செவ்வாய், 21 ஜூலை, 2009

இந்தியாவுக்கு எதிராக உளவு பார்த்த ஏழு இந்திய ராணுவத்தினர் அதிரடி கைது

இந்தியாவுக்கு எதிராக உளவு பார்த்ததாக இதுவரை ஏழு இந்திய ராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என, ராணுவ அமைச்சர் அந்தோணி கூறினார்.

லோக்சபாவில் கேள்வி நேரத்தின் போது அவர் கூறியதாவது:

இந்திய ராணுவத்தில் உள்ள முப்படைகளில், கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் உளவு பார்த்ததாக எட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாக, ஏழு ராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.


கடந்த 2006-09ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ஒன்பது பேர் தண்டிக்கப்பட்டுள்ளனர். இதன் பின்னணியில், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., இருந்துள்ளது என்றார்.

தேசத்திற்கு எதிராக உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டுள்ள தேச துரோகிகளின் விபரங்களை மக்கள் முன் வெளியிடுமா அரசு?

கருத்துகள் இல்லை: