சனி, 11 ஜூலை, 2009

சீனா:உரும்கியில் அரசு ஏற்படுத்திய தடையை மீறி தொழுகை

சீனாவின் கட்டுப்பட்டில் உள்ள உரும்கி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசத்தில் ஹான் இனத்தவர்களும் காவல்துறையும் நடத்திய நரவேட்டையில் 156 பேர் கொல்லப்பட்டதைத்தொடர்ந்து ஏற்பட்ட கலவரசூழலில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மஸ்ஜிதுகளில் அரசு வெள்ளிக்கிழமை தொழுகை நடத்த தடை விதித்திருந்தது.
ஆனால் அதையும் மீறி சில பள்ளிகளில் தொழுகை நடைப்பெற்றது. ஏராளமான முஸ்லிம்கள் கூட்டமாக இத்தொழுகையில் கலந்துக்கொண்டனர்.

கருத்துகள் இல்லை: