வியாழன், 19 ஆகஸ்ட், 2010

சென்னையில் ரமலான் தொடர் சொற்பொழிவு

இஸ்லாமிய பிரச்சாரப் பேரவையின் சார்பாக மண்ணடியில் உள்ள தமுமுக தலைமையம் அருகே ஆயிஷா பேலஸில் ரமலான் மாத தொடர்சொற்பொழிவு நடைபெற்று வருகின்றது.

அல்குர்ஆனின் அற்புத வசனங்கள் என்ற தலைப்பில் என்ற தலைப்பில் நடைபெற்று வரும் இந்த தொடர்சொற்பொழிவில் முதன் மூன்று நாட்கள் மௌலவி. முஜிபுர் ரஹ்மான் உமரி உரையாற்றினார். தினமும் இரவு 10 மணி முதல் 11 மணி வரையிலும் நடைபெற்று வரும் இந்த தொடர்சொற்பொழிவை கேட்பதற்காக நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இந்த தொடர்சொற்பொழிவில் காயல்பட்டிணம் ஆயிஷா சித்திகா மகளிர் கல்லூரின் முதல்வர் அப்துல் மஜித் மஹ்லரி, இலங்கையைச் சேர்ந்த மவ்லவி. முபாரக் மதனி ஆகியோர் இன்ஷா அல்லாஹ் உரையாற்ற உள்ளார்கள்.


கருத்துகள் இல்லை: