செவ்வாய், 17 ஜூன், 2014

ஆதார் அட்டை திட்டம் கைவிடப்படுகிறது. கூடங்குளம் ?

ஆதார் அட்டை திட்டம் கைவிடப்படுகிறது. கூடங்குளம் ?

ஏறக்குறைய 50,000 ஆயிரம் கோடி செலவு செய்து செயல்படுத்தப்பட்ட இந்த திட்டம் கைவிடப்படுகிறது.

இதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

ஆனால் பலதலைமுறைகளை பாதிக்கும் கூடக்குளம் அணுஉலை திட்டத்தை கைவிடச்சொன்னால், அனைவரும் சேர்ந்து, தேசவிரோதி, அந்நிய நாட்டு கைகூலி என்கிறார்கள்.

17,000 கோடி செலவு செய்தாகி விட்டது இனி திட்டத்தை நிறுத்த முடியாது என்றவர்கள் இப்போது என்ன சொல்லப்போகிறார்கள்.

ஏன் அணு உலை கட்ட ஆரம்பிக்கும்போதே அதை நிறுத்த போராட வில்லை என்று வரலாறு தெரியாமல் சொல்பவர்கள் ,சொன்னவர்கள் இப்போது ஆதார் அடையாள அட்டை திட்டத்தை ஏன் நிறுத்த வேண்டும்.

இரண்டுமே தேவைஇல்லாத ஆணி தான்.

அணு உலையை விட இரு மடங்கு செலவு செய்த திட்டத்தையே நிறுத்தும் போது பல தலைமுறைகளை பாதிக்கும் அணு மின் திட்டத்தை ஏன் நிறுத்தக்கூடாது ???????

நன்றி - ஜான் கிறிஸ்டோபர்

கருத்துகள் இல்லை: