திங்கள், 9 ஆகஸ்ட், 2010

சொராஹ்புதீன் வழக்கு: மாஜி குஜராத் டிஜிபி ஓ.பி. மாத்தூர் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

காந்திநகர்,ஆக8:சொராஹ்புதீன் போலி என்கவுன்டர் வழக்கில், குஜராத் மாநில முன்னாள் டிஜிபி ஓ.பி.மாத்தூர் சிபிஐ விசாரணைக்கு ஆஜரானார்.

சொராஹ்புதீன் வழக்கை குஜராத் சிஐடி விசாரித்து வந்தபோது அந்த அமைப்பின் தலைவராக இருந்தவர் மாத்தூர்.

அவரை விசாரணைக்கு வருமாறு கூறி சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது. இதையடுத்து இன்று மாத்தூர் விசாரணைக்கு ஆஜரானார்.

சிஐடி பிரிவு தலைவராக இருந்த மாத்தூர் பின்னர் அகமதாபாத் கமிஷனராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் டிஜிபி பதவிக்கு உயர்ந்து ஓய்வு பெற்றார். தற்போது குஜராத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ரக்ஷா பல்கலைக்கழகத்தின் தலைமை பொறுப்பை வகித்து வருகிறார்.

கருத்துகள் இல்லை: