செவ்வாய், 21 ஜூலை, 2009

வருண்காந்திக்கு நோட்டீஸ்

கடந்த பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேச மாநிலத்தில் பிலிபிட் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வென்றார் வருண்காந்தி.

இவர் தேர்தல் பிரச்சாரத்தின் போது மத உணர்வுகளை தூண்டும்படி பேசியதாகவும், அது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திற்கு விரோதமாதலால் அவரது வெற்றியை செல்லாததாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வீரேந்திர மோகன்சிங் அலகாபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளார்.

இந்த வழக்கில் வரும் ஆகஸ்ட் 25ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு வருண்காந்திக்கு கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கருத்துகள் இல்லை: