திங்கள், 9 ஆகஸ்ட், 2010

பி.எஃப்.ஐ. பற்றி தவறான கருத்துகளுடன் 'இந்தியாவின் தாலிபான்கள்' என்ற தலைப்பில் கட்டுரை எழுதிய ஜீவன் டி.வி யின் துணை ஆசிரியர் மன்னிப்பு கோரினார்

ஆக8:'இந்தியாவின் தாலிபான்கள்' என்ற தலைப்பில் ஒன் இந்தியா செய்திகளில் ஜூலை 19, 2010 அன்று வெளியான என்னுடைய கட்டுரையை, டிபின் தாமோதரனாகிய நான், PFI-பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவிடம் இருந்து பெரும் அளவில் புகார்கள் வந்ததையடுத்து திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் தொண்டர்களை தாக்கியும் அவர்களின் உணர்ச்சிகளையும் இந்த கட்டுரை புண்படுத்தியதாகத் தெரிகிறது.

இந்தக் கட்டுரை மூலம் எந்த ஒரு அமைப்பையும் அவர்களின் நற்பெயரையும் புண்படுத்துவது எனது நோக்கமல்ல என நான் விளக்கம் கொடுக்க விருப்பப்படுகிறேன்.

இந்த கட்டுரை யாருடைய மனதையும் மற்றும் உணர்வுகளையும் பாதித்திருந்தால் அதற்காக நான் உளப்பூர்வமாக மன்னிப்பு கேட்கிறேன்.

ஒன் இந்தியா நியூஸின் பத்திரிக்கையாளனாகிய நான் PFI யிடம் இருந்து எதிர்மறையான கருத்துகள் வந்தவுடன் குடிமக்களின் பத்திரிக்கையாளனாகிய நான் அந்தக் கட்டுரையை ஒன் இந்தியா செய்திகளிலிருந்து நீக்கிவிட்டேன்.

இப்படிக்கு,
டிபின் தாமோதரன்

கருத்துகள் இல்லை: