புதன், 27 ஜனவரி, 2010

தமுமுக தலைமையகத்தில் குடியரசு தினவிழா



சென்னை, மண்ணடி, வட மரைக்காயர் தெருவிலுள்ள தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைமையகத்தில் நமது நாட்டின் 61வது குடியரசு தின விழா நடைபெற்றது. தமுமுக தலைவர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் கொடியேற்றியேற்றினார். கொடியேற்றிய பின்னர் உரையாற்றிய தமுமுமு தலைவர் 'எழுச்சி மிகு இந்தியாவைக் கட்டமைப்போம் . தாயகத்தை உலகின் முதல் தர வல்லரசாக்க உறுதி ஏற்போம். இந்தியக் குடியரசை வடிவமைக்க பாடுபட்ட தியாக சீலர்களை நினைத்துப் பார்க்க கடமைப் பட்டுள்ளோம். அரசியல் சாசனத்தின் அனைத்து நோக்கங்களும் நிறைவேறவும் இந்திய மக்களின் வாழ்வில் அனைத்து வளங்களும் நலன்களும் கிடைத்திட வாழ்த்துகிறோம்.

இல்லாமை, கல்லாமை நீங்க பாடுபடுவோம். எழுச்சி மிகு இந்தியாவை கட்டமைக்க இந்த குடியரசு நாளில் உறுதி ஏற்போம்' என அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியின் போது தொண்டரணிச் செயலாளர் முகம்மது ரபிக் மற்றும் வட சென்னை மற்றும் தென் சென்னை தமுமுக நிர்வாகிகள் மற்றும் மக்கள் உரிமை குடும்பத்தினர்களும் முன்னிலை வகித்தனர்.


கருத்துகள் இல்லை: