புதன், 1 ஜூலை, 2009

விமான நிலையத்தில் கிடந்தது சினிமா குண்டு!

சென்னை: சென்னை விமான நிலையத்தில் கிடந்த மர்ம பொருள் சினிமா குண்டு என்று தெரியவந்துள்ளது.

சென்னை விமான நிலையத்தில் உள்ள கார் பார்க்கிங் பகுதியில் உருண்டை வடிவ மர்ம பொருள் மற்றும் குழாய்கள் கேட்பார் இன்றி கிடந்துள்ளது.

ரோந்து சுற்றிவந்த பாதுகாவலர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து விமான நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

விரைந்து வந்த போலீசார் இது குறித்து வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் கொடுத்தனர்..

அவர்கள் வெடிகுண்டை கண்டு பிடிக்கும் மோப்ப நாய்களுடன் வந்து உருண்டை வடிவ மர்ம பொருள் குறித்து சோதனை சோதனை செய்தனர்.

மேலும் விமான நிலையத்தின் அனைத்துப் பகுதிகளையும் தீவிர சோதனை செய்தனர்.

இதுகுறித்து வெடிகுண்டு நிபுணர்கள் கூறியது. ''இந்த வகைத குண்டு சினிமா படப்பிடிப்பிற்கு பயன்படுத்தப்படுவது, இதை வெடிக்கச் செய்தால் சத்தம் மட்டுமே பெரிதாக வரும் சேதம் ஏதும் ஏற்படுத்தாது. ராணுவம் மற்றும் சினிமா படப்பிடிப்புக்கு இந்த குண்டு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த குண்டு எப்படி இங்கு வந்தது என்று விசாரணை செய்யப்பட வேண்டும்." என்றனர்

கருத்துகள் இல்லை: