(Citizens for Justice and Peace) CJP இவ்வமைப்பின் பொதுச் செயலாளர் டீஸ்ட்டா செடல் வாட் கூறுகையில் "காவல்துறை கண்காணிப்பு அறையில் இருந்து தற்போது கிடைத்துள்ள ரிப்போர்ட்டின்படி பிப்ரவரி 2002 இல் காலை 11 மணியில் இருந்து மாலை 3 மணிவரை முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து அகமதாபாத் காவல் துறை கண்காணிப்பாளர் பி.சி.பாண்டேவிற்கு 15 தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளது. இதே நேரத்தில் தான் நரோடா பாட்டியா, குல்பர்க் சொசிட்டி மற்றும் அகமதாபாத்தின் பல இடங்களிலும் கொடூரமான படுகொலைகள் நடத்தப்பட்டுள்ளது." என்றார்.
டீஸ்ட்டா செடல் வாட்டின் கருத்துப்படி தொடர்ச்சியான தொலைபேசி அழைப்புகள் வருவதற்கு இரண்டு காரணங்கள் தான் இருக்கும். "ஒன்று முதலமைச்சர் அகமதபாத்தில் காவல்துறையை அவசராமக செயல்பட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர கேட்டு இருக்க வேண்டும் இல்லையெனில் இனப்படுகொலை தொடர்ந்து நடப்பதை அனுமதிக்கும் வகையில் கலவரக் குமபல்களை சுதந்திரமாக செயல்படவிட்டு அவர்களை கலைக்கும் நடவடிக்கையில் மெதுவாக செயல்படக் கூறி இருக்க வேண்டும். ஆகவே நானாவதி ஷா கமிசன் உண்மையை வெளிக்கொண்டு வரும் முன் காவல்துறை கண்கானிப்பாளர் மற்றும் மற்றும் பிற காவல்துறை அதிகாரிகளை விசாணை செய்ய வேண்டும்" எனக் கேட்டுள்ளார்.
CJP குழு "மாநில காவல்துறை ஆணையர் கே.சக்ரவர்த்தி, பாண்டே முன்னால் துணை காவல்துறை ஆணையர் M.K.தண்டன், உதவி காவல்துறை ஆணையர் P.B கோண்டியா மற்றும் ஓய்வுப் பெற்ற காவல்துறை ஆணையர் R.B.ஸ்ரீகுமார் ஆகியோரின் மீது மீண்டும் புதிய விசாரணை மேற்க்கொள்ள வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும் அவர், காவல் துறை அதிகாரிகளுடனான விசாரணை விவாதங்களை விசாரணை கமிஷ்னர் கேட்க வேண்டும் என எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.
பிப்ரவரி 27ம் நாள் மாலை நரேந்திர மோடி கோத்ராவில் ரயில் எரிந்த இடத்தில் பார்வையிட்டுக் கொண்டு இருக்கையில்,அதே நேரத்தில் முதலமைச்சர் அலுவலகத்தில் பணி செய்யும் 6 மூத்த அதிகாரிகள் நரோடா-பாட்டியா மற்றும் மேகனி நகர் பகுதியில் இருந்ததாக மொபைல் போன் பதிவுகள் காட்டுகின்றன. என்றும் டீஸ்ட்ட செடல்வாட் கூறினார்.
முதலமைச்சர் அலுவலக அதிகாரிகள் நரோடாவில் என்ன செய்து கொண்டிருந்தனர். அடுத்த நாள் கலவரத்திற்கு திட்டம் தீட்டுக் கொண்டிருந்தனரா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக