சிமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 7 பிப்ரவரி, 2011

சங்க்பரிவா​ர் மற்றும் காங்கிரஸின் போராட்டத்தால் விடுதலைச் செய்யப்பட்ட 'சிமி' உறுப்பினர்​கள் மீண்டும் கைது


புதுடெல்லி,பிப்.7:குடியரசு தினத்தில் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலைச் செய்யப்பட்ட 5 'சிமி' இயக்க உறுப்பினர்களை வி.ஹெச்.பி-யின் போராட்டத்தைத் தொடர்ந்து மீண்டும் கைதுச் செய்துள்ளது மத்தியபிரதேச மாநில போலீஸ்.

33 மாத சிறைவாசத்திற்கு பிறகு இவர்களை விடுதலைச் செய்ய சிபாரிசுச் செய்த சிறைத்துறையின் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் மற்றும் சிறை துணை சூப்பிரண்ட் ஆகியோருக்கெதிராக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

சிறையிலிருந்து விடுதலையான 'சிமி' உறுப்பினர்களை மீண்டும் கைதுச் செய்த நடவடிக்கையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தை அணுகப்போவதாக எதிர்தரப்பு வழக்கறிஞர் சந்தோஷ் சவ்ராடியா தெரிவித்துள்ளார்.

காங்கிரஸின் காவி முகம்
'சிமி' உறுப்பினர்கள் விடுதலைச் செய்யப்பட்டதை எதிர்த்து மத்திய பிரதேச மாநில விசுவஹிந்து பரிஷத்தும், பஜ்ரங்தள்ளும் போராட்டம் நடத்தின. ஆனால், மதசார்பற்ற வேடம் புனையும் காங்கிரஸ் கட்சியும் 'சிமி' உறுப்பினர்களின் விடுதலையை எதிர்த்து போராட்டம் நடத்தியது அக்கட்சியின் போலி மதசார்பற்ற வேடத்தை அம்பலப்படுத்தியுள்ளது.

சங்க்பரிவார் மற்றும் காங்கிரஸ் கட்சியின் போராட்டத்தைத் தொடர்ந்து 'சிமி' உறுப்பினர்களை மீண்டும் வெள்ளிக்கிழமை இரவு உஜ்ஜயினில் வைத்து போலீசார் கைதுச் செய்தனர்.

தேசவிரோத இலக்கியங்களை கைவசம் வைத்திருந்ததாகவும், ரகசியக் கூட்டம் நடத்தியதாகவும் குற்றஞ்சாட்டி 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31-ஆம் தேதி ஜாதில் பர்வஜ், அயாஸ் ரியாஸ் அஹ்மத், அக்பர் அஃப்ஸல் கான், மெஹ்ருத்தீன் ஷேக், இர்ஷாத் அலி ஆகியோர் கைதுச் செய்யப்பட்டனர். ஐந்து வருட சிறைத்தண்டனை இவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.

முன்னாள் வி.ஹெச்.பி உறுப்பினரான பாலகிருஷ்ண கேதார், ஸோனு ஷேக்வாத் ஆகியோர்தான் அரசுதரப்பின் முக்கிய சாட்சிகள். விசாரணையின் போது எதிர்தரப்பு வழக்கறிஞரின் கேள்விக்கு பதிலளித்த முக்கிய சாட்சிகளில் ஒருவரான பாலகிருஷ்ண கேதார் இந்தியாவை இஸ்லாமிய மயமாக்குவது தொடர்பான கூட்டத்தை 'சிமி' உறுப்பினர்கள் நடத்தியதை தான் காணவில்லை என தெரிவித்தார். ஆனாலும், நீதிமன்றம் 'சிமி' உறுப்பினர்களுக்கு அநியாயமாக தண்டனை வழங்கியது.

சிறை வாழ்க்கையில் நன்னடத்தையைக் கருத்தில்கொண்டு சுதந்திரம் மற்றும் குடியரசு தினத்தின்போது கைதிகளை விடுதலைச் செய்வது வழக்கமாகும். அதனடிப்படையில் நன்னடத்தையைக் கருத்தில்கொண்டு 'சிமி' உறுப்பினர்கள் 5 பேரும் விடுதலைச் செய்யப்பட்டனர். இதற்கெதிராகத்தான் வி.ஹெச்.பி உள்பட சங்க்பரிவார பயங்கரவாதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மூன்றுகோடி ரூபாய் பணத்தை சிறைத்துறை அமைச்சர் உள்பட பல லஞ்சமாக பெற்றுக்கொண்டு 'சிமி' உறுப்பினர்களை விடுதலைச் செய்ததாக போலி மதச்சார்பின்மை பேசும் காங்கிரஸ் போராட்டத்தில் குதித்தது. இதனைத் தொடர்ந்து உஜ்ஜையின் கச்சோட் சப்-ஜெயில் துணை ஜெயிலர் சஞ்சீவ் குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் சிறைத்துறை பொறுப்பை வகிக்கும் முதன்மை செயலாளர் சுதேஷ்குமார், சிறை டி.ஜி.பி வி.கெ.பவார் ஆகியோரை அத்துறைச் சார்ந்த பொறுப்பிலிருந்து மாற்றியது மத்தியபிரதேச பா.ஜ.க அரசு.

இதற்கிடையே, தேசத்துரோக குற்றம் சுமத்தி சிறையிலடைக்கப்பட்ட 'சிமி' உறுப்பினர்கள் 5 பேரை பணம் வாங்கிவிட்டு விடுதலைச் செய்ததாக குற்றஞ்சாட்டை எழுப்பி, இச்சம்பவத்தில் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமெனவும், சிறைத்துறை அமைச்சர் ஜகதீஷ் தேவரை அப்பதவியிலிருந்து நீக்கவேண்டுமென மத்திய பிரதேச காங்கிரஸ் கமிட்டி கோரிக்கை விடுத்துள்ளது.

பெரும் சதி இதில் நடந்துள்ளதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கெ.கெ.மிஷ்ரா கூறுகிறார். இச்சம்பவத்தின் தீவிரத்தை கவனத்தில் கொண்டு சி.பி.ஐ விசாரணைக்கு முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் சிபாரிசுச் செய்யவேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சம்பந்தப்பட்ட துறை அமைச்சருக்கு நற்சான்றிதழ் வழங்கிவிட்டு அதிகாரிகளின் மீது குற்றத்தை சுமத்தியதிலிருந்து அரசின் இரட்டை வேடம் தெளிவானதாக அவர் கூறுகிறார்.

அப்பாவிகளை விடுதலைச் செய்ததற்காக கூப்பாடு போடும் காங்கிரஸ்தான் மத்தியிலும் ஆட்சி செய்கிறது. ஆனால், நாட்டில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர் ஒருவரின் பெயர் வெட்ட வெளிச்சமான போதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகிறது அக்கட்சி தலைமையிலான அரசு.

நேற்று முன்தினம் பாகிஸ்தான், ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள இந்தியாவுக்கு துணிச்சல் இல்லை என குற்றஞ்சாட்டியது குறிப்பிடத்தக்கது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

புதன், 2 ஜூன், 2010

சிமி சட்ட விரோதமான இயக்கமா?- கருத்துக் கேட்க முடிவு

பெங்களூரு:சட்ட விரோத தடுப்பு மசோதாவின் கீழ், டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு ஆணையம்,சிமி உண்மையிலேயே சட்ட விரோதமான இயக்கமா? சிமியை தடை செய்துள்ளது சரியான நடவடிக்கையா? என பல காணரங்களை கண்டறிய பெங்களூரு வரவுள்ளது.

அதன் படி, ஜூன்21 மற்றும் 23 ஆகிய தேதிகளில் காலை 10.30 மணியிலிருந்து மாலை 4.15 மணி வரை Court Hall No.2, Karnataka Appellate Tribunal, 2nd Phase, 2nd Floor, MS Buildings என்ற முகவரியில் இவ்வாணையம் கூட்டங்கள் நடத்த உள்ளது.

இதில் பொது மக்கள் கலந்து கொண்டு சிமி பற்றிய தங்கள் கருத்துக்களை இவ்வாணையம் முன் எடுத்துரைக்கலாம்.

விருப்பமுள்ளவர்கள் ஆதாரத்துடன் தங்கள் கருத்துகளை மனுக்களாகவும் சமர்பிக்கலாம். இம்மனுக்கள் இவ்வாணையம் நடத்த உள்ள கூட்டங்கள் கூடும் முன் தயார் செய்யப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்படுள்ளது.
source:Times of India

செவ்வாய், 2 பிப்ரவரி, 2010

சிமி மீதான தடையை நீக்க தேசிய மாநாட்டில் கோரிக்கை

புதுடெல்லி:நீதிபதி கீதா மிட்டல் தீர்ப்பாயத்தின்(ட்ர்ப்யூனல்) அறிக்கையின் அடிப்படையில் சிமிக்கெதிரான தடையை நீக்கக்கோரும் "சிமியின் மீதான தடை ஏன்? எத்தனை நாள்?" என்ற தலைப்பில் டெல்லியில் ஏற்பாடுச் செய்யப்பட்ட கன்வென்சனில் முஸ்லிம் தலைவர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் சிமி மீதான தடையை நீக்க கோரிக்கை விடுத்தனர்.

பா.ஜ.க அரசு தனது முஸ்லிம் விரோத கொள்கையின் காரணமாகத் தான் சிமி க்கு தடை விதித்தது. இந்த சூழலில் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு அதனைத் தொடர்வதற்கான அவசியம் இல்லை என இம்மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சிமி தடைச் செய்யப்பட்டு எட்டு ஆண்டுகளுக்கு பிறகுதான் அதன் மீதான தடையை நீக்கக்கோரும் மாநாடு கூட்டப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சிமியின் பெயரால் ஏராளமான அப்பாவிகள் நாடுமுழுவதும் வேட்டையாடப்படுவதாக கன்வென்சனில் உரைநிகழ்த்திய டெஹல்கா எடிட்டர் அஜித் ஸாஹி குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறியதாவது: இவ்விஷயத்தில் பா.ஜ.க வும் காங்கிரஸும் ஒரேபோல் தான் செயல்படுகின்றன. ஊடகங்கள் சிமியின் பெயரால் பீதியை பரப்பி வருகின்றன. அதனால் எனக்கு பத்திரிகைகளை வாசிக்கவே பயமாக இருக்கிறது. ஏதாவது ஒரு இடத்தில் குண்டுவெடிப்பு நடைபெறும்பொழுது அப்பொழுது சிமி தான் இதன் பின்னணியில் செயல்படுவதாக பத்திரிகைகளும், போலீஸும் கூறுவார்கள். ஆனால் பத்திரிகைகளிலிருந்து நமக்கு ஒன்றிற்கும் விடை கிடைக்காது. அறிக்கையை படித்து முடிக்கும்பொழுது நமக்கு கேள்விதான் மிஞ்சும்.

இந்நாட்டில் முஸ்லிம்கள் பீதியில் உள்ளனர். இந்நாட்டு மக்கள் தொகையில் 20 சதவீதம் வரும் முஸ்லிம்களை பீதியில் ஆழ்த்திவிட்டு இந்நாட்டை எவ்வாறு முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்ல முடியும். கடந்த ஆண்டு குண்டு வெடிப்புகள் ஒன்றும் நடைபெறவில்லை என அரசு கூறுகிறது. அதற்கு தீவிரவாதிகளெல்லாம் கைதுச்செய்யப்பட்டு விட்டார்கள் என்றா பொருள் கொள்வது?.

ஊடகங்கள், நீதிமன்றங்கள் ஆகியவற்றிலிருந்து முஸ்லிம்களுக்கு நீதி கிடைப்பதில்லை. முஸ்லிம்கள் அவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வாக நீதிமன்றங்களை மட்டும் நாடாமல் அரசியல் ரீதியாகவும் தீர்வு காணவேண்டும்." இவ்வாறு அவர் உரை நிகழ்த்தினார்.

கடந்த காலங்களில் நடந்த எல்லா கலவரங்களையும், அதன் தொடர்பான செயல்பாடுகளையும் சுதந்திரமாக விசாரிக்க கமிசன் ஒன்றை ஏற்படுத்த வேண்டுமென்று மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காவல்துறை மற்றும் சட்டம் ஒழுங்கை பேணும் இதரத்துறைகளிலும் அவசரமாக புனர் நிர்மாணிக்கப்பட வேண்டும். காவல்துறை நடத்தி வரும் போலி என்கவுண்டர் கொலைகள், சித்திரவதை,சட்டத்திற்கு புறம்பாக சிறைவைத்தல், லாக்கப் மரணம் ஆகியவற்றை இல்லாமலாக்குவதற்கான கட்டமைப்பை உருவாக்கவேண்டும். கைதுச் செய்யப்பட்டவர்களின் சமுதாயம், உறவினர்கள் தொந்தரவுக்குள்ளாக்கப்படுவது நிறுத்தப்படவேண்டும். குற்ற சம்மதம் என்ற பெயரால் ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிடுவதை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் போன்ற தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

இந்த கன்வென்சனில் பதேபூர் ஷாஹி இமாம் மவ்லான முஃப்தி முகர்ரம், டாக்டர் ஸஃபருல் இஸ்லாம் கான், ஜமாஅத்தே இஸ்லாமி துணைச் செயலாளர் ரஃபீக் அஹ்மத், மவ்லானா தஸ்னீம் ரஹ்மானி, மவ்லானா அர்ஷத் ஃபாரூகி, எஸ்.கியூ.ஆர்.இல்லியாஸ், மவ்லானா ஸீஷான் ஹிதாயத்தி, வழக்கறிஞர் ஷாநவாஸ், ஜாவித் ஹபீப், மனீஷா சேத்தி ஆகியோரும் உரை நிகழ்த்தினர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

வியாழன், 16 ஜூலை, 2009

சிமிக்கு தடை! மாவோயிஸ்டுகளுக்கு வரவேற்பு!!கம்யூனிஸ்டுகளின் இரட்டை வேடம்!!!

ஆயுத பயிற்சியில் மாவோயிஸ்டுகள்

அமெரிக்க எதிர்ப்பு போராட்டத்தில் சிமி உறுப்பினர்கள் (பழைய படம்)

-இனியவன்

மேற்குவங்க மாநிலம் லால்கரில் பழங்குடி மக்கள் ஆயுதம் தாங்கிய கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். பழங்குடி மக்கள் நிறைந்த லால்கர் பகுதி மக்களுக்கு ஆதரவாக மாவோயிஸ்டுகளும் ஆயுதங்களுடன் இராணுவம் மற்றும் அரசு இயந்திரங்களை தாக்கி வருகின்றனர். தொடர்ந்து பல ஆண்டுகளாக மேற்கு வங்க கம்யூனிஸ்ட் அரசு இம் மக்களை புறக்கணித்தது அதன் விளைவு இம்மக்கள் அரசை எதிர்க்கும் சூழ்நிலைக்கு தள்ளியுள்ளது. அதுமட்டு மின்றி சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற பெயரில் இம்மக்களின் நிலங்களைப் பறித்து முதலாளித்துவ சேவை செய்ய நினைத் ததுதான் ஏழைப் பங்காளர்களான தோழர்கள் பழங்குடி மக்களிடம் அடிவாங்க முதல் காரணமாய் அமைந்து விட்டது.

போலீசையும்,இராணுவத்தையும் ஆயுதம் கொண்டு பல ஆண்டுகளாக எதிர்த்து தனி அரசை நடத்தி வரும் மாவோயிஸ்டுகள் மீது இப்போதுதான் தடைவிதிக்க மத்திய அரசு முனைப்பு காட்டி தடையும் விதித்தது. இதுவரை மேற்கு வங்கத்தில் மாவோயிஸ்டு அமைப்பு தடை செய்யப்படவில்லை என்பதுதான் காமெடி. மத்திய அரசு தடை செய்தவுடன் மேற்கு வங்க மார்க்சிஸ்ட் அரசு தடையை ஏற்பதா வேண்டாமா? என தவித்தது. மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் 'மாவோயிஸ்டுகள் மீதான தடையை ஏற்றுக் கொள்ள முடியாது. தடை போடுவதால் மட்டுமே அவர் களை அடக்க முடியாது.அரசியல் ரீதியாக மட்டுமே மாவோயிஸ்டு பிரச்சினை யில் தீர்வு காண வேண் டும்' என கரிசனம் காட்டியுள்ளார்.

ஆனால், இதுவரை அமைதி காத்த மேற்குவங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா தடையை தனது அரசு ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார். (அவர் வலி அவருக்குத்தானே தெரியும்). ஆயுதம் தாங்கிய மாவோயிஸ்டுகளுக்கு தடை விதிக்கத் தயங்கும் இந்தக் கம்யூனிஸ்டுகள்தான் இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (சிமி) சட்டவிரோதமாக மத்திய அரசால் தடை செய்யப்பட்ட போது, எந்தக் கேள்வியையும் கேட்காமல் தனது மாநிலத்தில் சிமி அமைப்புக்குத் தடை விதித்தனர். அதன் தலைவர்களையும், உறுப்பினர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிமியைத் தடை செய்த 8 மாநிலங்களில் சிமிஆளும் கேரளா மற்றும் மேற்கு வங்கமும் அடங்கும்.

சிமி தலைவர்களோ உறுப்பினர்களோ அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி கிளர்ச்சி செய்யவில்லை. நாட்டின் எந்தப் பகுதி யையும் பிடித்துக் கொண்டு விடுதலைப் பிரதேசமாக அறிவிக்கவில்லை. நாட்டில் நடந்த எந்த குண்டு வெடிப்பிலாவது சிமி அமைப்பு ஈடுபட்டது என்பதற்கான நேரிடையான எந்தவொரு ஆதாரத்தையும் மத்திய அரசு இதுவரை காட்டவில்லை. கம்யூனிஸ்டுகளும் காட்டவில்லை. மாவோயிஸ்டு பிரச்சினைகளுக்கு அரசியல் ரீதியாக தீர்வு காணும் கம்யூனிஸ தோழர்கள் சிமி அமைப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு ஜெயில் களி மூலமாக மட்டும்தான் தீர்வு காணுவார்களாம்.

முஸ்லிம் அமைப்புகளை தீவிரவாத இயக்கங்களாக காட்டுவது காங்கிரஸ், பிஜேபி மட்டுமல்ல முற்போக்கு வேடம் போடும் கம்யூனிஸ்டு கட்சியினரின் நிலைப்பாடும் அதுதான். முஸ்லிம்கள் முட்டாள்கள் என்றே இன்றும் மற்ற கட்சிகளோடு கம்யூனிஸ்டுகளும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு சரியான பாடத்தை சிறுபான்மை மக்கள் கடந்த தேர்தலில் புகட்டியது போல வரும் தேர்தல்களிலும் புகட்டுவார்கள்.ஏன் இந்த இரட்டை வேடம் தோழ்ர்களே ?.


சிமியை பற்றிய தெஹல்காவின் கட்டுரை