வியாழன், 19 ஆகஸ்ட், 2010

அயோத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கு நரசிம்மராவ் முக்கிய பங்காற்றினார்- அசோக் சிங்கால்

ஹைதராபாத்,ஆக19:அயோத்தியில் பாப்ரி மஸ்ஜித் இருந்த இடத்தில தற்காலிகமாக ராமர் கோவில் கட்டுவதற்கு மறைந்த முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் முக்கிய பங்காற்றியதற்தாக விஷ்வ ஹிந்து பரிஷத்தின் அகில உலகத் தலைவர் அசோக் சிங்கால் அவரைப் புகழ்ந்து பாராட்டியுள்ளார்.

மறைந்த முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் டிச-6 1992 அன்று அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை நிறைவேற்றினார் என பத்திரிக்கையாளர்களிடம் அவர் கூறினார்.

ராமர் கோவில் கட்டுவதில் நரசிம்மராவின் பங்களிப்பில் எந்தவித சந்தேகத்துக்கும் இடமில்லை அவரின் பங்கு மறைக்க முடியாதது. பிரதமர் நரசிம்மராவ் பாபரி மஸ்ஜிதை இடிப்பதை தடுக்கும் நடவடிக்கைகளில் எவ்வித முயற்சிகளும் எடுக்கவில்லை மேலும் உடனே அதே இடத்தில ராமர் கோவில் கட்டுவதையும் தடுக்கவில்லை.

பாபரி மஸ்ஜித் இருந்த இடத்தில மீண்டும் பள்ளியைக் கட்டித் தருவதாக வாக்குறுதி கொடுத்ததை நினைவில் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் அவர் ராமர் கோவில் கட்டுவதற்கும் அடிக்கல் நாட்டி உள்ளார். மேலும் எல்லா ஹிந்துகளின் மனதிலும் இன்றும் நரசிம்மராவ வாழ்கிறார். என்றும் அசோக் சிங்கால் கூறினார்.

ராமர் கோவில் கட்டுவதற்கான நடவடிக்கைகள் அமைதியான முறையில் மேற்க் கொள்ளப்படும் "எங்களின் கனவான பெரிய இராமர் கோவில் கட்டுவதற்காக கையெழுத்து இயக்கம், பொதுகூட்டங்கள் மற்றும் யாகங்களும் தொடங்கப்படும்." என்றும் அவர் கூறினார்.

"அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பது தான் எங்களின் நோக்கம். இதற்காக அனுமான் சக்தி விழிப்புணர்வு இயக்கத்தை நாங்கள் தொடங்கி இருக்கிறோம்.ஆகஸ்ட் 16 ம் தேதி முதல் கிராம, தாலுகா, மாவட்ட அளவில் விழிப்புணர்வு இயக்கங்கள் நடத்தப்பட்டு மக்களுக்கு தெரியப்படுத்துவோம்.

இது தொடர்பாக நாடு முழுவதும் ஆயிரம் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். நாங்கள் தொடங்கியுள்ள அனுமான் சக்தி விழிப்புணர்வு இயக்கம் தேசிய அளவில் நடைபெறும். இதன் மூலம் இந்துக்கள் விழிப்புணர்வு பெறுவார்கள். இந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும்

இந்துக்கள் எப்போதும் அமைதியையே விரும்புகிறார்கள். அயோத்தியில் இன்னும் ஓரிரு ஆண்டுக்குள் ராமர் கோவில் கட்டப்படும். இதற்காக நாங்கள் பாஜகவை சார்ந்து இருக்கவில்லை.

பேச்சுவார்த்தை மூலமோ சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு போட்டோ இந்தப் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காது.

நாடாளுமன்றத்தில் அனைத்து கட்சியினரும் ஒன்று சேர்ந்து ராமர் கோவில் கட்டுவது குறித்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்." என்றார்.

கஷ்மீர் பிரச்சினையைத் தீர்க்க கஷ்மீருக்கு சுயாட்சி வழங்குவதற்காக பிரதமர் மன்மோகன்சிங் எடுக்கும் நடவடிக்கைகளை அவர் கண்டித்தார்.

"ஜம்மு-கஷ்மீருக்கு சுயாட்சி வழங்குவது பேரழிவுகளை உண்டாக்கும். காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி மேலும் கஷ்மீருக்கு சிறப்ப்பு அந்தஸ்து வழங்கும் காஷ்மீருக்கான சட்டத்தின் 370 வது பகுதியையும் நீக்க வேண்டும்" என்றும் அவர் கூறினார்.

எல்லையோரப் பகுதிகளில் வாழும் ஹிந்துக்கள் வார்த்தைகளால் கூற முடியாத அளவு துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள் மேலும் நான்கு லட்சம் ஹிந்துக்கள் ஜம்மு-கஷ்மீர் பகுதியில் இருந்து வெளியேறிவிட்டதாகவும் அவர் கூறினார்.

எல்லைப் பகுதிகளில் ஊடுருவல்களை தடுக்க இராணுவ கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை: