சனி, 25 ஜூலை, 2009

சுதந்திர இந்தியாவில் மறைமுக சித்திரவதை சிறைகளை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்- அசாவுத்தீன் உவைசி


கடந்தவாரம் மீடியாக்கள் மூலம் இந்தியாவெங்கும் பரபரப்பை ஏற்ப்படுத்திய மறைமுக சித்ரவதை சிறைச்சாலைகளைப் பற்றியும் அங்கு நூற்றுக்கணக்கான இளைஞர்கள் சித்ரவதை செய்யப்படுவது பற்றியும் மக்களவையில் கேள்வி எழுப்பாததைப்பற்றி அனைத்திந்திய முஸ்லிம் மஜ்லீஸ் இத்திகாதுல் முஸ்லிமீன் உறுப்பினரும் ஹைதராபாத் எம்.பி யுமான அசாவுத்தீன் உவைசி யிடம் கேட்கையில்; தீவிரவாதம் என்ற பெயரில் அப்பாவி முஸ்லிம்களை பிடிப்பதும் அவர்களை சிறையில் அடைத்து ஆதிக்க அமெரிக்காவில் இருக்கும் குவான்டனமோ மறைமுக சிரைச்சாலையில் நடக்கும் சித்ரவதையைப் போன்று சுதந்திர இந்தியாவில் நடக்கும் இந்த மாபாதக செயலை ஒருபோதும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்; அது மட்டும் இல்லாமல் அது போன்ற சிறைச்சாலைகளை மூடும்படி இந்திய அரசை வற்புறுத்த போவதாகவும் தெரிவித்தார்.
மேலும் ஹைதராபாதில் அப்பாவி நிரபராதி இளைஞர்கள் கைது செய்யப்படுவது பற்றி கேட்டதற்கு, ஆம் தீவிரவாதம் என்ற பெயரில் அப்பாவி முஸ்லிம்களை பிடிப்பதும் அவர்களை சிறையில் அடைத்து சித்திரவதை செய்வதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதை போன்ற தொடரும் கொடுமைகளை நாங்கள் ஒருபோதும் அனுமதிப்பதில்லை என்பதையும் வலியுறுத்துவேன் என பதில் அளித்தார்.

source: Twocircles

கருத்துகள் இல்லை: