சனி, 28 ஆகஸ்ட், 2010

சட்ட மேற்படிப்புத் தேர்வில் காப்பியடித்த 5 நீதிபதிகள் இடைநீக்கம்

ஹைதராபாத்,ஆக27:சட்ட மேற்படிப்புக்காண தேர்வில் காப்பி அடித்தபோது கையும் களவுமாக பிடிபட்ட நீதிபதிகள் 5 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

ஆந்திரத்தில் எல்எல்எம் (சட்ட மேல்படிப்பு) படிப்புக்கான முதலாமாண்டு தேர்வு கடந்த 24-ம் தேதி பல மையங்களில் நடைபெற்றது.

இதில் வாரங்கலில் உள்ள காகதீய பல்கலைக்கழக அரசினர் கல்லூரியிலும் மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் ஆந்திர மாநிலத்தில் கீழ்நிலை நீதிமன்றங்களில் பணியாற்றும் நீதிபதிகள் சிலரும், பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வுக்காக சட்ட மேல்படிப்புத் தேர்வை எழுதினர்.

அப்போது பல்கலைக்கழக கட்டுப்பாட்டாளர் தலைமையிலான குழுவினர் திடீர் சோதனை நடத்தினர். இதில் ஒரு நீதிபதி, தனது விடைத்தாளின் கீழே சட்டப் புத்தகத்தை வைத்து காப்பியடித்தபோது கையும் களவுமாக பிடிபட்டார். பின்னர் அந்த அறையில் தேர்வு எழுதிய நீதிபதிகள் சிலரிடம் சோதனையிட்டபோது ஏராளமான "பிட்' பேப்பர்கள் (புத்தகத்திலிருந்து கிழிக்கப்பட்ட பக்கங்கள்) கைப்பற்றப்பட்டன. மேலும் வழக்கறிஞர்கள் இருவர் காப்பியடித்தபோது பிடிபட்டனர்.


இவை அனைத்தும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் தேர்வு அறையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

கருத்துகள் இல்லை: