸ்லிம்கள் வாக்கு அதிகம் அது இந்த முறை நிச்சயம் கருணாநிதிக்கு கிடைக்காது என்பாதால்தான்.

அதே போன்று, துறைமுகம் தொகுதியில் போட்டியிடும் அன்பழகன், காங்., கைவசம் வைத்துள்ள நாகை மாவட்டம் மயிலாடுதுறை தொகுதியைத் தேர்வு செய்துள்ளாராம். அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் உறவினர் ஒருவர் அங்கு சேர்மனாக இருப்பதால், அவரது ஆதரவோடு அந்தத் தொகுதியில் எளிமையாக ஜெயித்து விடலாம் என, பன்னீர்செல்வம் ஆலோசனை கூறி யுள்ளார்.


துணை முதல்வர் ஸ்டாலினும் ஆயிரம் விளக்கு தொகுதியை விட்டுக் கொடுத்து, பாளையங்கோட்டை தொகுதி பக்கம் போய்விடலாம் என திட்டமிட்டுள்ளார்.


ஆற்காடு வீராசாமி சென்னை புறநகர் பகுதியில் இருந்து செங்கல்பட்டு தொகுதியைத் தேர்வு செய்து வைத்துள்ளார்.


இப்படி தி.மு.க., வின் மூத்த தலைகள் சென்னையை விட்டு வெளியேற முடிவெடுத்துள்ளதற்கு காரணம், சென்னையில் தி.மு.க., கவுன்சிலர்களின் அடாவடி அதிகரித்து, மக்கள் எரிச்சலில் இருப்பதால், பாதகமாகி விடுமோ என்ற அச்சமே காரணம் என கூறப்படுகிறது

சிந்திக்கவும் : ஈழ தமிழர் படுகொலையை வேடிக்கை பார்த்த தமிழர் தலைவர் என்று சொல்லிகொள்ளும் மு.கருனாதியையும் அவரது கூட்டணியையும் தோற்கடிக்க தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு மாபெரும் தோல்வியை கொடுக்கவேண்டும். அப்போதுதான் முள்ளி வாய்காலில் கொல்லப்பட்ட நமது தொப்புள் கொடி உறவுகளின் படுகொலைக்கு இதுதான் முதல் பழிவாங்கும் நடவடிக்கை. அடுத்த நடவடிக்கைகள் இனிமேல் தொடரும் என்பதற்கு இது ஒரு முகவுரையாக இருக்கட்டும். திருவாரூர் இல்லை தமிழகத்தின் ஏந்த மூலையில் இவர் நின்றாலும் தோற்பது நிச்சயம்.

source : http://www.dinamalar.com/ , http://www.sinthikkavum.net/