செவ்வாய், 8 ஜூலை, 2014

காரைக்காலில் சங்பரிவார தீவிரவாதிகளின் ஆட்சியா ?





நேரு நகர் பள்ளிவாசல் கஞ்சி காய்ச்சும் பிரச்சனை
உண்மை நிலையும், விளக்கமும்
நேரு நகர், பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில நோன்பு கஞ்சி காய்ச்ச கடந்த 3.7.2014 அன்று காரைக்கால் மாவட்ட அரசு நிர்வாகம் தடை விதித்துள்ளது என்பதை அனைவரும் அறிந்ததே. ஏன் இந்த தடை ?
நேரு நகர், பள்ளிவாசலுக்கு சொந்தமான இடம் நேரு நகர் பள்ளிவாசலுக்கு பக்கத்திலேயே உள்ளது, அந்த இடத்தில் நோன்பு கஞ்சி காய்ச்சுவதர்க்காக அந்த பள்ளிவாசல் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இதனை அறிந்த ஹிந்து முன்னணி, RSS, BJP யினர் அப்பகுதியில் உள்ள மக்களிடம் முஸ்லிம்கள் இந்த இடத்தில் பள்ளிவாசல் கட்டப்போகிறார்கள், மேலும் முஸ்லிம்களின் அடக்கஸ்தலமும் (சுடுகாடு) இங்கு அமைக்க போகிறார்கள் என்ற ஒரு தவறான செய்தியை பரப்பி, இதே விஷயத்தை அரசின் கவனத்திற்கும் கொண்டு சென்று முஸ்லிம்களுக்கு சொந்தமான அந்த இடத்தில் நோன்பு கஞ்சி காய்ச்ச விட கூடாது என வலியுறுத்தி போராட்டமும் நடத்தினார்கள். காரைக்கால் மாவட்ட அரசு நிர்வாகமும் முறையாக நேரு நகர் பள்ளிவாசல் நிர்வாகிகளிடத்தில் விசாரிக்காமல் அந்த இடத்தில் கஞ்சி காய்ச்ச கூடாது என கூறி ஏராளமான போலிசாரையும் அங்கு குவித்தனர், தகவல் அறிந்த தமுமுக மற்றும் ஒரு சில ஜமாஅத் இளைஞர்கள் அங்கு கூடி அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே, ஒன்றும் செய்ய முடியாத மாவட்ட நிர்வாகம் அரசு சமாதான கமிட்டி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தது. அந்த சமாதான கூட்டத்தில் கலந்து கொண்ட நேரு நகர் ஜமாஅத் நிர்வாகிகள், தமுமுக மற்றும் சமூக ஆர்வலர்கள் பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் நோன்புக்காக கஞ்சி மட்டுமே காய்ச்சுகிறோம், சங்பரிவார் குறிப்பிடுவதுபோல் பள்ளிவாசலோ, முஸ்லிம்களின் அடக்கஸ்தலமோ (சுடுகாடு) அங்கு அமைக்க மாட்டோம் என தெரியப்படுத்திய பின் மாவட்ட ஆட்சியர் நீங்கள் கஞ்சி காய்ச்சி கொள்ளுங்கள், நான் சங்பரிவார் அமைப்புகளோடு பேசுகிறேன் என்று முஸ்லிம்கள் தரப்பில் கூறினார். பின்னர் சங்பரிவார் அமைப்புகளோடு பேசியபோது அவர்கள் விடாப்பிடியாக அங்கு கஞ்சி காய்ச்ச கூடாது, அந்த இடத்திற்கு சீல் வைக்க வேண்டும் என வலியுறுத்தியதோடு மட்டுமல்லாமல் மீண்டும் போராட்டம் நடத்தினர்.
அனைத்து உண்மை நிலைகளையும் தெரிந்திருந்தும் புதுச்சேரி அரசும், மாவட்ட நிர்வாகமும் சங்பரிவார்களின் பொய் கூற்றை ஏற்று முஸ்லிம்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் சென்ற 3.7.2014 அன்று இரவு 9 மணிக்கு பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முஸ்லிம்கள் கஞ்சி காய்ச்ச கூடாது என தடை விதித்து, பள்ளிவாசல் இடத்திற்கும் சீல் வைத்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்டு உரிமைக்காக போராடி கொண்டிருந்த முஸ்லிம்களிடத்தில் காரைக்கால் நகர காவல்துறை ஆய்வாளர் பாலசந்தர், நகர துணை ஆய்வாளர் ராஜசேகர் ஆகியோர் நடந்து கொண்ட விதமும், முஸ்லிகளின் மத உணர்வுகளை கொச்சை படுத்தும் விதமாக பேசிய பேச்சும் முஸ்லிம்களுக்கு எதிராக இந்த புதுச்சேரி N.R .காங்கிரஸ் அரசு முழுமையாக செயல்படுகிறதோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த விஷயத்தில் ஒரு உண்மையை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். அமைதி நகரமான காரைக்காலில் அனைத்து மதத்தினரும் மிக நெருக்கமாக அண்ணன் தம்பிகளாக வாழ்ந்து வருகிறோம். இந்த ஒற்றுமையை குழைக்கும் விதமாக சங்பரிவார் அமைப்புகள் ஒரு தவறான தகவலை ஹிந்து மக்கள் மத்தியில் பரப்பி அதன் மூலம் காரைக்காலின் அமைதியை குழைக்க முயல்கின்றனர். அதற்கு இந்த அரசும் ஒத்து போகிறதோ சென்ற சந்தேகம் நடுநிலையாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இந்த ஜனநாயக நாட்டில் முஸ்லிம்களுக்கு சொந்தமான இடத்திலேயே முஸ்லிம்கள் நோன்பு கஞ்சி கூட காய்ச்ச தடை என்றால், ஜமாஅத்களும், சமூக சிந்தனையாளர்களும் கண்டனத்தை பதிவு செய்ய வேண்டாமா ? தமுமுக மற்றும் ஒரு சில ஜமாஅத் இளைஞர்கள் மட்டுமே உரிமைக்காக போராடும்போது ஜமாஅத்கள் ஒதுங்கியிருப்பது ஏன் ? அல்லாஹ்வுடைய பள்ளிக்கு ஆபத்து என்றால் போராடாமல் அரசியல் விளையாட்டு தேவையா? ஜமாஅத் பெரியவர்களே, இளைஞர்களே இப்படியே விட்டால் இன்று நேரு நகர் பள்ளிவாசல், நாளை ?
சிந்திப்போம்! அல்லாஹ்வுக்கு அஞ்சி கொள்வோம். தகவல்
Abdul Rahim

காரைக்கால் அன்சாரி facebook பக்கத்தில் இருந்து

கருத்துகள் இல்லை: