
கல்வி உரிமைச்சட்டம் மதரஸாக்களுக்கு பாதகமாக மாறாது என்றும், இதனை தெளிவுப்படுத்தும் வழிகாட்டுதல் வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
கல்வி உரிமைச்சட்டம் தொடர்பாக இந்தியா இண்டர்நேசனல் செண்டரில் வைத்து நடந்த மாநாட்டில் உரை நிகழ்த்தினார் அவர். கல்வி உரிமைச்சட்டம் மதரஸாக்களை பாதிக்குமென்ற சந்தேகங்களை அகற்ற நடவடிக்கையை மேற்கொள்ள சில முஸ்லிம் அமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்தன.
"சட்டத்திருத்தம் கொண்டுவர காலதாமதம் ஏற்படும். ஆனால் வழிகாட்டுதல் வெளியிட உடனடியாக இயலும்" என அமைச்சர் தெரிவித்தார்.
மதரஸாக்களை பாதுகாப்பதற்காக ஒரு வழக்கறிஞர் என்ற நிலையில் வேண்டுமென்றால் அதற்காக வாதாடவும் தான் தயார் என அவர் தெரிவித்தார். மதரஸாவின் செயல்பாடுகளில் அரசு தலையிடும் பேச்சுக்கே இடமில்லை என்றும் அவர் தெளிவுப்படுத்தினார். கல்வி உரிமைச்சட்டம் புரட்சிகரமானதும், முஸ்லிம்களுக்கு மிகவும் பயன் தரத்தக்கதாக இருந்தாலும், மதரஸாக்கள் விஷயத்தில் ஆதரவானதல்ல என்பது மாநாட்டின் பொதுக்கருத்தாக இருந்தது.
ஆனால் இதுக்குறித்து கவலைப்படத் தேவையில்லை என கபில் சிபல் தெரிவித்தார். மதக்கல்வி நிறுவனங்களுக்காக சிறப்பு போர்டு உருவாக்கவேண்டுமென்ற மாநாட்டு தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளவியலாது என தெரிவித்த அமைச்சர் சிறுபான்மையினருக்கு பல்கலைக்கழகங்கள் நிறுவ வாய்ப்பு அளிக்க தேசிய சிறுபான்மை கல்விக் கமிஷனின் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படும் எனவும் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக