திங்கள், 23 ஆகஸ்ட், 2010

ராமர்கோவில் பிரச்சினையை நாங்கள் கைவிடவில்லை: பாஜக

சிம்லா,ஆக23:ராமர் கோவில் பிரச்சினையை நாங்கள் கைவிடவில்லை. அதை மீண்டும் கையில் எடுப்போம். ராமர் கோவிலை கட்டுவோம் என்று பாஜக பொதுச் செயலாளர் கல்ராஜ் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

பாஜக பொதுச் செயலாளர் கல்ராஜ் மிஸ்ரா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
"அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பது எங்கள் கொள்கை. இது தொடர்பாக மக்களுக்கு நாங்கள் உறுதியளித்துள்ளோம். ராமர்கோவில் பிரச்சினையை நாங்கள் கைவிட வில்லை.அதை மீண்டும் கையில் எடுப்போம். ராமர் கோவிலை கட்டுவோம்.

மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் கையில் எடுப்போம்.

கஷ்மீரில் நடக்கும் வன்முறைக்கு பின்னால் சதி இருக்கிறது. கஷ்மீருக்கு சுயஆட்சி அதிகாரம் வழங்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.அப்படி செய்தால் அது நாட்டுக்கே பெரும் ஆபத்தை ஏற்படுத்தும்." இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை: