கடந்த இரு ஆண்டுகளாக தேசிய சிறுபான்மையினருக்கான ஆணையத்தில் புகார்கள் குவிந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் நேற்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துமூலம் அளித்த பதிலில் சிறுபான்மையினர் விவகாரங்களுக்கான அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியிருப்பதாவது:தேசிய சிறுபான்மையினருக்கான ஆணையத்தில் கடந்த இரு ஆண்டுகளாக புகார்கள் குவிந்து வருகின்றன. சிறுபான்மையினர் நலனுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. கடந்த 2007-08ல் ஆயிரத்து 508 புகார்களும், 2008-09ல் 2,250 புகார்களும் குவிந்துள்ளன. 2009-10ம் ஆண்டில் கடந்த ஜூன் 30ம் தேதி வரை 472 புகார்கள் வந்துள்ளன. இதுகுறித்து, தேசிய சிறுபான்மையினருக்கான ஆணையம் விசாரித்து நடவடிக்கை எடுக்கும். தேவைப்பட்டால், உரிய நபர்களுக்கு தாக்கீதும் அனுப்பப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.இறை நம்பிக்கை கொண்டோர்களே உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் பயபக்தயுடையோர் ஆகலாம். திருக்குர்ஆன் 2:183)
செவ்வாய், 21 ஜூலை, 2009
சிறுபான்மையினருக்கு எதிராக அதிகரிக்கும் குற்றங்கள்
கடந்த இரு ஆண்டுகளாக தேசிய சிறுபான்மையினருக்கான ஆணையத்தில் புகார்கள் குவிந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் நேற்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துமூலம் அளித்த பதிலில் சிறுபான்மையினர் விவகாரங்களுக்கான அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியிருப்பதாவது:தேசிய சிறுபான்மையினருக்கான ஆணையத்தில் கடந்த இரு ஆண்டுகளாக புகார்கள் குவிந்து வருகின்றன. சிறுபான்மையினர் நலனுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. கடந்த 2007-08ல் ஆயிரத்து 508 புகார்களும், 2008-09ல் 2,250 புகார்களும் குவிந்துள்ளன. 2009-10ம் ஆண்டில் கடந்த ஜூன் 30ம் தேதி வரை 472 புகார்கள் வந்துள்ளன. இதுகுறித்து, தேசிய சிறுபான்மையினருக்கான ஆணையம் விசாரித்து நடவடிக்கை எடுக்கும். தேவைப்பட்டால், உரிய நபர்களுக்கு தாக்கீதும் அனுப்பப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக