வாஷிங்டன்,ஆக11:சீனாவுக்கு அமெரிக்க ராணுவ ரகசியங்களை விற்றதாகக் குற்றஞ்சாட்டி இந்திய வம்சாவழியைச் சார்ந்த என்ஜீனியர் மீது ஹவாய் நீதிமன்றம் குற்றத்தை சுமத்தியுள்ளது.
பி-2 குண்டுவீச்சின் ஃப்ரொப்பல்சன் உருவாக்குவதற்கு உதவிய நொஷிர் கொவாடியாவின் மீது சுமத்தப்பட்ட குற்றங்களில் சதித்திட்டம், கள்ளப்பணம் மாற்றியது உள்ளிட்டவைகளும் அடங்கும். இவ்வழக்கில் கொவாடியாவுக்கு ஆயுள்தண்டனை கிடைக்கலாம்.
இன்ஃப்ரா ரெட் ரேடார்களையும், அமெரிக்காவின் காலநிலை கிரகண ஏவுகணைகளையும், ஏமாற்றும் திறன்கொண்ட க்ரூஸ் ஏவுகணைகளை உருவாக்க கொவாடியா சீனாவிற்கு உதவியுள்ளார் என அரசுதரப்பு வழக்கறிஞர்கள் கூறுகிறார்கள்.
ஏவுகணையை உருவாக்குவதற்கு இடையே கொவாடியா சீனாவுக்கு 2003 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளில் சீனாவுக்கு சென்றுள்ளார். ரகசியங்களை சீனாவுக்கு அளித்ததால் கொவாடியாவுக்கு 110000 அமெரிக்க டாலர் கிடைத்துள்ளது. இதனை மாவு தீவில் ஆடம்பர வீடு ஒன்று வாங்குவதற்கு பயன்படுத்தியுள்ளார் எனவும் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
சீனாவுக்கு ஏவுகணை உருவாக்க மாதிரி செய்துக் கொடுத்தது உண்மை என்றாலும், அது ரகசிய தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது அல்ல என எதிர்தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
நான்கு ஆண்டுகளாக சிறையிலிருக்கும் கொவாடியாவுக்கு தீர்ப்பு வருகிற நவம்பரில் அளிக்கப்படும். தேசிய பாதுகாப்பு தகவல்களை வெளிநாட்டிற்கு அளித்ததான குற்றச்சாட்டில் கொவாடியா குற்றவாளி அல்ல என்பதை நீதிமன்றம் கண்டறிந்துள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
இறை நம்பிக்கை கொண்டோர்களே உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் பயபக்தயுடையோர் ஆகலாம். திருக்குர்ஆன் 2:183)
சீனா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சீனா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வியாழன், 12 ஆகஸ்ட், 2010
சனி, 12 டிசம்பர், 2009
ஆபத்தை ஏற்படுத்தும் சீன பொம்மைகள் !

சில மாதங்களுக்கு முன் சீனாவில் இருந்து தமிழகத்திற்கு இறக்குமதி செய்யப்பட்ட தரம் குறைந்த சீன பொம்மைகளை சுங்க இலாகாவினர் சென்னையில் பறிமுதல் செய்தனர்.
மேலும் இந்தியாவின் பிரபல கம்பெனிகளின் ஷாம்புகளை போலவே போலியாக தயாரிக்கப்பட்ட சீனா பொருட்களையும் அதிகாரிகள் கைப்பற்றினர். இதனை தொடர்ந்து துறைமுகங்களின் மூலம் இறக்குமதி செய்யப்படும் கன்டெய்னர்களை சுங்க இலாகாவினர் தீவிரமாக கண்காணி்த்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் இறுதியில் சீனாவில் இருந்து இரு கன்டெய்னர்கடள் இறக்குமதி செய்யப்பட்டன. அவற்றின் விபரங்கள் முழுமையாக குறிப்பிடப்படவில்லை. இதனால் கமிஷனர் ராஜன் தலைமையிலான அதிகாரிகள் அதனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த கன்டெய்னர்களில் இருந்து சீனா பொம்மைகள்,விளையாட்டு பொருட்கள் பார்ட்டிகளில் பயன்படுத்தப்படும் ஸ்பிரேக்கள் போன்றவைகளை பறிமுதல் செய்தனர்.
இதில் அந்த பொம்மைகள் தரம் குறைந்ததாகவும், உற்பத்தியாளர்கலின் பெயர், முகவரி உள்ளிட்ட விபரங்கள் குறிப்பிடபடவில்லை. இந்த பொம்மைகளில் காரீயம் என்ற ரசாயனம் கலந்த பெயின்டுகள் பளிச்சிடும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
எனவே இத்தகைய பொம்மைகளை வைத்து குழந்தைகள் விளையாடுவதால் அவை குழந்தைகளுக்கு நுரையில் தொடர்பான நோய்களை ஏற்படுத்தும் ஆபத்து இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் அதனை இறக்குமதி செய்த நிறுவனம் சமர்பித்த தர சான்றிதழ்களும் பொருட்களுக்கும் தொடர்பில்லாமல் இருந்தது.
சீனா பொம்மைகளை இறக்குமதி செய்ய சுங்க துறை நிர்ணயித்திருக்கும் தரத்திற்கும் குறைவாக இருந்ததால் அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்துள்ளனர். இவற்றின் மதிப்பு ரூ.25 லட்சம் ஆகும்.
சனி, 3 அக்டோபர், 2009
உலகத்திற்கு சவால் - சீனாவின் 60 வது சுதந்திர தினம்:

இந்த இராணுவ அணிவகுப்பு இதுவரை அந்நாடு கண்டிராத பலத்த பாதுகாப்புகளுக்கு இடையே நடத்தப்பட்டது.
இந்த இராணுவ அணிவகுப்பின் போது உலகம் இதுவரை கண்டிராத சீனாவின் DF-31 என்ற கண்டம் விட்டு கண்டம் தாண்டிச் சென்று தாக்கும் ஏவுகணையை சீனா உலகிற்கு காட்டியது. இந்த ஏவுகணை 13,000 கிலோ மீட்டர் தூரம் சென்று இலக்கை தாக்க வல்லது. இது இந்தியாவின் எந்த பகுதியை மட்டுமல்ல அமெரிக்காவரை சென்று இலக்கை தாக்கும் வல்லமை படைத்தது.
வல்லுனர்கள் இந்த ஏவுகணை குறித்து கூறுகையில், "இந்த ஏவுகணையை எங்கிருந்தும் ஏவக்கூடிய வசதி படைத்தது. கூடவே இது அணு ஆயுதங்களை தாங்கிச்செல்லும் திறன் படைத்து, இந்த ஏவுகணைக்கு பதிலடியாக இந்தியாவிடம் எந்த ஒரு ஆயுதமும் இல்லை என்று கூறினர்.
கூடவே தரையிலிருந்து தரை தாக்கும் திறன் படைத்த நடுத்தர தூரம் சென்று தாக்கக்கூடிய DF-21 ஏவுகணையும் பங்கெடுத்தது. இந்த ஏவுகணை 3200 கிலோ மீட்டர் சென்று இலக்கை தாக்கும் திறன் படைத்தது. இது தான் உலகிலேயே ஒரே நேரத்தில் பல விதமான ஆயுதங்களை தாங்கிச்செல்லும் ஆற்றல் படைத்த ஒரே ஏவுகணையாகும்.
இந்தியாவிடம் இதற்கு பதிலாக அக்னி 3 உள்ளது என்றாலும் அது சோதனை நிலையிலேயே உள்ளது.
சீனாவின் மற்றொரு ஆயுதமான CJ-10 தரையிலிருந்து தரையை தாக்கும் திறன் படைத்து. இது 1500 கிலோ மீட்டர் தூரமுள்ள இலக்கை குறி தவறாமல் தாக்கும் திறன் படைத்தது. இது போன்ற ஏவுகணைகள் இந்தியா, ரஷியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு அடுத்து சீனாவிடம் மட்டும் தான் உள்ளது. இந்த ஏவுகணை ஒலியைவிட விட வேகமாக சென்று தாக்கும் திறன் படைத்தது. மேலும் இது 500 கிலோ எடை உள்ள ஆயுதத்தை தாங்கிச் செல்லும் திறன் படைத்து.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் இந்தியாவிடம் பிரமோஸ் ஏவுகணை உள்ளது. இது இதற்கு போட்டியான சீனாவின் ஏவுகணையைவிட சற்று குறைவான எடை உள்ள ஆயுதத்தையே தாங்கிச்செல்லும் திறன் படைத்திருந்தாலும் இலக்கை குறி தவறாமல் தாக்கும் திறன் படைத்தது.
இந்த ஆயுதங்களுக்கு நடுவில் சீனாவின் இராணுவ அணிவகுப்பில் பங்கெடுத்த புதிய ரக ஆயுதம் கப்பல்களை அழிக்கக் கூடிய ஏவுகணைகள் ஆகும். இந்த YJ-8 வரிசையில் உள்ள ஏவுகணைகள் சீன கப்பல் படையில் அங்கம் வகிக்கிறது. இது கடல்வழி ஆபத்துகளை களைவதற்காக பயன்படுத்தப் படுகிறது.
நன்றி
NDTV
ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2009
குழந்தைக்கு சாக்லேட் வாங்கும் போது எச்சரிக்கை

சீனாவில் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் விற்கப்படும் சாக்லேட் வகைகளால் குழந்தைகளுக்கு பெரும் ஆபத்து என்பதால் அவற்றை இந்தியாவில் விற்பனை செய்ய முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார். ஏற்கெனவே சீனாவில் தயாராகும் மருந்துகள், மொபைல்கள் (ஐஎம்இஐ கோட் இல்லாதவை), பொம்மைகள் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுவதையோ, விற்கப்படுவதையோ அனுமதிக்க முடியாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. சீனத்து பால் பொருட்களுக்கு முழுமையான தடை உள்ளது இந்தியாவில்.இப்போது சீனாவில் தயாராகும் சாக்லேட் வகைகள் குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பாதிப்பதாக மருத்துவ அறிஞர்கள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மத்திய அரசு, சீனத்து சாக்லேட்டுகளுக்கு முழுமையான தடையை அறிவித்துள்ளது. ஏற்கெனவே இருப்பில் இருந்தாலும், இந்த சாக்லேட்டுகளை விற்க வேண்டாம் என்றும் கடைக்காரர்களுக்கு அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
சனி, 11 ஜூலை, 2009
சீனா:உரும்கியில் அரசு ஏற்படுத்திய தடையை மீறி தொழுகை

ஆனால் அதையும் மீறி சில பள்ளிகளில் தொழுகை நடைப்பெற்றது. ஏராளமான முஸ்லிம்கள் கூட்டமாக இத்தொழுகையில் கலந்துக்கொண்டனர்.
செவ்வாய், 7 ஜூலை, 2009
சீனாவில் சீனர்கள்-முஸ்லீம்கள் பயங்கர மோதல்: 140 பேர் பலி
உரும்கி (சீனா): சீனாவின் வட மேற்கில் உள்ள உரும்கி என்ற பகுதியில், முஸ்லீம்களான உயிகுர் இனத்தவருக்கும், சீனர்களான ஹான் பிரிவினருக்கும் இடையே ஏற்பட்ட பயங்கர கலவரத்தில் 140 பேர் உயிரிழந்தனர்.
கடந்த பல ஆண்டுகளில் சீனாவில் நடந்த மிகப் பெரிய மதக் கலவரம் இது எனக் கூறப்படுகிறது. 800க்கும் மேற்பட்டோர் இதில் படுகாயமடைந்துள்ளனர்.
ஜின்சியாங் உயுகுர் சுயாட்சிப் பிரதேசத்தின் தலைநகரான உரும்கியில், நேற்று இரவு இந்த கலவரம் நடந்தது.
இதுகுறித்து அரசு செய்தித் தொடர்பாளர் கூறுகையில், சம்பவ இடத்திலேயே 57 பேர் கொல்லப்பட்டனர். மற்றவர்கள் காயமடைந்து மருத்துவமனைகளில் உயிரிழந்தனர்.
சாவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது என்றார்.
வட மேற்கு சீனாவில் முஸ்லீம்கள் அதிகம் உள்ளனர். இங்கு பல்வேறு முஸ்லீம் குழுக்கள் தனி நாடு கோரி போராட்டங்களையும் நடத்தி வருகின்றன.
அவர்களது மத சுதந்திரத்தை சீனர்கள் கட்டுப்படுத்துவதால் எப்போதும் அந்தப் பிராந்தியம் மோதல்களுடன்தான் இருக்கும். இந்த நிலையில் தற்போது அது பெரும் மோதலமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.
கடந்த பல ஆண்டுகளில் சீனாவில் நடந்த மிகப் பெரிய மதக் கலவரம் இது எனக் கூறப்படுகிறது. 800க்கும் மேற்பட்டோர் இதில் படுகாயமடைந்துள்ளனர்.
ஜின்சியாங் உயுகுர் சுயாட்சிப் பிரதேசத்தின் தலைநகரான உரும்கியில், நேற்று இரவு இந்த கலவரம் நடந்தது.
இதுகுறித்து அரசு செய்தித் தொடர்பாளர் கூறுகையில், சம்பவ இடத்திலேயே 57 பேர் கொல்லப்பட்டனர். மற்றவர்கள் காயமடைந்து மருத்துவமனைகளில் உயிரிழந்தனர்.
சாவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது என்றார்.
வட மேற்கு சீனாவில் முஸ்லீம்கள் அதிகம் உள்ளனர். இங்கு பல்வேறு முஸ்லீம் குழுக்கள் தனி நாடு கோரி போராட்டங்களையும் நடத்தி வருகின்றன.
அவர்களது மத சுதந்திரத்தை சீனர்கள் கட்டுப்படுத்துவதால் எப்போதும் அந்தப் பிராந்தியம் மோதல்களுடன்தான் இருக்கும். இந்த நிலையில் தற்போது அது பெரும் மோதலமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)