செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

மேற்குவங்காளத்தில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு ஒ.பி.சி சான்றிதழ்

கொல்கத்தா,ஆக31:முஸ்லிம் சமுதாயத்தில் ஏழ்மை நிலையிலிலுள்ள முஸ்லிம்களுக்கு மேற்குவங்காள அரசு கொண்டுவந்துள்ள இடஒதுக்கீடு சட்டத்தின்படி அம்மாநிலத்தின் ஒன்றரைகோடி அளவிலான முஸ்லிம்களுக்கு ஒ.பி.சி சான்றிதழ் வழங்கப்படும்.

இதுத்தொடர்பான தீர்மானத்தை அமைச்சரவை அடுத்த மாதம் 22 ஆம் தேதி மேற்கொள்ளும். இவ்விஷயத்தில் கொள்கை ரீதியான முடிவு எடுக்கப்பட்டுவிட்டதாக முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா தெரிவித்தார்.

கொல்கத்தாவில் ஹஜ் ஹவுஸை திறந்துவைத்து உரைநிகழ்த்திய அவர். அட்டவணைப்படுத்தப்பட்ட ஜாதிப்பிரிவினர்களை இடஒதுக்கீட்டின் கீழ் கொண்டுவரும்பொழுது முஸ்லிம்கள் போன்ற சிறுபான்மை பிரிவினரை ஏன் கொண்டுவரக் கூடாது என அவர் கேள்வி எழுப்பினார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

கருத்துகள் இல்லை: