சனி, 7 ஜூன், 2014

சிறுபான்மை சகோதர்கள் மீது அக்கறை கொண்டு என் அருமை நண்பர்களே..சகோதர்களே ஒரு முக்கிய செய்தி ஒரு நிமிடம் இங்கு வாருங்கள் சகோ

சிறுபான்மை சகோதர்கள் மீது அக்கறை கொண்டு என் அருமை நண்பர்களே..சகோதர்களே.. கீழே கொடுக்கப்பட்ட அறிக்கையை காப்பி செய்து அதன் இறுதியில் உங்கள் பெயர் குறிப்பிட்டு CM Cellக்கு மெயில் அனுப்புமாறு அன்புடன் கேட்டுகொள்கிறேன்.. மெயில் முகவரி கீழே உள்ளது.

--------------------------------------------
மாண்புமிகு தமிழக முதல் அமைச்சர் அவர்களே , மரியாதையை குரிய உள்துறை செயலாளர் அவர்களே,நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தஞ்சை மாவட்டம் மல்லிபட்டினம் என்ற கிராமத்தில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் கருப்பு முருகானந்தம் வாக்கு சேகரிக்க வந்ததும் அங்கு ஜனநாயக முறைப்படி கருப்புக்கொடி காண்பித்ததும் அங்கு உள்ள ஊர்மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்...

அதற்க்கு காரணம் அவரது கடந்த காலத்தில் மதமோதல் பேசும் அதன் மூலம் அவர்மீது வழக்கு 18க்கு மேல் இருப்பதினாலும் தான்...மேலும் கருப்பு முருகானந்தம் வாக்கு சேகரிக்க ஊருக்குள் வந்தால் மதமோதல்கள் மற்றும் மல்லிபட்டினம் இந்து முஸ்லிம் நல்ல ஒழுக்கமுள்ள நட்பு கெட்டுவிடும் என்று முன் எச்சரிக்கை கொண்டு ஊர் மக்கள் அனைவரும் ஜனநாயக முறைப்படி கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதை பொறுத்து கொள்ள முடியாத தஞ்சை பாரதிய ஜனதா வேட்பாளர் கருப்பு முருகானந்தம் மற்றும் அவர்கள் கட்சிசார்ந்த தொண்டர்கள் பொதுமக்கள் மீது கடுமையான தாக்குதலில் ஈடுபட்டனர்.... பின்னர் இது வழக்காக்க காவல்துறை மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது....

தற்போது இதற்காக சமாதான கூட்டமைப்பு ஒன்று நடந்துள்ளது... நாளையும் ஆர் டி ஒ அலுவலகத்தில் சமாதான கூட்டம் இருதரப்பில் நடை பெற உள்ளது....

தமிழகம் அமைதி பூங்காவாக இருந்துவரும் நேரத்தில் இந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக மல்லிபட்டினம் ஊர் பொதுமக்கள் கருப்புக்கொடி காட்டியமைக்கு பழிவாங்கும் எண்ணம் கொண்டு மல்லிபட்டினத்தில் மத மோதல்கள் நிகழ்த்தி அமைதியை சீர்குலைக்க வேண்டும் என்று தீய எண்ணத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு சில பயங்கரவாதிகள் மல்லிபட்டினம் கடைவீதிகளில் வந்து நான்கு நபர்களை வெட்டிவிட்டு சென்று உள்ளனர். .. இதில் வெட்டப்பட்டதில் ஒருவர் ஊனமுற்றவர்.இதை தாங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள்....

மற்றும் சில நாட்கள் கழித்து அடையாளம் தெரியாத சில நபர்களால் ரங்கசாமி என்ற நபர் புதுபட்டினத்தில் வெட்டபட்டார்... அவர் தான் வெட்டப்பட்ட காரணம் தன குடும்ப சொத்து தகராறு என்று தெளிவாக கூறியும் இருக்கிறார்....

ஆனால் காவல்துறை திட்டமிட்டு இதை திசை திருப்பும் வகையில் மல்லிபட்டினத்தில் நடந்த சம்பவத்திற்கு இஸ்லாமியர்கள் பழிவாங்கி உள்ளதாக ஊகத்தின் அடிப்படைகளில் எந்தவித ஆதாரம் இல்லாமல் அப்பாவிகளை கைது செய்தவண்ணம் உள்ளனர்...இதை யாரோ தூண்டுதலில் மூலம்தான் காவல்துறை அப்பாவிகளை கைது செய்து சித்தரவதை செய்கின்றனர்....

இது சம்மந்தமாக 10 அப்பாவி இஸ்லாமியர்கள் மீது எப் ஐ ஆர் போட்டும் உள்ளனர். சம்மந்தப்பட்ட நபரோ சொத்து தகராறு என்று தெளிவாக கூறியபின்பும் கூட காவல்துறை அப்பாவிகள் கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்த வண்ணம் உள்ளது.

தமிழகத்தில் நிலவுக்கூடிய அமைதி சீர்குலைக்க நோக்கம் மற்றும் மத மோதல்கள் வழிவகுக்கும் விதமாக காவல்துறை போக்கும் மிகுந்த கவலையையும் தருகிறது... உங்களிடம் நீதி வேண்டி இது சம்மந்தமாக சரியான அணுகுமுறைக்கு உத்தரவு விடும்படி கேட்டுகொள்கிறோம்.

பொய் வழக்கு போட்டு கைது செய்யப்பட்ட அப்பாவிகள் அனைவரும் விடுவிக்க தாங்கள் உத்தரவு விடவேண்டும். இது குறித்து தாங்கள் விரைந்து நடவடிக்க எடுக்கவேண்டும்.

இது சம்மந்தமாக அதிராம்பட்டினம் - மல்லிபட்டினம், உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் அமைதி திரும்ப தாங்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க கேட்டுகொள்கிறோம்.

இந்த பகுதி காவல்துறையினர் வேண்டும் என்றே சில சமூகவிரோதிகள் தூண்டுதலினால் இன்னமும் ஊருக்குள்ளேயே இருந்துகொண்டு மக்களை அச்சுறுத்தி வருகின்றனர்....இது குறித்து தாங்கள் விரைந்து செயல்பட்டு அமைதி நிலவ செய்யும்படி வேண்டிகேட்டுகொள்கிறோம் .

இப்படி தமிழக குடிமகன்.

--- பெயர் ---

Contact us : Chief Minister's Special Cell ,
Secretariat,
Chennai - 600 009.
Phone Number : 044 - 2567 1764
Fax Number : 044 - 2567 6929
E-Mail : cmcell@tn.gov.in

---------------------------------------------------------------------------------------

நம் சமுதாய சகோதர்களே...வெட்டு குத்து கூச்சல் என்று இல்லாமல் இதை காப்பி செய்து தாங்களும் தாங்களுடிய கடமை செய்யுமாறு கேட்டுகொள்கிறேன்......

கருத்துகள் இல்லை: