ஞாயிறு, 10 மே, 2009

மனிதநேய மக்கள் கட்சியினரிடம் ஆதரவு திரட்டிய ப.சிதம்பரம்




மே 05,2009,
சிவகங்கை : மனிதநேய மக்கள் கட்சியினரிடம் காங்., வேட்பாளர் ப.சிதம்பரம் ஆதரவு திரட்டினார்.சிவகங்கையில் அக்கட்சி அலுவலகத்திற்கு சென்ற ப.சிதம்பரம், நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார்.



அவர் பேசுகையில், 'யார், யாரை ஆதரிப்பது என்பதை தீர்மானிக்கும் தேர்தல் இது. இறுதி சுற்றில் காங்.,-பா.ஜ., கட்சிகள் உள்ளன. வரலாற்று சிறப்புமிக்க சிவகங்கை தொகுதியில் மதவாதத்திற்கு இடமில்லை. மதசார்பற்ற அரசு அமைப்பதில் தடுமாற்றம் ஏற்படுவது வேறு, மாத வெறி அரசு அமைப்பது வேறு. மதசார்பற்ற அரசு அமைப்பதில் காங்., தடுமாறுவது இல்லை. இக்கொள்கையில் உறுதியாக, பிடிவாதமாக இருக்கிறோம். நான் ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவன். அந்த கூண்டில் என்றும் அடைபட மாட்டேன். த.மு.மு.க., வோடு நெருங்கிய நட்பில் இருந்து வருகிறோம். இளையான்குடி பகுதியில் முஸ்லிம் கல்வி நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் தொகுதி வளர்ச்சி நிதி ஒதுக்கியதன் மூலம் இந்த நட்பு தொடர்கிறது. நட்பு வலுப்பட சிறுபான்மையினர் எங்களை ஆதரிக்க வேண்டும்' என்றார்.செயலாளர் முகமது நயீப், நகர செயலாளர் அபுல்கலாம் ஆசாத், முன்னாள் எம்.எல்.ஏ., ராஜசேகரன், த.மு.மு.க., நகர் செயலாளர் இப்ராகிம் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை: