சனி, 16 அக்டோபர், 2010

செவிட்டு ஊமை அரசாங்கம் - ஜீலானி கடும் தாக்கு

அரசு அமைத்துள்ள 3 நபர் குழுவினால் எந்தப் பலனும் ஏற்படப்போவதில்லை என ஹூரியத் மாநாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. இந்திய அரசாங்கம் செவிடாகவும் ஊமையாகவும் செயல்படுவதாக இந்த அமைப்பின் தலைவர் சையத் அலிஷா ஜீலானி பத்திரிகையாளர்களிடம் பேசும்போது கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

இந்திய அரசு காஷ்மீரில் சமாதானத்தை ஏற்படுத்த பத்திரிகையாளர் திலிப் பட்கான்கர், பேராசிரியர் ராதா குமார் மற்றும் தகவல் ஆணையர் அன்ஸாரி ஆகியோர் அடங்கிய ஒரு குழுவை நியமித்துள்ளது. இந்தக்குழு காஷ்மீரிகள் பிரிவினைவாதிகள் உட்பட அனைத்து தரப்பினரிடமும் அவர்களது கருத்துக்களை கேட்கும் என அரசு தெரிவித்திருந்தது. இந்தக் குழு சம்பந்தமாக பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


இது சம்பந்தமாக ஜீலானி மேலும் கருத்துக் கூறுகையில் தாங்கள் அளித்துள்ள 5 அம்சத் திட்டத்தின் அடிப்படையில் அரசு செயல்படாதவரை காஷ்மீர் பிரச்னையில் எந்த மாற்றமும் ஏற்படாது என தெரிவித்தார்.

காஷ்மீரை ஒரு சர்ச்சைக்குள்ளான பகுதி என அரசு அறிவிக்க வேண்டும், அனைத்து அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்படவேண்டும், ஆயுதம் தாங்கிய படைகள் காஷ்மீரிலிருந்து வெளியேற வேண்டும், மனித உரிமைகள் மீறப்படுவது நிறுத்தப்பட வேண்டும் மற்றும் பொதுமக்களின் படுகொலைகளுக்கு காரணமான பாதுகாப்பு படையினர் கைது செய்யப்படவேண்டும் என்ற ஐந்து கோரிக்கைகளை ஹூரியத் அமைப்பு முன்வைத்துள்ளது.


ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் யாஸின் மாலிக் இந்தக் குழு அமைத்தது சம்பந்தமாக எந்தக் கருத்தையும் தெரிவிக்க மறுத்து விட்டார்.

கருத்துகள் இல்லை: