புதன், 1 ஜூலை, 2009

பாஜகவில் கொள்கை என்பதே கிடையாது - கோவிந்தாச்சார்யா


பாஜகவை RSS விலக்கி வைக்க வேண்டும் என பாஜகவின் முன்னாள் மூத்த தலைவர் கோவிந்தாச்சார்யா கூறியுள்ளார். லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,பாஜகவில் கொள்கை என்பதே கிடையாது, பதவி தான் கொள்கையாகிவிட்டது, ஹிந்துத்துவா

கொள்கைகளிலும் தெளிவு கிடையாது. எனவே RSS பாஜகவை விலக்கிவைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதேபோல் வருன் காந்திக்கு சீட் கொடுத்ததே தவறு. வன்முறையை தூண்டும்படி பேசுவதெல்லாம் கட்சியை வளர்க்க உதவாது என்ற அவர், இந்நிலை தொடர்ந்தால் பாஜக எந்த மாநிலத்திலும் ஆட்சியை பிடிக்க முடியாது என்றார்.

RSS-யின் தீவிர உறுப்பினரான கோவிந்தாச்சார்யா, சில காலம் பாஜகவில் மூத்த தலைவராக இருந்த்து கட்சி பணியாற்றினார். பின்பு கட்சி மேலிடத்துடன் ஏற்பட்ட மோதலால் கட்சியிலிருந்து விலகிவிட்டார்.

கருத்துகள் இல்லை: