ஞாயிறு, 12 ஜூலை, 2009

பாபர் மசூதி வழக்கு பைல்கள் மாயம்


1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந்தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. 17 ஆண்டுகளுக்கு பிறகு இது தொடர்பான லிபரான் விசாரணை குழு மத்திய அரசிடம் சமீபத்தில் அறிக்கையை தாக்கல் செய்தது.


இந்த நிலையில் பாபர் மசூதி இடிப்பு வழக்கு தொடர்பான 23 பைல்கள் மாயமாகி உள்ளன. கடந்த 1991-ம் ஆண்டு முதல் 2000-ம் ஆண்டு வரை இந்த பைல்கள் மாயமானதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக உத்தரபிரதேச முதல்-மந்திரி மாயாவதி கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: