புதன், 27 பிப்ரவரி, 2013

கூத்தாநல்லூர் லக்ஷ்மாங்குடி மதுக்கடை9637ஐ அகற்றக் கோரி மனிதநேய மக்கள் கட்சி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்


லக்ஷ்மாங்குடி மதுக்கடை 9637ஐ அகற்றக் கோரி 24-2-2013 அன்று மாலை 5 மணி அளவில் உதிராபதீஸ்வரர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு கு.ரவிச்சந்திரன் (கைப்பிள்ளை ) அனைத்து வர்த்தர்கள் சங்கம் லக்ஷ்மாங்குடிமற்றும் S.A.முஹம்மது அஸ்ரப் பத்ரு சபை செயலாளர் ஆகியோர் முன்னிலையிலும் P.M .A.சீனி ஜெஹபர் சாதிக் மனிதநேய மக்கள் கட்சி நகர செயலாளர் அவர்கள் தலைமையிலும் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திமுக, காங்கிரஸ், மதிமுக, அனைத்து வர்த்தர்கள் சங்கம் , பத்ரு சபை, செல்வி ஸ்டோர் நடராஜன், A.R. காம்ப்ளெக்ஸ் நிறுவனர் ஆகிய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :

1. 2-4-2013 அன்று காலை 10.30 மணி அளவில் மதுக்கடையை அகற்றக் கோரி லக்ஷ்மாங்குடியில் சாலை மறியல் செய்வது

2. சமபந்த பட்ட அதிகாரிகளுக்கு மனுக்களை அனுப்புவது

3. சாலை மறியல் செய்வது சமபந்தமாக அனைத்து கட்சிகளிடம் ஆலோசனை கேட்பது

4. சாலை மறியல் செய்வது சமபந்தமாக பொதுமக்களிடம் தெரிவித்து அவர்களை போராட்டத்திற்கு திரட்டுவது

மனிதநேய மக்கள் கட்சி
கூத்தாநல்லூர் நகரம்

கருத்துகள் இல்லை: