ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010

ஈரானின் அணுசக்தி ரியாக்டர் உடனடியாக செயல்படத் துவங்கும்

மாஸ்கோ,ஆக,14:ஈரானின் முதல் அணுசக்தி ரியாக்டரின் செயல்பாடு அடுத்தவாரம் துவங்கும் என ரஷ்யா அறிவித்துள்ளது.

ரஷ்யன் ஸ்டேட் அட்டாமிக் கார்ப்பரேசனில் நிறுவப்பட்டுள்ள புஷ்ஹர் ரியாக்டரில் எரிபொருள் நிரப்புவதற்கான பணியை பொறியாளர்கள் உடனடியாக துவங்குவார்கள்.

ஆறுமாதம் முன்பே ரியாக்டர் செயல்படுவதற்கு தயாராக இருந்தது. 1992 ஆம் ஆண்டில்தான் ஈரானில் அணுசக்தி நிலையம் நிறுவ ரஷ்யா உதவத் துவங்கியது. 1974 ஆம் ஆண்டில் ஜெர்மனியின் உதவியுடன் இதற்கான முயற்சிகள் துவங்கிய பொழுதிலும், 1979 ஆம் ஆண்டு ஈரான் புரட்சியைத் தொடர்ந்து இத்திட்டம் நிறுத்திவைக்கப்பட்டது. பின்னர் ரஷ்யாவின் உதவியுடன் துவங்கிய அணுசக்தி ரியாக்டர் நிர்மாணம் 2007 ஆம் ஆண்டில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் வேகமாக நடைபெற ஆரம்பித்தது. இந்தமாதம் 21 ஆம் தேதி ரியாக்டரில் எரிபொருள் நிரப்பப்படும் என கார்ப்பரேசன் செய்தித் தொடர்பாளர் ஸெர்ஜி நோஸிக்கோவ் தெரிவித்துள்ளார்.

இத்துடன் ஈரானின் செறிவூட்டல் நெருக்கடிக்கு ஏறக்குறைய தீர்வாக அமையுமென்று எதிர்பார்க்கலாம். சர்வதேச அளவில் ஈரான் தனிமைப்படுத்தப்பட்ட சூழலுக்கிடையில் அபூர்வ சாதனை இது என ஈரான் மக்கள் கருத்துத் தெரிவித்ததாக பி.பி.சி கூறுகிறது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

கருத்துகள் இல்லை: