திருவனந்தபுரம்,அக்.28:கேரள மாநிலத்தில் முதன்முறையாக தேர்தலில் பங்கேற்ற சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா கட்சி குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளது.
கேரள மாநிலத்தில் நான்கு நகரசபை வார்டுகளிலும், ஒரு ப்ளாக் பஞ்சாயத்திலும், ஏழு கிராமப் பஞ்சாயத்துகளிலும் எஸ்.டி.பி.ஐ வேட்பாளர்கள் வெற்றிப் பெற்றுள்ளனர்.
பல்வேறு கட்சிகளைக் கூட்டணியில் உட்படுத்தி தேர்தல் களத்தில் குதித்த இடதுசாரி மற்றும் காங்கிரஸ் முன்னணியினருக்கு மத்தியில் தன்னந்தனியாக போட்டியிட்ட எஸ்.டி.பி.ஐ தனது தேர்தல் பிரவேசத்தை கம்பீரமாக்கியது.
வெற்றிப்பெற்ற இடங்களைத் தவிர 70க்கும் மேற்பட்ட வார்டுகளில் நிர்ணய சக்தி என்பதையும் எஸ்.டி.பி.ஐ நிரூபித்துள்ளது.
பத்தணம் திட்டா நகரசபையில் குலசேகரபதி வார்டில் எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் எஸ்.ஷைலஜா 244 வாக்குகளைப் பெற்று வெற்றிப் பெற்றார்.
தொடுப்புழா நகரசபையில் கீரிக்கோடு வார்டில் எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் ஆசிரியை சுபைதா 310 வாக்குகளைப் பெற்று வெற்றிப் பெற்றுள்ளார்.
சொர்ணூர் நகரசபையில் முனிசிபல் வார்டில் எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் பீனா 270 வாக்குகளைப் பெற்று வெற்றிப் பெற்றார்.
கண்ணூர் நகரசபையில் கஸனாக்கோட்டை தெற்கு வார்டில் எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் ஸுஃபீரா 325 வாக்குகளைப் பெற்று வெற்றிப் பெற்றார்.
எர்ணாகுளம் மாவட்டம் வாழைக்குளம் ப்ளாக் பஞ்சாயத்தில் வஞ்சிநாடு டிவிசனில் 1903 வாக்குகளின் பெரும்பான்மையோடு எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் பேராசிரியர் அனஸ் வெற்றிப் பெற்றுள்ளார்.
முவாற்றுப்புழா பேராசிரியரின் கை வெட்டி வழக்கில் கைதுச் செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளவர் அனஸ் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
வெற்றிப்பெற்ற இதர வேட்பாளர்கள் வருமாறு:
எர்ணாகுளம் கடுங்கல்லசூர் பஞ்சாயத்து வார்டு-எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் ஸீனத் ஜலீல் வெற்றி
ஈராட்டுப்பேட்டை பஞ்சாயத்து வார்டு - எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் என்.என்.பினு நாராயணன் வெற்றி
கொல்லம் குலசேகரபுரம் பஞ்சாயத்து வார்டு - எஸ்.டி.பி.ஐ ஆதரவுப் பெற்ற சுயேட்சை வேட்பாளர் எ.நாஸர் வெற்றி
கொல்லம் போருவழி பஞ்சாயத்து வார்டு - எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் ஆமினா வெற்றி
திருச்சூர் சுவனூர் பஞ்சாயத்து வார்டு - எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் ஷாமிலா கபீர் வெற்றி
காஸர்கோடு மஞ்சேஷ்வரம் பஞ்சாயத்து வார்டு - எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் மைமூனா வெற்றி
மலப்புரம் வேங்கர பஞ்சாயத்து வார்டு - எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் கதீஜா ஷம்ஸ் வெற்றி
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்,
இறை நம்பிக்கை கொண்டோர்களே உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் பயபக்தயுடையோர் ஆகலாம். திருக்குர்ஆன் 2:183)
கேரள மாநிலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கேரள மாநிலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வியாழன், 28 அக்டோபர், 2010
புதன், 11 ஆகஸ்ட், 2010
கேரள உள்துறை அமைச்சர் இல்லம் நோக்கி கண்டனப் பேரணி நடத்தியது எஸ்.டி.பி.ஐ
திருவனந்தபுரம்,ஆக11:கேரள மாநிலம் முழுவதும் எஸ்.டி.பி.ஐ.யின் உறுப்பினர்கள் வீடுகளில் எவ்வித காரணமுமின்றி ரெய்டு நடத்தியதையும், அரசியல் சுதந்திரம் மறுக்கப்படுவதையும் கண்டித்து கேரள மாநில உள்துறை அமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லத்தை நோக்கி எஸ்.டி.பி.ஐ. கண்டனப் பேரணியை நடத்தியது.
எஸ்.டி.பி.ஐ.யின் வளர்ச்சி பிரபல அரசியல் தலைவர்களின் தூக்கத்தை கெடுப்பதாக அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் எம்.கே.மனோஜ் குமார் பேரணியை துவக்கி வைத்து உரையாற்றினார்.
மேலும் அவர் கூறியதாவது,"ஆதிவாசி-தலித்-முஸ்லிம்கள் ஆகியோர் அரசியலில் வலுப்பெறுவதை எந்த விலை கொடுத்தும் தடுப்பது அவர்களுக்கு அத்தியாவசியமான ஒன்றாகும். தனிநபர்களையும், இயக்கங்களையும் மக்கள் மத்தியிலிருந்து தனிமைப்படுத்த மிகவும் எளிதான வழி தீவிரவாத மற்றும் பயங்கரவாத குற்றச்சாட்டுகளாகும்.நூற்றாண்டுகளாய் இதனை சில சமூகங்களுக்கு எதிராக இங்குள்ள மனுவாதிகள் உறுதியான நோக்கத்துடன் செயல்படுத்திக் கொண்டுள்ளார்கள்.
தற்பொழுது எஸ்.டி.பி.ஐ.யையும் இப்பட்டியலில் இடம்பெறச் செய்ய சதித்திட்டங்கள் ரகசியமாக தீட்டப்பட்டு வருகின்றன.இதனை ஜனநாயகரீதியில் தடுத்து தோற்கடிப்போம் என மனோஜ்குமார் தெரிவித்தார். இப்பேரணியில் திரளான மக்கள் கலந்துக்கொண்டனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
எஸ்.டி.பி.ஐ.யின் வளர்ச்சி பிரபல அரசியல் தலைவர்களின் தூக்கத்தை கெடுப்பதாக அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் எம்.கே.மனோஜ் குமார் பேரணியை துவக்கி வைத்து உரையாற்றினார்.
மேலும் அவர் கூறியதாவது,"ஆதிவாசி-தலித்-முஸ்லிம்கள் ஆகியோர் அரசியலில் வலுப்பெறுவதை எந்த விலை கொடுத்தும் தடுப்பது அவர்களுக்கு அத்தியாவசியமான ஒன்றாகும். தனிநபர்களையும், இயக்கங்களையும் மக்கள் மத்தியிலிருந்து தனிமைப்படுத்த மிகவும் எளிதான வழி தீவிரவாத மற்றும் பயங்கரவாத குற்றச்சாட்டுகளாகும்.நூற்றாண்டுகளாய் இதனை சில சமூகங்களுக்கு எதிராக இங்குள்ள மனுவாதிகள் உறுதியான நோக்கத்துடன் செயல்படுத்திக் கொண்டுள்ளார்கள்.
தற்பொழுது எஸ்.டி.பி.ஐ.யையும் இப்பட்டியலில் இடம்பெறச் செய்ய சதித்திட்டங்கள் ரகசியமாக தீட்டப்பட்டு வருகின்றன.இதனை ஜனநாயகரீதியில் தடுத்து தோற்கடிப்போம் என மனோஜ்குமார் தெரிவித்தார். இப்பேரணியில் திரளான மக்கள் கலந்துக்கொண்டனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)