வியாழன், 5 ஜூன், 2014

மகாராஷ்டிரா புனேவில் ஓர் அப்பாவி இளம் முஸ்லிம் பொறியாளர் ஹிந்து ராஷ்டிர சேனா தீவிரவாதிகளால் அடித்தே கொலை

நிகில் திகோன் எனும் சமூக விரோதி, '#நிஹால்_கான்' என்ற போலி முகநூல் ஐடியில், முஸ்லிம் போல தம்மை காட்டிக்கொண்டு...

(ஸ்ரீ கிருஷ்ணா கமிஷன் படி) மும்பை கலவர கொலைகார ரவுடி பால் தாக்கரே பற்றியும் போர்-ஒப்பந்த விதிமுறை மீறல் செய்து நயவஞ்சகமாக அப்சல் கானை கொலை செய்த மராட்டிய கோழை சிவாஜி பற்றியும் மற்றும் சில இந்து கடவுள்கள் பற்றியும் படம் போட்டதால்...

மகாராஷ்டிரா புனே வில் வன்முறை கலவரம் எல்லாம் நடந்து அதில் எவ்வித தொடபும் இல்லாத முஹ்ஸின் ஸாதிக் சேக் என்ற ஓர் அப்பாவி இளம் முஸ்லிம் பொறியாளர் ஹிந்து ராஷ்டிர சேனா தீவிரவாதிகளால் அடித்தே கொலை செய்யப்பட்டார். இன்னாலில்லாஹி...

அந்த மாதிரி தப்பான போட்டோக்கள் உருவாக்கி முகநூல் & வாட்ஸ்அப்பில் புனைப்பெயரில் போட்ட அந்த ஆள் மாறாட்ட நய வஞ்சகன் நிகில் திகோன் கைது செய்யப்பட்டு விட்டான்.

தொழுது விட்டு தொப்பியுடன் வீட்டுக்கு திரும்பிக்கொண்டு இருந்த தாடி வைத்திருந்த ஓர் இளம் பொறியாளரை கலவரம் நிகழ்த்தி கொலை செய்த 13 ஹிந்து ராஷ்டிர சேனா தீவிரவாதிகளும் கைது செய்யப்பட்டு விட்டனர்.

இதுபோன்ற மதக்கலவரம் நிகழ்த்தி கொலை செய்வோருக்கு மத்திய அரசு ஊக்கம் அளிக்காமல் அதில் ஈடுபடுவோர் மீது மிகக்கடுமையான தண்டனை தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கவே எனக்கு கூசுகிறது..!


போட்டோ : நிகில் திகோன் & முஹ்ஸின் ஸாதிக் சேக்
நன்றி:
https://www.facebook.com/photo.php?fbid=703680953000559&set=a.217678638267462.52731.100000759817071&type=1&theater 

கருத்துகள் இல்லை: