ஆர்.எஸ்.எஸ். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆர்.எஸ்.எஸ். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 12 பிப்ரவரி, 2011

தீவிரவாதத்​தை இஸ்லாம் உருவாக்கவி​ல்லை - அப்துல் கலீம்

தீவிரவாதத்தை இஸ்லாம் உருவாக்கவில்லை என்னும் செய்தியை மக்களிடம் சேர்ப்பிப்பது தான் தனது முக்கியப் பணி, என 2007 மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பின் உண்மைச் சம்பவங்களை வெளியே கொண்டுவர காரணமாக மாறிய அப்துல் கலீம் கூறினார். கலீமின் மாசற்ற உள்ளத்தையும் நிரபராதி என்பதையும் உணர்ந்து, குண்டு வெடிப்புக்குப் பின்னால் செயல்பட்ட ஆர் எஸ் எஸ் தலைவர் சுவாமி அசிமானந்தா விசாரணைக் குழுவிடம் உண்மையை ஒப்புக் கொண்டார்.

நிரபராதிகளைக் கொலை செய்வதை இஸ்லாம் ஒருபோதும் அனுமதிக்காது. மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பின் பொறுப்பை ஏற்றுக் கொள்ள மிகப்பெரிய துன்புறுத்தல்கள், கொடுமைகள் சகித்துக் கொண்டே மேலே கூறிய வார்த்தைகளை, விசாரணைக் குழுவிடம் கூறினேன். என்று கலீம் தெளிவுபடுத்தினார்.

சாலிடாரிட்டி இளைஞர் இயக்கம், கேரளாவில் ஏற்பாடு செய்த பயங்கரவாத எதிர்ப்புக் கூட்டத்தில் பங்கேற்க வருகை தந்த கலீம், கொச்சியில் செய்தியாளர்களிடம் பேசும்போது மேற்கண்டவாறு கூறினார்.

குற்ற உணர்வில் சுவாமி அசிமானந்தா தவறை ஒப்புக்கொண்டபோது முஸ்லிம் சமுதாயம் மட்டுமல்ல ஒட்டு மொத்த நாடே தப்பித்துக் கொண்டது. நாட்டின் முக்கிய மதத்தைச் சேர்ந்தவர்கள் ஒருவருக்கொருவர் சந்தேகப்படுகின்ற நிலைமை நாட்டின் வளர்ச்சியையே பாதித்துள்ளது.

நாட்டின் எந்த பகுதியில் குண்டு வெடிப்பு ஏற்ப்பட்டாலும் அதற்குப்பின்னால் முஸ்லிம் தீவிரவாதிகள்தான் உள்ளனர் என பொய் பிரச்சாரம் செய்கின்ற மிகப்பெரியதொரு குழு நாட்டில் செயல்பட்டு வருகிறது.

நான் மட்டும் சிறையிலிருந்து வெளியே வந்ததில் எந்த பலனும் கிடையாது, செய்யாத குற்றங்களுக்காக நூறுக்கணக்கான நபர்கள் நாட்டின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். கேரளமும் விதிவிலக்கல்ல. செய்யாத குற்றத்துக்காக பல ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த மதானி மீண்டும் சிறைச்சென்றதும் இவ்வாறுதான். மதானியின் விடுதலைக்கான போராட்டத்தில் தன்னால் இயன்ற முறையில் பங்கேற்பேன். சிறையிலுள்ள நிரபராதிகளின் விடுதலைக்காக பாடுபடுவதுதான் மீதமுள்ள வாழ்நாட்களின் எனது லட்சியம் என கலீம் கூறினார்.

மக்கா மஸ்ஜிது குண்டு வெடிப்பின் பெயரால் 2007 ல் கைது செய்யப்பட்டேன். அப்போது எனக்கு வயது 19 . மருத்துவம் படித்துக் கொண்டிருந்தேன் 18 மாதங்கள் சிறைவாசத்திற்குப் பிறகுதான் விடுதலையானேன். மருத்துவப்படிப்பை தொடர்வதற்கான முயற்சியையும் அதிகாரிகள் தடைசெய்தனர். நான் குண்டு வெடிப்புக்காகப் புறப்பட்டவன் என்று கல்லூரி நிர்வாகிகளிடம் போலீசார் கூறினர், அத்தோடு படிப்பு முடங்கிப்போனதால் சட்டக்கல்லூரியில் சேர்ந்தேன். அதற்கிடையில் சிறையிலுள்ள ஒரு சகோதரனை சந்தித்தபோது சிம் கார்டை கொடுத்ததாக ஒரு பொய் வழக்கைச் சுமத்தி மீண்டும் கைது செய்தனர்.

என்னை சிறையில் தள்ளியது மட்டுமல்லாமல் எனது குடும்பத்தை வாடகை வீட்டிலிருந்து வெளியேற்றினர். படுத்து உறங்குவதற்கு கூட இடமின்றி தவித்தார் எனது தாய்.
தண்டனை அனுபவிப்பவர்களின் விடுதலைக்காக சட்டப்படிப்பு தொடர்ந்து படிக்கிறேன் எனவும் அப்துல் கலீம் கூறினார்.

திங்கள், 20 டிசம்பர், 2010

அஜ்மீர், மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு & ஆர்.எஸ்.எஸ். அமைப்பு: ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்.

புதுடெல்லி,டிச.19:அஜ்மீர் தர்கா, ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்புகளின் சூத்திரதாரியான சுனில் ஜோஷியை கொலைச்செய்தது அவரது ஆர்.எஸ்.எஸ் கூட்டாளிகள்தான் என மத்திய பிரதேச மாநில போலீஸ் தெரிவித்துள்ளது.ராஜஸ்தான் ஏ.டி.எஸ் கைதுச்செய்த குண்டுவெடிப்புடன் தொடர்புடைய ஹர்ஷத் பாய் சோலங்கிதான் இந்த வாக்குமூலத்தை அளித்துள்ளான்.

அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் அப்ரூவராக மாற சுனில் ஜோஷி திட்டமிட்டிருந்த காரணத்தினால் கொலைச் செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸ் கருதுகிறது. ஆனால், ஜோஷி தன்னை தனிப்பட்ட ரீதியில் அவமதித்ததற்காகத்தான் இந்த கொலை நடந்தது என சோலங்கி வாக்குமூலம் அளித்துள்ளான். கடந்த இரண்டு வாரமாக சோலங்கி போலீஸ் காவலில் உள்ளான். சோலாங்கியுடன் அவனது இரண்டு கூட்டாளிகளான ஆனந்த் கட்டாரியா, வசுதேவ் பார்மர் ஆகியோரையும் போலீஸ் கைதுச் செய்துள்ளது.

ஹிந்துத்துவா தீவிரவாதிகள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள்களும், காணாமல் போன மொபைல் ஃபோன்களும் கைப்பற்றப்பட்டன. கொலைக்கு பிறகு குற்றவாளிகள் குஜராத்தின் பல பகுதிகளிலும் தலைமறைவாக இருந்ததாக போலீஸ் கூறுகிறது.கடந்த 2007 ஆம் ஆண்டு அக்டோபரில் அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. 2007 டிசம்பரில் சுனில் ஜோஷி கொல்லப்படுகிறார். அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பை நிகழ்த்திய பிறகு திவாஸ் மாவட்டத்தின் சுற்றுவட்டாரத்தில் அமைந்துள்ள சுனா கடனில் வசித்துவந்தார் ஜோஷி.

ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததைத் தொடர்ந்து வீட்டிலிருந்து வெளியே வந்த சில நிமிடங்களுக்குள்ளாகவே துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து போனார். சுனில் ஜோஷி கொல்லப்படுவதற்கு முன்பு அவரை அழைத்தது சோலங்கி என்பது தொலைபேசி அழைப்புகளை பரிசோதித்தபோது தெரியவந்தது. சோலங்கிதான் சுனில் ஜோஷியை துப்பாக்கியால் சுட்டுள்ளார். கட்டாரியா, பார்மர், மோஹன், மெஹுல் ஆகியோர் சோலங்கிக்கு உதவியுள்ளனர்.

கைதுச் செய்யப்பட்ட ஆனந்த இந்தூரைச் சார்ந்தவராவார். பார்மர் திவாஸ் மாவட்டத்தைச் சார்ந்தவர். குஜராத்தைச் சார்ந்த மோஹன், மெஹுல் ஆகியோர் உட்பட ஐந்துபேர் தலைமறைவாக உள்ளனர். அஜ்மீர் குண்டுவெடிப்புடன் புனே, பெஸ்ட் பேக்கரி வழக்குகளிலும் குற்றவாளியான சோலங்கி குஜராத்தைச் சார்ந்தவனாவான். மேலும் குற்றவாளிகளை கைதுச் செய்வதற்காக போலீஸ் தேடுதல் வேட்டை நடத்திவருகிறது.

கொலைக்காக பயன்படுத்திய மாருதி வேனும், ஆயுதங்களும் கண்டெடுக்கப்படவில்லை. கொல்லப்பட்ட சுனில் ஜோஷி உள்ளூர் காங்கிரஸ் தலைவரை கொலைச்செய்த வழக்கில் தேடப்படும் குற்றவாளியாவார். கட்சி வட்டாரங்களில் குருஜி என்றழைக்கப்படும் இவன் ராகுல், மோகன், மெஹுல், ஜயந்தி உஸ்தாத் ஆகிய போலி பெயர்களில் செயல்பட்டுள்ளான்.
இரண்டு வாரங்களுக்கு முன்பாக கைதுச் செய்யப்பட்ட சோலங்கியை ராஜஸ்தான் ஏ.டி.எஸ்ஸிடம் ஒப்படைத்த பிறகு மத்திய பிரதேச மாநில போலீஸ் இத்தகவல்களை வெளியிட்டுள்ளது.

செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்

திங்கள், 25 அக்டோபர், 2010

அஜ்மீர் குண்டுவெடிப்பு: குற்றப்பத்திரிகையில் மூத்த ஆர்.எஸ்.எஸ் தலைவரின் பெயர்

ஜெய்பூர்,அக்.24:ஆர்.எஸ்.எஸ் தலைவர்களில் ஒருவரான இந்திரேஷ் குமாரும் ஆறு முக்கிய ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களும் அஜ்மீர் குண்டுவெடிப்புத் தொடர்பான ரகசியக் கூட்டத்தில் பங்கெடுத்ததாக, அஜ்மீர் குண்டுவெடிப்புத் தொடர்பாக ஐந்து ஆர்.எஸ்.எஸ், அபினவ் பாரத் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில் ராஜஸ்தான் தீவிரவாத எதிர்ப்புப்படை குறிப்பிட்டுள்ளது.

இந்திரேஷ் குமாருக்கு குண்டுவெடிப்பில் தொடர்புக் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், ஆனால் இவ்வழக்கில் அவரைகுற்றவாளியாக்கவில்லை எனவும் 806 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையில் ஏ.டி.எஸ் கூறுகிறது.

2005 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி குஜராத்தி விருந்தினர் மாளிகையில் நடந்த ரகசியக் கூட்டத்தில்தான் இந்திரேஷ் குமாரும், இதர ஆறு முக்கிய் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளும் பங்கேற்றுள்ளனர்.

வெளியானது உண்மை மட்டுமே எனவும், இதனை அங்கீகரிக்க ஆர்.எஸ்.எஸ் தயாராக வேண்டுமெனவும் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். சிறிது காலம் கழிந்தால் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களின் பெயர்களும் அவர்களின் பங்கும் பின்னணியும் வெளிவரும். சத்தியம் வெளிவரும், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என அசோக்கெலாட் தெரிவித்தார்.

அதேவேளையில், தனது பெயர் அரசியல் தூண்டுதலின் காரணமாகவே குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளதாக இந்திரேஷ்குமார் தெரிவிக்கிறார்.

தேசத்துரோகிகளை(?) பாதுகாக்கும் அரசு, தேச விசுவாசிகளூக்கெதிராக(?) போர் புரிகிறது. அநீதிக்கெதிராக நீதிமன்றத்தை அணுகுவோம் இவ்வாறு இந்திரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்திரேஷ்குமாரின் பெயர் குற்றப்பத்திரிகையில் இல்லை என ஆர்.எஸ்.எஸ் கூறுகிறது. இத்தகையச் செய்திகளை சட்டரீதியாக எதிர்க் கொள்வோம் என ஆர்.எஸ்.எஸ் செய்தித் தொடர்பாளர் ராம் மாதவ் தெரிவிக்கிறார்.முழுதாக மையப்படுத்து

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்,

சனி, 28 ஆகஸ்ட், 2010

புதிய தலைமுறை ஷாகாக்கள் வெறிச்சோடுகின்றன: ஆர்.எஸ்.எஸ் கவலை

புதுடெல்லி,ஆக26:இளைஞர்கள் கூட்டமாக ஷாகாக்களிலிருந்து வெளியேறுவது ஆர்.எஸ்.எஸ் தலைமையை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
சங்க்கின் கொள்கைகளோடு புதிய தலைமுறையின் ஆர்வமின்மையை மாற்றுவதற்கான வழிகளை ஆராய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது ஆர்.எஸ்.எஸ் தலைமை. இதற்கான ‘ஜாக்ரன்’ என்ற பெயரில் பிரச்சாரத்தை துவக்க ஆர்.எஸ்.எஸ் ஆலோசித்து வருகிறது. முடியுமென்றால், இந்த மாதத்திலேயே இப்பிரச்சாரத்தை துவக்க சர் சங்க் சாலக் மோகன் பாகவத் உத்தரவிட்டுள்ளார்.

இல்லாவிட்டால் சங்க் கடுமையான பிரச்சனையை சந்திக்க வேண்டிவரும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.முன்னரே ஆர்.எஸ்.எஸ்ஸை கைகழுகும் வேலை ஆரம்பித்திருந்தாலும் தற்போது தேசத்தில் நடந்த பல குண்டுவெடிப்புகளில் ஹிந்தத்துவா இயக்கங்களின் பங்கு வெட்ட வெளிச்சமானதைத் தொடர்ந்து இது வேகத்தில் நடைபெறுகிறது.

ஆர்.எஸ்.எஸ்ஸின் அரசியல் முகமூடியான பா.ஜ.க ஆட்சியில் அமர்ந்த பொழுதிலும் ராமர்கோவில் நிர்மாணம் உள்ளிட்ட விவகாரங்களில் ஒன்றும் செய்யவியலாதது ஒரு பிரிவினரை நிராசைக்குள்ளாக்கி ஆர்.எஸ்.எஸ்ஸிலிருந்து வெளியேறத் தூண்டியது.

அதேவேளையில்,ஆர்.எஸ்.எஸ் வெளியேக்கூறும் போலிக் கோஷங்களான சமூக சேவை, தேசபக்தி ஆகியவற்றை நம்பி சங்க்கில் இணைந்தவர்கள்களுக்கு தற்பொழுது வெளிவந்த ஆர்.எஸ்.எஸ்ஸின் பயங்கரவாதத் தொடர்பு அங்கலாய்க்க வைத்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்ஸை மட்டுமல்ல அதன் முன்னணி அமைப்புகளான பா.ஜ.க, வி.ஹெச்.பி, பஜ்ரங்தள் ஆகிய அமைப்புகளையும் கடுமையாக பாதித்துள்ளது.

மலேகான் குண்டுவெடிப்பில் ஹிந்துத்துவா பயங்கரவாத அமைப்பான அபினவ் பாரத்தின் பங்கினை, மும்பைத்தாக்குதலின் பொழுது மர்மமான முறையில் கொல்லப்பட்ட ஏ.டி.எஸ் தலைவர் ஹேமந்த் கர்காரே கண்டுபிடித்த பொழுது சங்க்பரிவாரின் பயங்கரவாதத் தொடர்பு வெட்டவெளிச்சமானது.குண்டுவெடிப்பு வழக்கில் கைதான பிரக்யாசிங் தாக்கூர் உள்ளிட்டவர்களுடனான தொடர்பு தெளிவான பிறகும் ஆர்.எஸ்.எஸ் அதனை மறுத்து வந்தது.

ஆனால் அஜ்மீர், மக்கா மஸ்ஜித் ஆகிய இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ்ஸைச் சார்ந்த தலைவர்கள் கைதானதும்,குற்றவாளிகள் பட்டியலில் இடம் பிடித்ததும் பயங்கரவாதச் செயலில் ஆர்.எஸ்.எஸ்ஸின் பங்கை மறுக்கமுடியாத சூழல் ஏற்பட்டது.

தங்கள் உறுப்பினர்களின் பயங்கரவாதத் தொடர்பை ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைமை சமீபத்தில் ஒப்புக்கொண்டது. இந்த சூழலில்தான் ஆர்.எஸ்.எஸ்ஸை விட்டு வெளியேறுபவர்களை தடுக்க புதிய திட்டத்துடன் ஆர்.எஸ்.எஸ் தலைமை சோதனையில் இறங்கியுள்ளது.

தேசிய அளவில் ஐம்பதினாயிரம் ஷாகாக்கள் இருப்பதாக கூறிய ஆர்.எஸ்.எஸ்ஸின் புதிய புள்ளிவிபரப்படி 40 ஆயிரத்திற்கு அருகிலாகும். டெல்லியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாயிரம் ஷாகாக்கள் செயல்பட்டுவந்தன. தற்பொழுது 1500 ஆக குறைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ விபரம் தெரிவிக்கிறது.

ஆனால் புதிய தலைமுறை இளைஞர்கள் ஷாகாக்களுக்கு வராததன் காரணம் வேலை நெருக்கடி என சப்புக்கட்டுகிறார் ஆர்.எஸ்.எஸ் தலைவர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்