செவ்வாய், 21 ஜூலை, 2009

ஓரினச் சேர்க்கை தவறல்ல! மாபாதகச்செயலுக்கு துணைப்போகும் உச்சநீதி மன்றம்!!


டெல்லி: ஓரினச் சேர்க்கையாளர்கள் மனம் ஒத்து செக்ஸில் ஈடுபடுவது சட்டப்பூர்வமாக சரியே என்று டெல்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக முடிவெடுக்க மத்திய அரசுக்கு அது 8 வார கால அவகாசத்தையும் அளித்துள்ளது.
ஜூலை 2ம் தேதி டெல்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு தீர்ப்பில், ஓரினச் சேர்க்கையாளர்கள், மனம் ஒத்து செக்ஸ் உறவில் ஈடுபடுவது சட்டவிரோதம் அல்ல. இதுதொடர்பான 377வது சட்டப் பிரிவு செல்லாது எனறு தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது.
இதை விசாரித்த தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதி சதாசிவம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், டெல்லி உயர்நீதிமன்றத் தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டனர்.
மேலும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலையை எட்டு வாரத்திற்குள் தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.
மேலும், ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்வது தொடர்பாக எந்த உத்தரவையும் பிறப்பிக்கவும் நீதிபதிகள் மறுத்து விட்டனர்.

கருத்துகள் இல்லை: