மைசூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மைசூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 12 ஜூலை, 2009

மைசூர்:பாப்புலர் ஃபிரண்ட் தலைமையில் முஸ்லிம்கள் நடத்திய போராட்டத்தில் போலீஸ் அராஜகம்,ஏராளமானோர் காயம்,நூற்றுக்கணக்கானோர் கைது


கடந்த ஜூலை 6ஆம் தேதி அன்று மைசூரில் பள்ளிவாசல் காம்பவுண்டில் பன்றியின் மாமிசத்தை எறிந்ததால் ஏற்பட்ட கலவரத்தில் அபாண்டமாக குற்றம் சுமத்தி 200 க்கும் மேற்பட்ட அப்பாவி முஸ்லிம்களை கைது செய்ததைக்கண்டித்தும் அவர்களை உடனே விடுதலைச்செய்யக்கோரியும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா தலைமையில் அமைதியான முறையில் போராட்டம் நடத்திய சுமார் 4 ஆயிரத்திற்கு மேற்பட்ட பெண்களும் குழந்தைகளும் உள்ளிட்ட முஸ்லிம்கள் மீது கர்நாடகா காவல்துறையினர் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் ஏராளமானோர் காயமடைந்தனர்.
நூற்றுக்கணக்கானோர் கைதுச்செய்யப்பட்டுள்ளனர்.இதில் பாப்புலர் ஃபிரண்ட் மாநிலத்தலைவர் கே.அப்துல்லத்தீப் மற்றும் பொதுச்செயலாளர் அஃப்ஸர் பாஷா ஆகியோரும் அடங்கும். கைதுச்செய்யப்பட்டவர்கள் இதுவரை விடுதலைச்செய்யப்படவில்லை. இச்சம்பவத்திற்கு பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா தேசிய செயலகம் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
செய்தி ஆதாரம் :Twocircles

சனி, 4 ஜூலை, 2009

மைசூர் : மதக் கலவரம் மற்றும் துப்பாக்கி சூட்டில் சிறுவன் உள்பட 3 பேர் பலி

மைசூர்: மைசூரில் மதக் கலவரம் வெடித்துள்ளது. இதில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்ட 3 பேரில் ஒருவர் 15 வயது சிறுவன். இந்த சிறுவன் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
கலவரம் வெடித்துள்ள உதயகிரி, மந்தி பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்கு போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் நடந்த இடத்தில் கலவரத்தில் ஈடுபட்டவர்களைக் கலைக்க போலீஸார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் கலைத்தனர்.
தற்போது நிலைமை கட்டுக்குள் வந்திருப்பதாக போலீஸார் கூறியுள்ளனர். இருப்பினும் மகாதேவபுரா சாலையில் போராட்டக்காரர்கள் குவிந்திருப்பதால் அங்கு சாலைப் போக்குவரத்து முடங்கியுள்ளது.
2 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில், உள்ள ஹூலியம்மா கோவில் அருகே மசூதி கட்டப்பட்டது. இதை எதிர்த்து ஹூலியம்மா கோவில் நிர்வாகம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து கட்டுமானப் பணி நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் நேற்று இரவு மசூதி கட்டுவதற்கான வேலைகளை சிலர் தொடங்கியுள்ளனர். இதையடுத்து அந்த இடத்தில் பன்றியின் சிதைந்த உடல் பகுதிகளை சிலர் அங்கு போட்டுள்ளனர். இதையடுத்து இன்று கலவரம் வெடித்தது. காலை எட்டரை மணியளவில் கலவரம் வெடித்ததால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளானார்கள். உடனடியாக கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன. கடைகள் அடைக்கப்பட்டன.
சம்பவம் நடந்த பகுதிகளில் 144 போலீஸ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.