வியாழன், 4 ஏப்ரல், 2013

பர்மா முஸ்லிம்களைக் காக்கக் கோரி தமுமுக ஆர்பாட்டம் !

கடந்த சில நாட்களாக பர்மாவில் கொல்லப்படும் முஸ்லிம்கள் குறித்து அங்கிருக்கும் நம் உறவினர் ஏதேனும் செய்யுங்கள் என நம்மிடம் மனம் வருந்திய போது இதை நாம் தமுமுகவின் தலைமையின் கவனத்திற்கு கொண்டு சென்றோம் ! அல்ஹம்து லில்லாஹ்.சகோதரர் அன்சாரி அவர்கள் இதை உடனடியாக நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவெடுத்து ஆர்பாட்டத்தை அறிவித்ததுடன் நம்மையும் தொடர்பு கொண்டு அதை தெரிவித்தார்.
இதை அடுத்து சென்னையில் நேற்று பர்மாவில் கொல்லப்படும் முஸ்லிம்களைக் காக்க மத்திய அரசையும் , ஐ.நா.வையும் கோரியும் , மஸ்ஜிதுகளையும் மதரசாக்களையும் குறி வைத்து கொளுத்தும் பவுத்த இன வெறி அரசிக் கண்டித்தும் தமுமுக சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது!
இதில் மூத்த தலைவர் ஹைதர் அலி அவர்களும் , ஹாஜாகனி ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். இதில் நான் , அப்துல் ஹமிது ஆகியோர் கண்டன முழக்கங்களை எழுப்பினோம் !
நீண்ட நாட்களுக்குப் பின் பர்மா முஸ்லிம்களுக்காக் தமுமுகவின் போராட்டக் களத்தில் கலந்து கொண்டது ஆறுதலாய் இருந்தது!

ஒ.யு.ரஹ்மத்துல்லாஹ் தைமியா , ஹாருன் ரசித் உள்ளிட்ட மாநில நிர்வாகிகளும் , வாடா சென்னை தென் சென்னை மாவட்ட நிர்வாகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு ஆவேசத்துடன் பர்மாவுக்கு எதிராக முழங்கினர்!.



கருத்துகள் இல்லை: