புதன், 6 பிப்ரவரி, 2013

திறக்கப்படுமா கூத்தாநல்லூர் புதிய பேருந்து நிலையம்?




பல ஆண்டுகளாக கூத்தாநல்லூர் புதிய பேருந்து நிலையம் மூடி கிடக்கின்றது அதை எந்த ஆட்சியாளர்கள் வந்தாலும் கண்டு கொள்வதில்லை அதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை, இந்த பேருந்து நிலையம் இரவு நேரங்களில் குடிகாரர்களின் கூடாரமாகவும் செயல்படுகிறது காவல்துறை கண்காணிப்பு என்ற பெயரில் கண்துடைப்பு செய்கிறது, வயதான மூதாட்டி ஒருவர் உணவு இல்லாமல் தவித்து கொண்டு இருக்கிறார், ஆம்னி பேருந்துகள் நிறுத்தப்படும் அளவுக்கு அங்கு போதுமான வசதிகள் இல்லை
இதனை திருவாரூர் மாவட்ட ஆட்சியர், தாசில்தார் , காவல்துறை கண்காணிப்பாளர், ஆகியோர் கவனத்தில் கொண்டு கூத்தாநல்லூரில் இருந்து மன்னார்குடி,தஞ்சாவூர்,திருச்சி,திருவாரூர்,நாகப் பட்டினம்,காரைக்கால்,மயிலாடுதுறை ஆகிய ஊர்களுக்கு பேருந்து வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுகொள்கிறோம்,
இல்லை என்று சொன்னால் இன்சாஹ் அல்லாஹ் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மன்னார்குடி to திருவாரூர் தேசிய நெடுஞ்சாலைகள் ஸ்தம்பிக்கும் வகையில் லக்ஷ்மாங்குடியில் மாபெரும் சாலைமறியல் போராட்டம் நடை பெறும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்
இவண்.
மனிதநேய மக்கள் கட்சி - கூத்தாநல்லூர் நகரம்

கருத்துகள் இல்லை: