சனி, 16 அக்டோபர், 2010

பாலஸ்தீன் : சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட சிறுவன் கைது

ஆக்கிரமிப்பு ஜெருசலம்: யூதரால் வேண்டுமென்றே நடத்தப்பட்ட கார் விபத்தில் கடும் காயமடைந்த பாலஸ்தீன் சிறுவர்களில் ஒருவர் இஸ்ரேலிய போலிசாரால் கைதுசெயப்பட்டுள்ளான். முஹம்மத் சராப் என்ற பாலஸ்தீனிய சிறுவன் விபத்தில் ஏற்பட்ட கடும் காயங்களுக்கான சிகிச்சை முடிவதற்கு முன்னரே கைதுசெயப்பட்டுள்ளான்.
பாலஸ்தீன் சில்வண் மாவட்டத்தில் யூத குடியேற்றங்களுக்கான தலைவர் டேவிட் பீறி தனது காரில் வந்துகொண்டிருக்கும் போது முஹம்மத் சராப் உட்பட பல பாலஸ்தீனிய சிறுவர்கள் மீது வேண்டுமென்றே தனது கரை ஏற்றினார். அவர்கள் அனைவரும் தனது காரின் மீது கல்லெறிந்ததாகவும் அதற்காகவே தான் தனது காரை அவர்களின் மீது இடிக்க நேர்ந்தது என்று பின்னர் அவர் கூறியிருந்தார்

ஆனால் அடிபட்ட சிறுவன் முதல் அடியிலே தூக்கி வீசப்பட்டு பின் மீதும் அதே காரில் மீண்டும் அடிபட்டது அப்படியே புகைப்படமாக தொலைகாட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது, பாலஸ்தீனியர்களின் மீது இஸ்ரேலிய அத்துமீறிய செயல்கள் இந்த புகைப்படம் மூலம் மீண்டும் தெரியவந்துள்ளது

பாலஸ்தீனிய கைதிகளுக்கான அமைப்பு ஒன்று சிறுவன் முஹம்மத் சராபை விடுதலை செய்ய முயற்சி செய்யுமாறு அனைத்து மனித உரிமை அமைப்புகளுக்கும் கோரிக்கை விடுத்துள்ளது, மேலும் இஸ்ரேல் தனது கடும் குற்றங்களை மறைக்க சிறுவர்களின் மீதான தனது தீவிர வாதத்தை கட்டவிழ்த்து விடுகின்றது என்றும் அவ்வமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: