திங்கள், 30 ஆகஸ்ட், 2010

தெலுங்கானா மாநிலம் உருவானால் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு -டி.ஆர்.எஸ்

ஹைதராபாத்,ஆக29:தெலுங்கானா மாநிலம் உருவானால் முஸ்லிம்களுக்கு 12 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியின் தலைவர் கெ.சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.

ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார்.முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்கு இடஒதுக்கீடு அவசியமாகும்.தெலுங்கானா மாநிலம் உருவாக்கவேண்டுமென்பதே டி.ஆர்.எஸ்ஸின் லட்சியம். தெலுங்கானா பகுதியில் உண்மையான மதசார்பற்றத் தன்மையை மீண்டும் கொண்டுவருவோம். என சந்திரசேகர் ராவ் தெரிவித்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

கருத்துகள் இல்லை: