உயர்நீதிமன்றம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உயர்நீதிமன்றம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010

கேரள அரசு மாஃபியா கும்பலின் பிடியில் உள்ளது'- உயர்நீதிமன்றம் விமர்சனம்

திருவனந்தபுரம்,ஆக,1:மாஃபியா கும்பலின் பிடியில் கேரள மாநில அரசு உள்ளது என, உயர்நீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது.

கேரள மாநில உயர்நீதிமன்றத்தில், மலையாற்றூர் பகுதியில் கல் குவாரி தொடர்பான வழக்கு வெள்ளிகிழமை விசாரணைக்கு வந்தது. நீதிபதி சிரிஜகன் முன்னிலையில் நடந்து வந்த விசாரணையின் போது நீதிபதி கூறியதாவது: அரசியல்வாதிகளும், மாபியா கும்பலும் தான் அரசை பயன்படுத்தி லாபம் அடைந்து வருகின்றனர்.

அரசை யாராவது பின்னால் இருந்து இயக்குகின்றனரா என்பது குறித்து விளக்க வேண்டும்.சாதாரண பொது மக்களுக்கும், நீதிபதிகளுக்கும் மட்டும்தான் தற்போது சட் டத்தை பயன்படுத்தி வரு கின்றனர்.

மாநில காவல்துறையினரால் சட்டப்படி செயல்பட முடியாவிடில், ராணுவத்தை வரவழைக்க உயார்நீதிமன்றம் உத்தரவிட முடியும். பணம் இருந்தால், எந்த நீதிமன்ற உத்தரவையும் தாண்டி செயல்பட முடியும் என்ற நிலைதான் தற்போது இருந்து வருகிறது. இவ்வாறு நீதிபதி கூறினார்.

உயர்நீதிமன்ற நீதிபதியின் கடும் விமர்சனம், மாநிலத்தை ஆளும் கூட்டணி அரசுக்கும்,நீதித்துறைக்கும் இடையே இருந்து வரும் பிணக்கை வெளிப்படுத்தியுள்ளது.

செவ்வாய், 21 ஜூலை, 2009

ஓரினச் சேர்க்கை தவறல்ல! மாபாதகச்செயலுக்கு துணைப்போகும் உச்சநீதி மன்றம்!!


டெல்லி: ஓரினச் சேர்க்கையாளர்கள் மனம் ஒத்து செக்ஸில் ஈடுபடுவது சட்டப்பூர்வமாக சரியே என்று டெல்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக முடிவெடுக்க மத்திய அரசுக்கு அது 8 வார கால அவகாசத்தையும் அளித்துள்ளது.
ஜூலை 2ம் தேதி டெல்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு தீர்ப்பில், ஓரினச் சேர்க்கையாளர்கள், மனம் ஒத்து செக்ஸ் உறவில் ஈடுபடுவது சட்டவிரோதம் அல்ல. இதுதொடர்பான 377வது சட்டப் பிரிவு செல்லாது எனறு தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது.
இதை விசாரித்த தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதி சதாசிவம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், டெல்லி உயர்நீதிமன்றத் தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டனர்.
மேலும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலையை எட்டு வாரத்திற்குள் தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.
மேலும், ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்வது தொடர்பாக எந்த உத்தரவையும் பிறப்பிக்கவும் நீதிபதிகள் மறுத்து விட்டனர்.