இறை நம்பிக்கை கொண்டோர்களே உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் பயபக்தயுடையோர் ஆகலாம். திருக்குர்ஆன் 2:183)
திங்கள், 1 ஆகஸ்ட், 2011
ஹிந்துத்துவா பயங்கரவாதிகளை ஒடுக்க புதிய சட்டம் வருகிறது!
ஞாயிறு, 20 மார்ச், 2011
5000 முஸ்லிம்களை கொலைச்செய்ய திட்டமிட்ட ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் – சி.பி.ஐ

ஹைதராபாத்:இந்தியாவில் 5000 முஸ்லிம்களை கூட்டுப் படுகொலை செய்ய ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்ததாக மத்திய புலனாய்வு ஏஜன்சியான சி.பி.ஐ மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் நம்பள்ளி நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள 76 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளது.
ஆர்.எஸ்.எஸ்ஸின் தேசியத் தலைவர் இந்திரேஷ் குமாரின் தலைமையில் கடந்த 2006-ஆம் ஆண்டு நவம்பர் முதல் தேதி குஜராத் சமாஜம் கெஸ்ட் ஹவுஸில் கூடிய கூட்டத்தில் இதற்கு தேவையான திட்டங்கள் தீட்டப்பட்டதை சி.பி.ஐ கண்டறிந்துள்ளது.
ஆர்.எஸ்.எஸ் தலைவர்களான சுனில் ஜோஷி, ராம்ஜி கல்சங்கரா, லோகேஷ் சர்மா, பிரக்யாசிங் தாக்கூர் ஆகியோர் இந்த சதி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துக் கொண்டனர்.
முஸ்லிம்கள் அதிகமாக திரளும் வழிப்பாட்டுத் தலங்களைத்தான் இவர்கள் குறிவைத்துள்ளார்கள். இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்காக பல்வேறு குழுக்கள் உருவாக்கப்பட்டு அவர்களுக்கான பணிகள் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளன.
ஆயுதங்களை சேகரிப்பதற்கான பொறுப்பு கல்சங்கரா மற்றும் லோகேஷ் சர்மாவிடம் ஒப்படைக்கப்பட்டது. சுனில் ஜோஷிக்கு நிதியை திரட்டுவதற்கான பொறுப்பு. ஆர்.டி.எக்ஸ்-டி.என்.டி கலவை வெடிக்குண்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்டதையும் சி.பி.ஐ கண்டறிந்துள்ளது.
மக்கா மஸ்ஜித் மற்றும் அஜ்மீர் தர்கா, மலேகான் ஆகிய இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகள் இத்திட்டத்தின் அடிப்படையில் நிகழ்த்தப்பட்டதாக கருதப்படுகிறது.
source : http://www.thoothuonline.com/
சனி, 26 பிப்ரவரி, 2011
ஹிந்துத்துவா பெண் சாமியாரும்!!ஹிந்துத்துவா பெண் முதல்வரும்!! சந்திப்பு.


இந்த சந்திப்பிற்கு பின், உமாபாரதி கூறுகையில், பிரக்யாசிங் தாகூர் ஒரு அப்பாவி பெண் மகாராஜ் அவ்தேசஷ் ஆன்ந்த என்பவரின் அமைதி தியானத்தை பின்பற்றுபவர். அவரை குண்டுவெடிப்பு சம்பவத்தில் அவருக்கு எந்த தொடர்பு இருக்காது இவ்வாறு அவர் கூறினார். இந்த உமாபாரதி ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர். இவர் பார்மசூதி இடிப்பில் முக்கிய பங்காற்றினார் என்பது குறிப்பிட தக்கது. ஒரு முன்னாள் முதல்வர் ஒரு பயங்கரவாத இயக்கத்தின் சாமியாருக்கு வெளிப்படையாக ஆதரித்து கருத்து சொல்லி இருப்பது பேரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சனி, 29 ஜனவரி, 2011
ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் - உளவுத்துறை, பாதுகாப்புத்துறை ஏஜன்சிகள் - தொடர்புகள் குறித்து விசாரணை தேவை - கருத்தரங்கில் கோரிக்கை
குண்டுவெடிப்புகளில் இதுவரை பாதுகாப்பு ஏஜன்சிகள் விசாரணையை திசைதிருப்பிக் கொண்டிருந்தன என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது. இச்சூழலில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங், சி.பி.எம்.பொலிட் பீரோ உறுப்பினர் சீதாராம் யெச்சூரி, லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் ஆகிய அரசியல் பிரமுகர்களும், பிரபல மனித உரிமை ஆர்வலர்களும் பங்கேற்ற இக்கருத்தரங்கில் இத்தகையதொரு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இக்கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:
நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளில் கைதுச் செய்யப்பட்ட முஸ்லிம்களைக் குறித்த வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும்.
சிறையிலடைக்கப்பட்ட நிரபராதிகளான முஸ்லிம் இளைஞர்களை உடனடியாக விடுதலைச்செய்ய வேண்டும்.
கடந்த 20 ஆண்டுகளில் நடைபெற்ற அனைத்து குண்டுவெடிப்புகளைக் குறித்தும் மீண்டும் விசாரணை நடத்தவேண்டும்.
ஆர்.எஸ்.எஸ், அபினவ்பாரத், வி.ஹெச்.பி, பா.ஜ.க, பஜ்ரங்தள் ஆகிய அமைப்புகளுடன் உளவுத்துறை, பாதுகாப்பு ஏஜன்சிகள், போலீஸ் அதிகாரிகள், அதிகாரவர்க்கத்தினர், ராணுவத்தினர் ஆகியோருக்கான தொடர்புகளைக் குறித்து விசாரணை நடத்தவேண்டும்.
குண்டுவெடிப்பு வழக்குகளில் கைதுச் செய்யப்பட்டு சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்ட அப்பாவிகள் அனைவருக்கும் நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும்.
மேலும் அவர்களின் புனர்வாழ்வுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஹிந்துத்துவா அமைப்புகளுக்கு நிதியுதவி அளிப்பவர்களைக் குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும். மேலும் இவர்களுக்கு அரசியல் ரீதியாக, தார்மீக ரீதியாக ஆதரவளிப்பவர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
ஹிந்துத்துவா அமைப்புகளுக்கு வெளிநாட்டிலிருந்து வரும் பணம் குறித்து விசாரணை நடத்தப்படவேண்டும்.
பயங்கரவாத வழக்குகளில் நிரபராதிகளை சிக்கவைத்து சித்திரவதைச் செய்து அவர்களை நிர்பந்தப்படுத்தி பொய் வாக்குமூலங்களை வாங்கிய அனைத்து போலீஸ் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் இவர்களுக்கு வழங்கிய பதவிகளையும், பதக்கங்களையும் பறிக்கவேண்டும்.
மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு பின்னர் விடுதலைச் செய்யப்பட்ட அப்பாவி முஸ்லிம் இளைஞர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டுமென்ற நீதிமன்ற தீர்ப்பைக் குறித்து கேள்வி எழுப்பும் ஆந்திர அரசின் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.
பொய்வழக்குகள் சுமத்தப்பட்டதால் மனோரீதியாக பாதிக்கப்பட்ட இளைஞர்களிடம் மாநில அரசுகள் மன்னிப்புக் கோரவேண்டும்.
பயங்கரவாத வழக்குகளில் ஆஜராகமாட்டோம் என தீர்மானம் நிறைவேற்றிய பார் கவுன்சில் நடவடிக்கையை இக்கருத்தரங்கு கண்டிக்கிறது.
முஸ்லிம்களுக்கெதிராக பொய்ச் செய்திகளை பரப்பும் ஊடகங்களின் பங்கினையும் இக்கருத்தரங்கம் கண்டிக்கிறது.
புலனாய்வு ஏஜன்சிகள் ஆதாரங்கள் என போலியாக முன்வைக்கும் காரியங்களை கண்ணை மூடிக்கொண்டு நம்பிவிடக் கூடாது என ஊடகங்களை இக்கருத்தரங்கம் வேண்டிக் கொள்கிறது.
இக்கருத்தரங்கில் அமீத் சென் குப்தா, ஆஷிஷ் கேதான், சித்தரஞ்சன் சிங், ஃபராஹ் நக்வி, இஃப்திகார் கிலானி, பிரசாந்த் பூஷன், சத்ய சிவராம், சீமா முஸ்தஃபா, சுபாஷ் கட்டாடே, சுரேஷ் கைர்னார், தருண் தேஜ்பால், பிருந்தா க்ரோவர் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
ஞாயிறு, 26 டிசம்பர், 2010
அஜ்மீர் குண்டுவெடிப்பு: பரபரப்பு துப்பு கிடைத்துள்ளது.

ஜெய்ப்பூர்,டிச.26:அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட காரை ராஜஸ்தான் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் சில முக்கிய துப்பு கிடைத்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 2007-ம் ஆண்டு ஆஜ்மீர் தர்கா வளாகத்தில் குண்டு வெடித்தது. இதில் 3 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் இந்து தீவிரவாத அமைப்புகளுக்குத் தொடர்பு இருப்பதை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். இதுதொடர்பாக ஒரு சாமியார் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் தற்போது முக்கியத் துப்பு கிடைத்துள்ளதாக ராஜஸ்தான் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர். குண்டுவெடிப்புச் சம்பவத்தின்போது வெடிகுண்டுகளை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்பட்ட காரை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஐவரின் பெயர் விவரங்களும் கிடைத்துள்ளன. இது முக்கியத் திருப்பமாக கருதப்படுகிறது.
கருப்பு நிற சான்ட்ரோ காரைத்தான் இந்த தீவிரவாத செயலுக்கு குற்றவாளிகள் பயன்படுத்தியுள்ளனர். இந்த கார் மத்தியப் பிரதேசத்தில் வைத்து சிக்கியுள்ளது. இந்தக் காரில் வெடிகுண்டுகளை வைத்துக் கொண்டு ம.பி. மாநிலம் இந்தூரிலிருந்து குஜராத் மாநிலம் கோத்ராவுக்குப் போயுள்ளனர். கோத்ராவிலிருந்து அஜ்மீருக்கு பஸ்ஸில் வைத்துக் கொண்டு சென்றுள்ளனர் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஏற்கனவே அஜ்மீர் சம்பவம் தொடர்பாக ஆர்எஸ்எஸ் தலைவர் இந்திரேஷ் குமார் என்பவரை சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக விசாரித்துள்ளனர் என்பது நினைவிருக்கலாம்
திங்கள், 6 செப்டம்பர், 2010
மொடாஸா குண்டுவெடிப்பு:மோட்டார்பைக் ஃபாரன்ஸிக் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது

மொடாஸா குண்டுவெடிப்பை ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நடத்தியதாக கருதப்படுகிறது. 15 வயது சிறுவனான ஜைனுல் ஆபிதீன் கோரி என்றச் சிறுவன் கொல்லப்பட்ட இக்குண்டுவெடிப்பில் 10 பேருக்கு காயம் ஏற்பட்டது.
ரமலான் தொழுகை ஆரம்பிக்க இருக்கவே மஸ்ஜிதின் முன்பகுதியில் வைத்து இக்குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. குண்டுவெடிப்பிற்கு பயன்படுத்திய மோட்டார் பைக்கின் நம்பர் ப்ளேட் போலி என்று பின்பு கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த மோட்டார் பைக்கினை வாரணாசி ஃபாரன்ஸிக் சோதனைக் கூடத்தில் சோதித்த பொழுதும் சம்பவத்தின் மர்மம் நீங்கவில்லை. குஜராத் போலீசாரின் விசாரணை திருப்தியளிக்காத காரணத்தால் இந்த ஆண்டு ஜூன் மாதம் இவ்வழக்கு விசாரணை என்.ஐ.ஏவிடம் ஒப்படைக்கப்பட்டது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்