திங்கள், 25 மார்ச், 2013

கூத்தாநல்லூர் நகர தமுமுக மமக ஆலோசனைக் கூட்டம்




கூத்தாநல்லூர்  நகர தமுமுக மமக ஆலோசனைக் கூட்டம் 23-03-2013 அன்று மாலை 6 மணி அளவில் கூத்தாநல்லூர்  நகர தமுமுக அலுவலகத்தில் திருவாரூர் மாவட்ட தமுமுக மமக தலைவர் K.H. நூர்தீன் அவர்கள் தலைமையிலும் தமுமுக மாவட்ட செயலாளர் A குத்துபுதீன், கூத்தாநல்லூர் மமக நகர செயலாளர் P.M.A  சீனி ஜெஹபர் சாதிக், கூத்தாநல்லூர் தமுமுக நகர செயலாளர் K.H.காதர் முஹைனுதீன் இவர்களது முன்னிலையிலும் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. 2-4-2013 அன்று காலை 10 மணி அளவில் லக்ஷ்மாங்குடி மதுக்கடை 9637ஐ  அகற்ற கோரி   மனிதநேய மக்கள் கட்சி தலைமையில் அனைத்து கட்சிகள் ஒன்று சேர்ந்து பொதுமக்களை திரட்டி சாலை மறியல் செய்வது.

2.29-03-2013 அன்று மாலை 4 மணி அளவில் கூத்தாநல்லூர் நகர தமுமுக மமக பொதுகுழு கூட்டம் நடத்துவது

3.பொதுகுழு கூட்டத்தில் வரவு செலவு கணக்கு தாக்கல் செய்வது

4.பொதுகுழு கூட்டத்தில் தமுமுக மமக மாணவர் இந்தியா ஆகியவற்றிற்கு வார்டு வாரியாக புதிய நிர்வாகிகள் மற்றும் புதியஅணி நிர்வாகிகள் தேர்தெடுப்பது

5. புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது

6. இலங்கை போர்குற்றம் தொடர்பாக உண்ணாவிரதம் இருந்து வரும் மாணவர்களுக்கு ஆதரவு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது.

கலந்து கொண்டவர்கள் விபரம்:
மாவட்ட வழக்கறிங்ஞர் அணி செயலார் N.R. பிரபு தாஸ் BA.BL.,
மன்னை ஒன்றிய மமக செயலாளர் M.A.ஜெஹபர் அலி
மக்கள் செய்தி தொடர்பாளர் : M .A அப்துல் வஹாப்.M A .,,
செயற்குழு உறுப்பினர்கள் :P .M. செய்யது அஹமது, K.ஹாஜா மைதீன் 
நகர மாணவரணி செயலாளர் K.H. அக்பர் சலீம்
நகர மாணவர் இந்தியா செயலாளர் S .A  நூருல் அமீன்
நகர இளைஞரணி  செயலாளர்: ஜபருல்லாஹ்
நகர தொண்டரணி செயலாள: N .S N ஹாரூன் ரசீது
மற்றும் 35 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
முடிவில் நகர தமுமுக துணை செயலாளர் M அபுதாஹிர் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை: