செவ்வாய், 7 ஜூலை, 2009

சென்னை: விமானப்படைக்கு ஆள்சேர்ப்பு

இந்திய விமானப்படைக்கு திருமணமாகாத இளைஞர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

இதுகுறித்து சென்னை கலெக்டர் ஷோபனா வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த, திருமணமாகாத இளைஞர்கள் இந்திய விமானப்படைக்கு தேர்வு செய்யப்படவுள்ளனர். குரூப் 'ஒய்', குரூப் 'எக்ஸ்', பணிகளுக்கான ஆள் சேர்ப்பு 24ம் தேதி முதல் 29ம் தேதி, சென்னை தாம்பரம் ஏர்போர்ஸ் ஸ்டேஷனில் நடைபெறவுள்ளது.

கடந்த 1988 ஜூலை 1ம் தேதி முதல் 1992 செப்.30ம் தேதி வரை பிறந்திருக்க வேண்டும். குரூப் 'ஒய்' பிரிவுக்கு பிளஸ் 2 அறிவியல் மற்றும் கலை படிப்பில் 50 சதவீதம் தேர்ச்சி. குரூப் 'எக்ஸ்' பிரிவுக்கு பிளஸ் 2 கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கிலத்தில் 50 சதவீதம் தேர்ச்சி அல்லது டிப்ளமோ இன்ஜினியரிங் படித்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: