திங்கள், 14 ஜூலை, 2014

மதானிக்கு ஜாமின் வழங்கியது சுப்ரீம் கோர்ட்


பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள, கேரளாவின், மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர், அப்துல் நாசர் மதானிக்கு, ஜாமின் வழங்கி, சுப்ரீம் கோர்ட் நேற்று உத்தரவிட்டது.

உடல் நலக்குறைவால் அவதிப்படும் அவர், தன்னை ஜாமினில் விடுவிக்கக் கோரி, பல முறை கர்நாடக கோர்ட்டுகளில் மனு செய்தார். அங்கு அந்த மனுக்கள் தள்ளுபடியானதை அடுத்து, சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்தார். அந்த வழக்கு நேற்று விசாரிக்கப்பட்டது. மதானி சார்பில், மூத்த வழக்கறிஞர், பிரஷாந்த் பூஷன் ஆஜரானார். 

கர்நாடக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜாமின் வழங்கக் கூடாது என வாதாடினார்.  கர்நாடக சிறையிலேயே, மதானிக்கு, சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது என, அப்போது அவர் கூறினார். எனினும், மதானிக்கு ஜாமின் வழங்கி, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

நாசர் மதானி அவர்கள் நிறந்தர விடுதலை பெற எல்லாம் வல்ல ஏக இறைவனை பிரார்த்திப்போம்

கருத்துகள் இல்லை: